பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 47. தெரிந்து செயல்வகை, குறள் எண்: 461 & 470.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 461:- அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள் :-(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 470:- எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

பொருள் :- தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
ஒருவன் மேற்கொள்ளும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறத்தினைக் கூறுவது தெரிந்து செயல் வகை அதிகாரம்... தக்கவர்களைக் கலந்து தொடங்கி தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் துணைக்கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறது .

தெரிந்து செயல்வகை
தெரிந்து செயல்வகை- அதிகாரம் முயற்சியைத் திட்டமிடுதல் பற்றியது. இது அளவில் பெரிய முயற்சி தொடர்பானது போன்று தோன்றினாலும்,, போர், தொழில், வாணிகம்- போன்ற சிறிய, பெரியதான எந்தச் செயலுக்கும்- பொருந்தும்படியே அமைந்துள்ளது.
அழிவு, நன்மை, நீண்டகால பய்ன் இவற்றை ஏண்ணி ஒரு செயலை மேற்கொள்க; திறமையரைத் துணை கொள்க; கைமுதலை இழக்க நேரும் சூதாட்டக் கூறுகள் கொண்ட முயற்சி தவிர்க்க; தமக்குத் தெளிவானதைச் செய்க; பதறாமல் செயல் ஆற்றுக; தொடர்ந்து கண்காணித்து வருக; பொறுப்பற்ற வகையில் முயற்சி தொடங்கற்க; முறையுடன் செய்க, வெறும் ஆள்பலம் நலம்பயவாது;; பங்கேற்பவர்க்கு உரிய ந்ன்மை செய்க; சமூகம் எள்ளாச் செயல் செய்க, என்பன இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
 

malar02

Well-Known Member
எதிலும் சுய லாபம் கருதி மட்டும் இறங்கிடக்கூடாது என்பதை சொல்கிறார் அழகா
nanri
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top