அதிகார விளக்கம் :-
செயற்கரிய செய்யும் பெரியாரைத் தமக்குத் துணைவர்களாக இருக்கச் செய்து கொள்ளுதலைச் சொல்லும் அதிகாரம். பெரியார் என்றது அறிவிலும், ஆயாய்ச்சியிலும் அனுபவத்திலும், ஆற்றலிலும் மேம்பட்டவர்களை குறித்தது. இவர் குற்றங்கள் நிகழா வண்ணம் காப்பர். பொதுத் தன்மையில் பலருக்கு உரியதாகும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்கள் மன்னன் எனக் குறிப்பிட்டதால் சிறப்பாக ஆட்சியாளருக்குக் கூறப்பட்டுள்ளன. பெரியாரைத் துணைக் கொள்ளுதலின் சிறப்பினையும் பயனையும் கூறி அவரைத் துணைக் கொள்ளாத வழி வரும் குற்றத்தினையும் எடுத்துச் சொல்கிறது.