கிட்டத்திட்ட கடந்த 10 updates- க்கு நான் சர்வானந்த் பெயரை சதானந்த்- ன்னு தப்பா ஞாபகம் வெச்சு refer பண்ணி இருக்கேன். இன்னிக்கி தான் அதையே கவனிக்கிறேன். கதை நடையை அப்பிடி ஆழமா உள்வாங்கி இருக்கேன் போல. (Hero and Villain ரெண்டு பேரும் குடுத்த
disturbance - ஓட பின்விளைவுன்னு நினைக்கிறன்.)
நாலு எபிசொடவே இந்த சீதா மற்றும் அவங்களோட பிள்ளைங்களால கதையில் ஒரே கலவர நிலவரதான். So
Mr.பரமேஸ்வரன் நீங்க உங்க ரேகாவோட இன்னும் கொஞ்சம் கூடுதலா romance பண்ணி இருந்தாலும் எங்களுக்கு நல்லா தான் இருந்துருக்கும். என்ன செய்யறது அதுக்குள்ள முறைச்சு பார்த்து ரேகா உங்களை off பண்ணிட்டாங்க
. அழகான couple.
பரமேஸ்வரனுக்கு ரேகா சந்தேகப்படுற மாதிரி முன்னாடியே சர்வா விஷயம் தெரிஞ்சுருக்குமோ?
ஆமாம், சர்வாக்கு பாட்டு பாடுறதைத்தவிர வேற
profession-ம் இருக்கா? இல்லை late night - ல வேலை இருக்குன்னு சொல்லறானே- song recording - ஆ நடக்குது? சொல்லுற பொய்யை நம்பற மாதிரி கூட சொல்லத் தெரியலையே.
சர்வா தீக்ஷிதாவை சரியா புரிஞ்சு வெச்சுருக்கறதெல்லாம் சரிதான். ஆனால் ஒன்னை மறந்துட்டான். தீக்ஷிதா சத்யம் செஞ்சு குடுத்தப்ப அவளுக்கு சீதா பார்த்திருந்த பையன் பீஷ்மன் தானே. அப்ப எப்படி தீக்ஷிதாக்கு இவனை விட better partner அமைஞ்சுருக்கும். கடைசியில் பீஷ்மன் co-operate பண்ணினதால தானே அவங்க கல்யாண பேச்சு சீக்கிரம் cancel ஆச்சு. இல்லைனா ஜெய் ஏதாவது செய்யற வரைக்கும் பீஷ்மன் தானே தீக்ஷிதாவை கல்யாணம் பண்ணப்போறதா இருந்துருக்கும். இதை சர்வா யோசிச்சு இருக்கணும் தானே. அதுக்காகவாவது அவனே இதைப்பற்றி ரேகா-பரமேஸ்வரன் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமோ.
ரேகா அருமையான கேள்விகள் கேட்டாங்க தீக்ஷிதாகிட்ட. இதைத்தானே அன்று ஸ்ரீகாவும் கேட்டா. Yet தீக்ஷிதாவோட பதில் ஒத்துக்கவே முடியலை. இவளோட அம்மா எந்த விதத்தில் நல்ல அம்மா defnition - க்கு fit ஆகறாங்க? அப்ப ரேகாவை என்னனு சொல்லுவா? இதை நான் சீதா தீக்ஷிதா - சர்வா காதலை ஒத்துக்காததால சொல்லலை. இவளை சுயநல எண்ணத்தோட பீஷ்மனை கல்யாணம் செய்ய சொல்லி அவளை நடத்திய விதம், முன்னாடி college days - ல அவளோட விருப்பங்களுக்கு தடை சொன்னது - இப்படிபட்ட செயல்களை வெச்சு தான் சொல்கிறேன்.
ரகுவரன் எப்படா chance கிடைக்கும்னு காத்து இருந்து கூடை ஐஸை ரேகா தலையில் கொட்டிட்டாரே. Smart தான்.
ஜெய் ரேகா அத்தை கிட்ட பேச வேண்டியது தானே இப்ப. எது தடுக்குது உன்னை? எப்பவுமே - (most probably) தன் மகள் தன்னோட புருஷனோட எப்படிப்பட்ட image - ஐ அவளோட பெற்றோற்கு காட்டுகிறாளோ அதுக்கு தகுந்த மாதிரி தான் பொண்ணைப் பெற்றவங்க மாப்பிள்ளையை நடத்துவாங்க. அவன் சரியில்லைன்னா வாயளவில் தான் மரியாதை இருக்கும். மனதளவில் மதிப்பிருக்காது. அதை நீ நல்லா மனசுல வெச்சுக்கோ ஜெய்.