உதயா
Well-Known Member
பாவனாவ எந்த அளவிற்கு திட்றீங்களோ அதே அளவை விஜய்க்கும் கொடுக்கலாம் தப்பே இல்ல....
View attachment 11482
உங்க விஜய் காதல் தெய்வீக காதலோ...? எனக்கு அப்படியெல்லாம் தெரியவே இல்லை...
View attachment 11483
தங்கைக்காக மட்டும் ஓடி வரத் தெரியுது... மனைவிக்காக ஈகோவை விட முடியல....
View attachment 11484
உங்கள் காதல் தெய்வீக காதலாம்... சத்தமா சொல்லிடாதீங்க... உலகமே கைகொட்டி சிரிக்கும்...
View attachment 11487
எவ்.........ளோ திமிர் இருந்தால் அவளோட வாழ்ந்துட்டு... என்னமோ அவள் கஷ்டத்துல தாலி கட்ற மாதிரி ஸீன் போட்ருக்க...
View attachment 11485
பாவனாகிட்ட இத எதிர்பார்க்கவே இல்லை... அவங்க அம்மா பற்றி பேசும் பேச்சுக்களை பழகியவள் இந்த மாதிரி நடந்துகொள்ளவே மாட்டாள்... எனக்கென்னமோ எழுத்தாளர் பண்ற சூழ்ச்சி மாதிரி தெரியுது...
View attachment 11486
நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் விஜய் ஆர்மி தான். விஜய் அவனோட அப்பாவுக்கு பயந்து அவர் சொல்ல மீராதவனா இருந்தால் இவள் இப்படி செய்யலாம் அதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் விஜய் அப்படி இல்லை அவளுக்காக எல்லாரையும் எதிர்த்து நின்றான்.
விஜய் ரமணன் கிட்ட எவ்வளவோ கேட்டானே ஒரு வார்த்தை சொல்லல அவனால் முடிஞ்ச அளவுக்கு தேடி பார்த்துட்டு தான் அவள் மேல் கோபத்தில் போனான். அவளாக தான் போனாள் அப்போ அவளே திரும்பி வரட்டும்.
தங்கச்சிக்காக வந்தான் என்றால் அவ அண்ணனை நம்பி தன்னோட பிரச்சினை சொன்னால் உதவி செய்ய வந்தான். ஆனால் பாவனா அவனை நம்பல. இப்பவும் விஜய் பாவனா பத்தி தெரிஞ்சதும் தங்கச்சி கல்யாணத்தை கூட தள்ளி வச்சுட்டு அவளை தேடி தான் கிளம்புகிறான். பாவனாவை விட அவனோட குடும்பம் முக்கியமானது இல்லை அவனுக்கு. பாவனாவை யாருக்காகவும் விட்டு கொடுக்கவும் மாட்டான்.
விஜய் சுயநினைவோட அவள் கூட வாழ்ந்து இருக்க மாட்டான் அப்படி இருந்தால் அவள் எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு இருப்பான். அரங்கநாதன் மிரட்டி இருந்தாலும் இவள் பயப்பட அவசியம் இல்லை ரமணன் அவளுக்கு ஆதரவாக தான் இருந்தார். ரமணனும் அரங்கநாதனுக்கு சமமான செல்வாக்கு உள்ளவர் தான். இவள் விஜய் கூட தான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்தால் அரங்கநாதன் இல்ல யார் மிரட்டி இருந்தாலும் ரமணன் அவளுக்கு துணையாக இருந்து இருப்பார். பாவனாக்காக பேசவோ துணையாகவோ யாரும் இல்லாமல் தனியாக நின்னு அரங்கநாதன் மாதிரி ஆளை எதிர்க்க முடியாம தலைமறைவாக வாழ்ந்தால் நியாயம் இருக்கு ஆனால் பாவனாவுக்கு அந்த அவசியம் இல்லையே.
இப்போது அவள் குழந்தைக்கும் அதே நிலை தான். இவளுக்காவது ரமணன் அவரோட மகள் என்பதை எங்கேயும் மறைக்கல. பிறந்ததில் இருந்தே கூடதான் இருக்கிறார். ஆனால் இவளோட குழந்தைக்கு அப்பாவோட முகத்தை காட்டாமலே வளர்க்கிறார் அந்த அப்பனுக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்கிறது தெரியாமல் மறைச்சாச்சு இப்போது இந்த குழந்தைக்கு சமூகத்தில் என்ன பெயர் கிடைக்கும். இவளுக்காவது அப்பா என்று அடையாளம் காட்ட ஒருத்தர் இருந்தார் ஆனால் அவளோட குழந்தைக்கு அப்படி யாருமே இல்லாமல் வளர்க்கிறாள்.
இவங்க பிரச்சினையில் குழந்தையை ஏன் தண்டிக்கனும்.
விஜய் குடும்பம் எதிர்க்கும் தெரிஞ்சு தான் காதலிச்சா கல்யாணம் செய்தால் பிறகு என்ன. அவங்க என்ன சொல்லி இருந்தாலும் விஜய் விட்டுட்டு போய் இருக்கக்கூடாது. அவளை தப்பாக பேசினவங்க முன்னாடி கூட சேர்ந்து வாழ்ந்து காட்டிருக்கணும். நாமே தேடினால் கூட இப்படி ஒரு பொண்ணை கட்டி வச்சிருக்க முடியாதுன்னு விஜய் குடும்பமே சொல்கிற மாதிரி வாழ்ந்து காட்டிருக்கணும். பாவனாவை அவளுக்காகவே ஏத்துக்க மாதிரி நல்லபடியாக வாழ்ந்துருக்கலாம். இப்போது குழந்தை விஜயோடது என்று யாருமே நம்பல என்றால் இவ என்ன செய்வா கவலை படாமல் வாழ்ந்துடுவாங்க. இவளோட பிறப்பை வச்சு தான் இவ குழந்தை பிறப்பையும் இந்த சமூகம் முடிவு செய்யும்.
நீங்கள் சொல்லுற மாதிரி விஜய் பக்கம் தப்பே இருந்தாலும் ஊர் முன்னாடி அவனுக்கு எந்த அவமானமும் நடக்காது. ஆனால் பாவனா தப்பே செய்யலை என்றாலும் அவள் திருமணம் ஊருக்கே தெரியாதே போது இப்படி தலைமறைவாக வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டா அந்த குழந்தையோட நிலை இவளை விட கீழானது. தன்னோட குழந்தைக்காகவாது அவதான்விஜய் குடும்பத்தை எதிர்த்து நின்றுக்கணும். ஆதரவுக்கு விஜய் ரமணன் இருக்கும்போது எதுக்கு பயம்.
வைஷ்ணவி வேண்டும் என்றால் திட்டுங்க அவதான் பாவனா அண்ணனை கட்டணும் என்பதற்காக புதுசா அண்ணி முறை கொண்டாடிகிட்டு இருக்கா
Last edited: