SINDHU NARAYANAN
Well-Known Member
இன்னாது! குழந்தையா?
இது எப்ப நடந்துச்சுன்னே தெரியலையே...
Last edited:
நீங்கள் கதையை ஒழுங்கா படிக்கலன்னு நினைக்கிறேன் இன்னொரு முறை படிங்கAdapaavi summa iruntha ponna ammavakitu née abroad pona ennada manusan née.nice dear
அவனுக்கு அம்மை போட்டுருந்தது அப்போது நடந்ததா. ஆனாலும் பாவனா விஜய்க்கு செய்கிற துரோகத்தோட எண்ணிக்கை அதிகம் ஆகிட்டே இருக்கு.
ஒருத்தன்கிட்ட அவனோட குழந்தை பத்தி எதுவும் சொல்லாமல் பெத்து வளர்ப்பாளாம் அதை அவனாகவே கண்டுபிடிச்சு போய் அவளை ஏத்துக்கணுமா.
இனி என்ன விஜயோட தெய்வீக காதல் பாவனா செய்ததை மன்னிச்சு ஏத்துக்கும். இவளுக்காக குடும்பம் நட்பு எல்லாவற்றையும் தூக்கி எறிஞ்சுட்டு சொந்த நாட்டை கூட விட்டுட்டு எங்கோ போய் அனாதை மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கிறான் அவனுக்கு பாவனா நல்ல பரிசு கொடுத்திருக்கிறார்.
யார் மிரட்டி இருந்தாலும் விஜய்க்கு அவள் செய்தது மிகப் பெரிய துரோகம் தான்.
தகுதி இல்லாத ஒருத்தியை காதலிச்சதுக்கு விஜய்க்கு இன்னும் என்ன என்ன நல்லது எல்லாம் நடக்க போகுதோ தெரியல.
விஜய்க்கு அவன் குழந்தை பத்தி சொல்லாதவள் அவன் பெயரை எப்படி குழந்தைக்கு அப்பான்னு பயன்படுத்திக்கலாம். அவனுக்கே தெரியாத குழந்தைக்கு அவன் பெயர் மட்டும் இன்சியலா
வேணுமா. குழந்தைக்கு அப்பா பெயர் சொல்லாமலே வளர்த்து விடுவாளா அதுக்கு மட்டும் இவளுக்கு விஜய் தேவைபடுகிறானா.
ரமணன் இவளுக்கு செய்ததை விட மோசமான நிலையில் இவள் குழந்தையை வளர்த்துகிட்டு இருக்கிறாள்.
வைஷ்ணவி நல்ல வேலை செய்து இருக்கம்மா . எங்க இருந்துதான் உங்களுக்கு காதல் வந்து தொலையுதோ தெரியல தேவாவோட பேச்சு அருமை.