நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-16
மாடியில் இருந்து இறங்கியவன் போனை ராமனிடம் கொடுத்து கயலிடம் கொடுக்கச் சொன்னவன் அங்கிருந்த அந்த கயற்று கட்டுலில் படுத்தான்..........
போனை வாங்கிப் பார்த்தவள்........ அதில் தன் அப்பத்தாவின் எண் வரவும் மீண்டும் போனை அவனிடமே கொடுத்து
“பேசிக்கிட்டு இரு இந்தா வாரேன்” என்று கொல்லைப் புறம் சென்றவள் தன்முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி தண்ணீர் குடித்து தண்ணீரோடு அழுகையையும் முழுங்கினாள்............பின் போனை வாங்கியவள்......
“சொல்லுப்பத்தா..........”
“என்னத்தா......... நல்லாயிருக்கியா............”
“ம்ம்ம்........நான் நல்லாயிருக்கேன்ப்பத்தா.............”.
“என்னத்தா ஒன் குரலே ஒருமாதிரி இருக்கு.........”..
“ஒண்ணுமில்லப்பத்தா.............”என்று மீண்டும் பொங்கிவந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள்.....சிரிப்பை வரவழைத்தபடி............
“.ஒண்ணுமில்ல....... இங்கன தண்ணி புதுசா இருக்கா......அதுதான் எனக்கு ஒத்துக்கல............”.
“அப்புடியாத்தா.......... வேற ஒன்னும் பிரச்சனை இல்லயே........... அங்க ஒன்னைய எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்களா............”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல............ எல்லாரும் என்னைய நல்லா பாத்துக்குறாங்க........... அதவிடு எங்க வேற யாரு குரலையும் காணோம்............”
“அது ஒன்னுமில்லத்தா...........சாயங்காலத்துல இருந்து ஒன் நினப்பாவே இருந்துச்சா...... அதான் நம்ம மாரியாத்தா கோவிலுக்கு வந்தேன்............ ஒன்னோட குரலை கேட்டுட்டு தான் வீட்டுக்கு போகனும்னு இங்கயே உக்காந்துட்டேன்தா..........நான் வேணா நாளைக்கு உன்னைய பாக்க அங்கன ஒருஎட்டு வரவா........... நீ மறுவீட்டுக்கும் வரலை இந்தா ஆடியும் பொறந்துருச்சு அதுக்கும் வரமாட்டேங்குற........உங்க வீட்டுக்காரரு என்னமாச்சும் சாக்குபோக்கு சொல்லுறாரு..............வரவாத்தா..........”
“இல்ல....... இல்ல.......... இந்தவாரம் அவுகளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்........... .நாங்களும் கோயில் அங்க இங்கன்னு போறோம் .......கண்டிப்பா அடுத்த வாரம் வாறோம்........... அப்புடி நாங்க வல்லைனா நீவா........... சரியாப்பத்தா..........”.என்று மேலும் பத்து நிமிடங்கள் பேசியவள்.........போனை ராமனிடம் கொடுக்க............. அங்குதான் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர்.........
சாவித்திரி “ஏத்தா அப்பத்தாவ வரவேணாமுன்னு சொன்ன........”.
“இல்லத்தே..........அது இங்கவந்து இதெல்லாம் பாத்தா.............ஊரையே ரெண்டாக்கிரும்...” என்றபடி தன் கையிலும் காலிலும் ஏற்பட்ட காயத்தை காட்ட அப்போதுதான் கண்ணன் கயலின் காயத்தையே...........பார்த்தான்...........
அவளின் சிவந்த நிறத்துக்கும் அந்த காயத்துக்கும் அந்த இடமே கருஞ்சிவப்பாக மாறி இருந்தது.............தலையெல்லாம் கலைந்து அழுதுஅழுது முகமெல்லாம் சிவந்து பாக்க பாக்க கண்ணனுக்கு தன் மேலே வெறுப்பு வந்தது.........
ச்சி......ச்சி.....நானெல்லாம் மனுசன்தானா......அவனாவது..........நம்ம தம்பி........இவ இங்க வந்து பத்துநாளு இருக்குமா......... சும்மா படிச்சுக்கிட்டு இருந்த புள்ளய வம்புடியா கல்யாணம் பண்ணி இப்புடி போட்டு அடிச்சிருக்கமே........... அவுக வீட்டுல பாத்தா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க......இந்த மாதிரி குணம் தெரிஞ்சதாலத்தான் அந்த பொண்ணு என்னைய வேணாமுன்னு சொன்னுச்சுன்னு நினைக்கமாட்டாங்க.... இம்புட்டு காயம் இருக்கும்போதும் நம்மள இந்தபுள்ள காட்டிக்குடுக்கலயே................. .ச்சி....ச்சி.....எனக்கு ஏந்தான் புத்தி இப்புடி போச்சோ........ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இந்த புள்ளக்கிட்ட பேசுறது............சும்மாவே இந்த புள்ள நம்மகிட்ட பேச யோசிக்கும்.... என்று பலவாறு யோசித்து தன்னையே மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தான்............ அன்று இரவு ஒருவருமே சாப்பிடவில்லை..............
முத்து தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்திருக்க கயலோ அவரின் அருகில் படுத்தபடி உறங்கியிருந்தாள்............
“கண்ணா அந்த முத்துத்துல பாய விரிப்பா.......... பாய விரிச்சு இந்த புள்ளைய தூக்கி அதுல படுக்கப் போடு............. காலுல அடிபட்டதால மாடி ஏற இறங்க செரம்மா இருக்கும்...........”.
“ம்ம்ம் சரிம்மா.......”
என்றவன் பாயை விரித்து கயலை மெதுவாக தூக்கினான்....கை தவறுதலாக அவள் இடுப்பில் பட....ஸ்ஸ்ஸ்ஸ் என்று வேதனையில் முகத்தை சுருக்க.....மெதுவாக அவளை பாயில் கிடத்தியவன்.......... அவளின் காயங்களை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான்........... சிறுபிள்ளை போல தூக்கத்திலும் தேம்பிக் கொண்டிருந்தாள்........
தன் தாயிடம் வந்தவன்” அம்மா என்னைய மன்னிச்சுருங்க......... கோபத்துல என்ன பண்ணுறோம்முன்னு தெரியாம பண்ணிட்டேன்...... அப்பா இருந்திருந்தா இம்புட்டு கோபம் வந்துருக்குமான்னா தெரியல..........ஆனா இப்ப அப்பா இல்லாதவன்....... இந்த அண்ணன்காரனும் கல்யாணம்பண்ணவும் தம்பிகள கவனிக்காம தருதலையா விட்டுட்டான்னு ஊருக்குள்ள பேசுவாங்கன்னுதாம்மா.......என்ன பண்ணுறேன்னு தெரியாம பண்ணிட்டேன்.........” என்றபடி தன் தம்பியின் காயத்தை வருடிவிட...............
“அண்ணே.......... நான் பண்ணுனது தப்புதானே..............நீங்க என்னைய அடிச்சது ஒன்னும் தப்பு இல்லண்னே..............”
சாவித்திரியும்” விடு கண்ணா மனச போட்டுக் கொழப்பிக்காத..............அவனும் தப்பு செஞ்சான்ல......புறவு...... ஆனா மருமக தாம்பா.........பாவம்....... நான்கூட குறுக்க வர யோசிச்சேன்......ஆனா இந்தபுள்ள தாம்மேல விழுந்த அடியக்கூட தாங்கிக்கிட்டு நம்ம முத்துவ பிடிச்சுருக்கான்னா எம்புட்டு நல்ல பிள்ளயா இருக்கனும்.......அது மத்தவங்க மாதிரி சூதுவாது தெரியாம வளந்திருக்குப்பா பச்ச மண்ணா இருக்குப்பா......கடவுள் ஒனக்கு தங்கம் மாதிரி ஒரு பொண்டாட்டிய குடுத்திருக்கு.......... அத தொலைச்சிப்புடாம வச்சுக்கப்பா..........இனிமே யாரையும் கைநீட்டுற வேலை வச்சுக்காத.......”என்று தொடர்ந்து அறிவுரைகளை கூற...........முத்துவும் கண்ணனும் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்க ராமனும் வந்து தன் தாயின் மறுபுறம் அமர...........
“நீங்க எப்பவும் என்ன பிரச்சனை வந்தாலும் ஒத்துமையா இருக்கனும்பா..... .அண்ணன் ஒன்னு சொன்னாக்கா அதுல நல்லது மட்டும்தான் இருக்குமுன்னு புரிஞ்சு நடந்துக்கனும் புரியுதா............ சரி சரி........... போய் படுங்க..........” என்றவர் கயலின் மறுபுறம் வந்து படுத்தார்............
அத்தியாயம்-16
மாடியில் இருந்து இறங்கியவன் போனை ராமனிடம் கொடுத்து கயலிடம் கொடுக்கச் சொன்னவன் அங்கிருந்த அந்த கயற்று கட்டுலில் படுத்தான்..........
போனை வாங்கிப் பார்த்தவள்........ அதில் தன் அப்பத்தாவின் எண் வரவும் மீண்டும் போனை அவனிடமே கொடுத்து
“பேசிக்கிட்டு இரு இந்தா வாரேன்” என்று கொல்லைப் புறம் சென்றவள் தன்முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி தண்ணீர் குடித்து தண்ணீரோடு அழுகையையும் முழுங்கினாள்............பின் போனை வாங்கியவள்......
“சொல்லுப்பத்தா..........”
“என்னத்தா......... நல்லாயிருக்கியா............”
“ம்ம்ம்........நான் நல்லாயிருக்கேன்ப்பத்தா.............”.
“என்னத்தா ஒன் குரலே ஒருமாதிரி இருக்கு.........”..
“ஒண்ணுமில்லப்பத்தா.............”என்று மீண்டும் பொங்கிவந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள்.....சிரிப்பை வரவழைத்தபடி............
“.ஒண்ணுமில்ல....... இங்கன தண்ணி புதுசா இருக்கா......அதுதான் எனக்கு ஒத்துக்கல............”.
“அப்புடியாத்தா.......... வேற ஒன்னும் பிரச்சனை இல்லயே........... அங்க ஒன்னைய எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்களா............”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல............ எல்லாரும் என்னைய நல்லா பாத்துக்குறாங்க........... அதவிடு எங்க வேற யாரு குரலையும் காணோம்............”
“அது ஒன்னுமில்லத்தா...........சாயங்காலத்துல இருந்து ஒன் நினப்பாவே இருந்துச்சா...... அதான் நம்ம மாரியாத்தா கோவிலுக்கு வந்தேன்............ ஒன்னோட குரலை கேட்டுட்டு தான் வீட்டுக்கு போகனும்னு இங்கயே உக்காந்துட்டேன்தா..........நான் வேணா நாளைக்கு உன்னைய பாக்க அங்கன ஒருஎட்டு வரவா........... நீ மறுவீட்டுக்கும் வரலை இந்தா ஆடியும் பொறந்துருச்சு அதுக்கும் வரமாட்டேங்குற........உங்க வீட்டுக்காரரு என்னமாச்சும் சாக்குபோக்கு சொல்லுறாரு..............வரவாத்தா..........”
“இல்ல....... இல்ல.......... இந்தவாரம் அவுகளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்........... .நாங்களும் கோயில் அங்க இங்கன்னு போறோம் .......கண்டிப்பா அடுத்த வாரம் வாறோம்........... அப்புடி நாங்க வல்லைனா நீவா........... சரியாப்பத்தா..........”.என்று மேலும் பத்து நிமிடங்கள் பேசியவள்.........போனை ராமனிடம் கொடுக்க............. அங்குதான் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர்.........
சாவித்திரி “ஏத்தா அப்பத்தாவ வரவேணாமுன்னு சொன்ன........”.
“இல்லத்தே..........அது இங்கவந்து இதெல்லாம் பாத்தா.............ஊரையே ரெண்டாக்கிரும்...” என்றபடி தன் கையிலும் காலிலும் ஏற்பட்ட காயத்தை காட்ட அப்போதுதான் கண்ணன் கயலின் காயத்தையே...........பார்த்தான்...........
அவளின் சிவந்த நிறத்துக்கும் அந்த காயத்துக்கும் அந்த இடமே கருஞ்சிவப்பாக மாறி இருந்தது.............தலையெல்லாம் கலைந்து அழுதுஅழுது முகமெல்லாம் சிவந்து பாக்க பாக்க கண்ணனுக்கு தன் மேலே வெறுப்பு வந்தது.........
ச்சி......ச்சி.....நானெல்லாம் மனுசன்தானா......அவனாவது..........நம்ம தம்பி........இவ இங்க வந்து பத்துநாளு இருக்குமா......... சும்மா படிச்சுக்கிட்டு இருந்த புள்ளய வம்புடியா கல்யாணம் பண்ணி இப்புடி போட்டு அடிச்சிருக்கமே........... அவுக வீட்டுல பாத்தா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க......இந்த மாதிரி குணம் தெரிஞ்சதாலத்தான் அந்த பொண்ணு என்னைய வேணாமுன்னு சொன்னுச்சுன்னு நினைக்கமாட்டாங்க.... இம்புட்டு காயம் இருக்கும்போதும் நம்மள இந்தபுள்ள காட்டிக்குடுக்கலயே................. .ச்சி....ச்சி.....எனக்கு ஏந்தான் புத்தி இப்புடி போச்சோ........ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இந்த புள்ளக்கிட்ட பேசுறது............சும்மாவே இந்த புள்ள நம்மகிட்ட பேச யோசிக்கும்.... என்று பலவாறு யோசித்து தன்னையே மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தான்............ அன்று இரவு ஒருவருமே சாப்பிடவில்லை..............
முத்து தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்திருக்க கயலோ அவரின் அருகில் படுத்தபடி உறங்கியிருந்தாள்............
“கண்ணா அந்த முத்துத்துல பாய விரிப்பா.......... பாய விரிச்சு இந்த புள்ளைய தூக்கி அதுல படுக்கப் போடு............. காலுல அடிபட்டதால மாடி ஏற இறங்க செரம்மா இருக்கும்...........”.
“ம்ம்ம் சரிம்மா.......”
என்றவன் பாயை விரித்து கயலை மெதுவாக தூக்கினான்....கை தவறுதலாக அவள் இடுப்பில் பட....ஸ்ஸ்ஸ்ஸ் என்று வேதனையில் முகத்தை சுருக்க.....மெதுவாக அவளை பாயில் கிடத்தியவன்.......... அவளின் காயங்களை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான்........... சிறுபிள்ளை போல தூக்கத்திலும் தேம்பிக் கொண்டிருந்தாள்........
தன் தாயிடம் வந்தவன்” அம்மா என்னைய மன்னிச்சுருங்க......... கோபத்துல என்ன பண்ணுறோம்முன்னு தெரியாம பண்ணிட்டேன்...... அப்பா இருந்திருந்தா இம்புட்டு கோபம் வந்துருக்குமான்னா தெரியல..........ஆனா இப்ப அப்பா இல்லாதவன்....... இந்த அண்ணன்காரனும் கல்யாணம்பண்ணவும் தம்பிகள கவனிக்காம தருதலையா விட்டுட்டான்னு ஊருக்குள்ள பேசுவாங்கன்னுதாம்மா.......என்ன பண்ணுறேன்னு தெரியாம பண்ணிட்டேன்.........” என்றபடி தன் தம்பியின் காயத்தை வருடிவிட...............
“அண்ணே.......... நான் பண்ணுனது தப்புதானே..............நீங்க என்னைய அடிச்சது ஒன்னும் தப்பு இல்லண்னே..............”
சாவித்திரியும்” விடு கண்ணா மனச போட்டுக் கொழப்பிக்காத..............அவனும் தப்பு செஞ்சான்ல......புறவு...... ஆனா மருமக தாம்பா.........பாவம்....... நான்கூட குறுக்க வர யோசிச்சேன்......ஆனா இந்தபுள்ள தாம்மேல விழுந்த அடியக்கூட தாங்கிக்கிட்டு நம்ம முத்துவ பிடிச்சுருக்கான்னா எம்புட்டு நல்ல பிள்ளயா இருக்கனும்.......அது மத்தவங்க மாதிரி சூதுவாது தெரியாம வளந்திருக்குப்பா பச்ச மண்ணா இருக்குப்பா......கடவுள் ஒனக்கு தங்கம் மாதிரி ஒரு பொண்டாட்டிய குடுத்திருக்கு.......... அத தொலைச்சிப்புடாம வச்சுக்கப்பா..........இனிமே யாரையும் கைநீட்டுற வேலை வச்சுக்காத.......”என்று தொடர்ந்து அறிவுரைகளை கூற...........முத்துவும் கண்ணனும் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்க ராமனும் வந்து தன் தாயின் மறுபுறம் அமர...........
“நீங்க எப்பவும் என்ன பிரச்சனை வந்தாலும் ஒத்துமையா இருக்கனும்பா..... .அண்ணன் ஒன்னு சொன்னாக்கா அதுல நல்லது மட்டும்தான் இருக்குமுன்னு புரிஞ்சு நடந்துக்கனும் புரியுதா............ சரி சரி........... போய் படுங்க..........” என்றவர் கயலின் மறுபுறம் வந்து படுத்தார்............