நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-15
அதிகாலை 5 மணிக்கே கண்ணன் கண்விழித்து விட்டான். எப்போதும் எழுந்து வயலுக்குச் செல்பவன் இன்று கண்விழித்தவுடன் ஒரு பூமாலைபோல தன்மேல் ஒரு கையையும் காலையும் போட்டு படுத்திருந்த கயலை கண்டவன்........அவன் மார்புக்கு நேராக அவள் தலையை வைத்திருந்தாள் தன் தலையை அவள் தாடையில் வைத்து............ ஆழ்ந்த மூச்செடுத்தவன்..............இவ பூவ அங்க டேபுள்ள தானே வச்சா.........ஆனா இவ மேலயிருந்து எப்படி அந்த பூவாசம் வருது என்று யோசித்தவன். தன் தலையை சற்று பின்னால் நகர்த்தி அவளுடைய முகத்தை ஆராய ஆரம்பித்தான்..............
அவளுடைய அந்த முகத்தில் குழந்தை தனத்தையும் அப்பாவித்தனத்தையும் கண்டவனுக்கு............ நேற்று இரவு அவள் பேச்சை கேட்டவனுக்கு......அப்பா......... என்ன இவ இப்படி பேசுறா.........இவள வீட்டுலவச்சு எப்புடித்தான் கட்டிமேச்சாங்களோ ............(அதுக்கு தான் இனிமே நீ கிடச்சியே ராசா.....).. அவளை மேலிருந்து கீழாக அணுஅணுவாக ரசித்து கொண்டிருந்தவன்......... அவளுடைய நைட்டி முழங்கால் வரை ஏறி இருக்கவும் மெதுவாக அவள் காலை பார்க்க.......... அவள் உள்ளே சுடிதாரின் பேன்ட்டை போட்டிருந்தாள்........... வட போச்சே......பயபுள்ள தூங்கும்போது கூட அலார்ட்டாதான் இருக்கு என்று நினைத்தவன்....... ம்ம்ம.......மீண்டும் அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்தான்..........
சிறிது நேரம் கழித்து கண்விழித்த கயல் என்னடா இது இந்த தலகாணி இப்புடி இருக்கு........எவளோ நம்ம தலகாணிய எடுத்துட்டு மாத்தி வச்சுட்டாளுக.......... இன்னைக்கு இருக்கு அவளுகளுக்கு மனதிற்குள் தன் தங்கைகளை திட்டியபடி கண் விழித்தவள்.......... தன் முகத்திற்கு அருகே பனியன் மட்டும் போட்டுப் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்............ தன்நைட்டியை அவசரமாக கீழே இழுத்து விட்டாள்........ நல்ல வேளை நம்ம அம்மா எப்பவுமே பேன்ட்ட போட்டு படுக்கச் சொன்னதால நம்ம மானம் இன்னைக்கு தப்புச்சுச்சு.......இல்லனா கப்பலேறியில்ல போயிருக்கும்.............
ஆமா நாம இந்த ஒரத்துல தான படுத்தோம்........... எப்புடி இவருகிட்ட வந்தோம்..........மேக்கொண்டு அவரு மேல வேற கைய கால போட்டு தூங்கியிருக்கோம்.........அதுதான் நம்மள என்ன சொல்லி திட்டலாம்னு யோசிக்கிறாரோ............கயல் எப்போதும் மல்லிகாவோடும் அருணாவோடும் தான் படுப்பாள்.......இவர்கள் இல்லையென்றால தன்னைச் சுற்றிலும் தலகாணியோடு தான் படுப்பாள்........ இல்லையென்றால் தரையில் விழுந்து கிடப்பாள்........ ஆனால் நேற்று இரவு தலகாணி இல்லாததால் நாம எப்புடியும் தரையில தான்கிடப்போம்.........ஆனா இந்த கட்டில் இவ்வளவு உயரமா இருக்கே......... கீழே விழுந்தா கண்டிப்பா மண்ட ஒடஞ்சுறும் என்று யோசித்தவள்......அரை தூக்கத்திலேயே இருந்தாள்.........லேசாக தடுமாறும் போதெல்லாம் விழித்து சற்று நகர்ந்து படுத்தாள்.......
நடுஇரவுக்குமேல் தன்னை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள் ...... .கண்ணன் நடுஇரவில் எழுந்து பாத்ரூம் சென்று வரும் போது கயல் கட்டலின் விளிம்பிற்கு வந்ததிருந்தாள். அவள் கீழே விழுந்துவிடுவாளே என்று நினைத்து .........அவளை தன்புறம் நகர்த்தி படுக்க வைத்தவன் அவள் மீண்டும் உருள ஆரம்பிக்கவும் அவள் மேல் கையை போட்டுப் படுத்திருந்தான்.............இவளும் அவனை தலகாணி என்று நினைத்து கையையும் காலையும் அவன் மேல் போட்டு படுத்திருந்தாள்........
இவள் கண் விழித்ததைக் கண்ட கண்ணன் ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கிச் செல்லவும் கயலும் அவசர அவசரமாக சேலையை கட்டினாள்..........இல்லை சுற்றிக் கொண்டிருந்தாள்..........
அவள் மெதுவாக மாடியிலிருந்து இறங்கிவந்ததை அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த கண்ணன் பார்த்து ஐய்யயோ இவ ஏன் சேலைய இப்புடி சுத்தி வச்சிருக்கா.........அவ தலையில பூவ காணோம்....இப்புடி........ இவ வர்றத பாத்தா நம்மள தானே தப்பா நினைப்பாங்க....அங்க ஒன்னுமே நடக்கல........ஆனா இவ வர்றத பாத்தா யாரும் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணி அங்க ஒன்னும் நடக்கலைன்னு சொன்னாக்கா ஒரு பயலும் நம்ப மாட்டாங்க.................. என்று நினைத்து சுற்றிமுற்றி பார்க்க.........சாவித்திரியும் தாமரையும் மனதிற்குள் சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க கண்ணனுக்கு வெட்கம் வந்து விறுவிறுவென்று மாடிக்கு சென்றான்........ கயல் தாமரையிடம் வந்து ஏதோ கேட்க வரவும்
“ முதல்ல போயி குளி......”..என்று அவளை அனுப்பி வைத்தாள்.........
கயல் குளித்து வரவும் தாமரை அவளுக்கு சேலையை இரண்டு மூன்று தரம் கட்டி பழக்கிவிட்டு பின் கயல் சாமி கும்பிட்டு வரவும்............தாமரை சாவித்திரியிடம் சென்று.......
“அத்த அம்மா போன் பண்ணியிருந்தாங்க.........மறுவீட்டுக்கு கயலையும் அவுகளையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க..........”
“ஏத்தா இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கன இருந்துட்டு போகலாம்ல.......”
“இல்லத்த அவசரமா வந்ததால பிள்ளைங்க ரெண்டையும் அம்மாட்ட விட்டுட்டு வந்தேன்........ அதுக ரெண்டும் அம்மாவ ஒருவழியாக்கி இருக்குங்க......... அவுகளும் ஊருக்கு போயிட்டாங்களாம்...........நான் இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போனாதாத்த பிள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டு நாளைக்காச்சும் ஊருக்கு கிளம்பமுடியும்.... அப்புறம் லேட்டான்னா அவுக சாப்பாட்டுக்கும் ரொம்ப செரமபடுவாங்க.......... மல்லிகாவுக்கும் பள்ளிக்கூடம் இருக்குல்லத்த............ நாங்க கிளம்புறோம் நீங்க கயலு மாப்ளகிட்ட கேட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு எப்ப வாறாங்கன்னு போன பண்ணிச் சொல்லிருங்கத்த........”
“சரித்தா நானும் போன்ல சொல்லிருரேன்.........நான் கலியாணம் நல்ல படியா முடிஞ்சா குலசாமி கோவிலுக்கு போயிட்டு அப்புடியே பழனிக்கு வரதா வேண்டியிருக்கேன்...........இங்கயும் போட்டது போட்டபடி கிடக்கா.......இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு......மத்தியானத்துக்கு மேல கோயிலுக்கு கிளம்பலாமுன்னு பாக்குறேத்தா..........”
“சரித்தே அப்ப நாங்க கிளம்புறோம்........”
“டேய் ராமா..........நீ போயி நம்மவுட்டு காருல இவுகள ஊருல கொண்டுபோயி விட்டுட்டு வெரசா வா......... நாம கோவிலுக்கு கிளம்பனும்..........”.
ராமருக்கு பரவால்லயே....... இன்னும் கொஞ்சநேரம் இந்த ஜாமூன சைட் அடிக்கலாம் போலவே...........என்று நினைத்து சீட்டி அடித்தபடி காரின் சாவியை எடுக்கச் சென்றான்.
தாமரையும் கயலுக்கு சில அறிவுரைகளை கூறியவள் காருக்கு அருகில் செல்ல.... மல்லிகாவுக்கு அழுகை வந்தது....... கயலும் மல்லிகாவையும் தாமரையையும் கட்டிக் கொண்டு அழ............மூவருமே அழ ஆரம்பித்தனர்...........
சாவித்திரி தான் அவர்களை சமாதானப்படுத்த...............கயலை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்..........
கார் கிளம்ப போக.........மல்லிகா ........”..ஒரு நிமிஷம்...... ஒரு நிமிஷம் ......நிப்பாட்டுங்க...... ப்ளிஸ்.......”.என்று காரைவிட்டு இறங்கியவள்......... கயலிடம் செல்ல அப்போதுதான் கயலுக்கு மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டு ஞாபகத்திற்கு வந்தது......... குடுகுடுவென்று மாடிக்கு ஒடியவள்.........மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டை கொண்டு வந்து கொடுக்க..........
“சாரிக்கா.......சாரிக்கா.......தெரியாம நோட்டை கொண்டு வந்துட்டேன்.......... நான் போயி இத அமுதா அக்காகிட்ட குடுத்து படம் வரஞ்சுக்குறேன்..................”என்ற படி நோட்டை பிரித்துப் பார்க்க.......... கயல் எல்லா படத்தையும் வரைந்திருந்தாள்............. அதை பார்த்த மல்லிகா................
“ ஏஏஏஏஏ...........சூப்பர்கா எப்புடிக்கா சொன்னபடி எல்லா படத்தையும் வரஞ்ச..............”.. என்றவள்..கயலின் கன்னத்தில முத்தம் கொடுக்க............ கண்ணனுக்கும் ராமனுக்கும் காதில் புகை வந்தது.........கண்ணனோ இவதான் நமக்கு வில்லியா.........தாமரையோ தலையில் அடித்துக் கொண்டாள்.......... இவ எப்ப படம் வரஞ்சுருப்பா......... கயலையும் அவுக வீட்டுக்காரரையும் பாத்தா ராத்திரி சந்தோசமா இருந்த மாதிரிதான் இருந்துச்சு........ பின்ன எப்ப..............வரஞ்சா..........
அவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்ப................. கயலை சிறுசிறு வேலைகள் கொடுத்து அவளை இயல்பு நிலைக்குத் திருப்பினார்......... காலை உணவை தயாரித்தவர்கள்.......... சாவித்திரி ஆண்கள் மூவரையும் சாப்பிட அழைக்க........... மூவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சாவித்திரி கயலையும் சாப்பிடச் சொல்ல கண்ணனுக்கு புரை ஏறியது...........ஆத்தி இவ ராத்திரி நம்மகிட்ட பேசுன மாதிரி எதையாவது சொல்லுவாளோ......என்று நினைத்து தன் தாய் மற்றும் தம்பிகளின் கவனத்தை வேறுபுறம் திருப்பியவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தியிருந்தான்..............
“பேசாம இங்கன உக்காந்து சாப்புடு “என்று அவள் காதின் அருகில் சென்று சொல்ல......... அவளோ என்ன இவுக எல்லாரும் இருக்கும் போதே கையை புடிச்சு இழுக்குறாரு...............என்ன என்று ஏதோ சொல்லவர........
சாவித்திரியோ “எல்லாரும் சீக்கிரமா சாப்புடுங்க........ வேலைய முடிச்சுட்டு கோவிலுக்கு கிளம்பனும்.”.
அத்தியாயம்-15
அதிகாலை 5 மணிக்கே கண்ணன் கண்விழித்து விட்டான். எப்போதும் எழுந்து வயலுக்குச் செல்பவன் இன்று கண்விழித்தவுடன் ஒரு பூமாலைபோல தன்மேல் ஒரு கையையும் காலையும் போட்டு படுத்திருந்த கயலை கண்டவன்........அவன் மார்புக்கு நேராக அவள் தலையை வைத்திருந்தாள் தன் தலையை அவள் தாடையில் வைத்து............ ஆழ்ந்த மூச்செடுத்தவன்..............இவ பூவ அங்க டேபுள்ள தானே வச்சா.........ஆனா இவ மேலயிருந்து எப்படி அந்த பூவாசம் வருது என்று யோசித்தவன். தன் தலையை சற்று பின்னால் நகர்த்தி அவளுடைய முகத்தை ஆராய ஆரம்பித்தான்..............
அவளுடைய அந்த முகத்தில் குழந்தை தனத்தையும் அப்பாவித்தனத்தையும் கண்டவனுக்கு............ நேற்று இரவு அவள் பேச்சை கேட்டவனுக்கு......அப்பா......... என்ன இவ இப்படி பேசுறா.........இவள வீட்டுலவச்சு எப்புடித்தான் கட்டிமேச்சாங்களோ ............(அதுக்கு தான் இனிமே நீ கிடச்சியே ராசா.....).. அவளை மேலிருந்து கீழாக அணுஅணுவாக ரசித்து கொண்டிருந்தவன்......... அவளுடைய நைட்டி முழங்கால் வரை ஏறி இருக்கவும் மெதுவாக அவள் காலை பார்க்க.......... அவள் உள்ளே சுடிதாரின் பேன்ட்டை போட்டிருந்தாள்........... வட போச்சே......பயபுள்ள தூங்கும்போது கூட அலார்ட்டாதான் இருக்கு என்று நினைத்தவன்....... ம்ம்ம.......மீண்டும் அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்தான்..........
சிறிது நேரம் கழித்து கண்விழித்த கயல் என்னடா இது இந்த தலகாணி இப்புடி இருக்கு........எவளோ நம்ம தலகாணிய எடுத்துட்டு மாத்தி வச்சுட்டாளுக.......... இன்னைக்கு இருக்கு அவளுகளுக்கு மனதிற்குள் தன் தங்கைகளை திட்டியபடி கண் விழித்தவள்.......... தன் முகத்திற்கு அருகே பனியன் மட்டும் போட்டுப் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்............ தன்நைட்டியை அவசரமாக கீழே இழுத்து விட்டாள்........ நல்ல வேளை நம்ம அம்மா எப்பவுமே பேன்ட்ட போட்டு படுக்கச் சொன்னதால நம்ம மானம் இன்னைக்கு தப்புச்சுச்சு.......இல்லனா கப்பலேறியில்ல போயிருக்கும்.............
ஆமா நாம இந்த ஒரத்துல தான படுத்தோம்........... எப்புடி இவருகிட்ட வந்தோம்..........மேக்கொண்டு அவரு மேல வேற கைய கால போட்டு தூங்கியிருக்கோம்.........அதுதான் நம்மள என்ன சொல்லி திட்டலாம்னு யோசிக்கிறாரோ............கயல் எப்போதும் மல்லிகாவோடும் அருணாவோடும் தான் படுப்பாள்.......இவர்கள் இல்லையென்றால தன்னைச் சுற்றிலும் தலகாணியோடு தான் படுப்பாள்........ இல்லையென்றால் தரையில் விழுந்து கிடப்பாள்........ ஆனால் நேற்று இரவு தலகாணி இல்லாததால் நாம எப்புடியும் தரையில தான்கிடப்போம்.........ஆனா இந்த கட்டில் இவ்வளவு உயரமா இருக்கே......... கீழே விழுந்தா கண்டிப்பா மண்ட ஒடஞ்சுறும் என்று யோசித்தவள்......அரை தூக்கத்திலேயே இருந்தாள்.........லேசாக தடுமாறும் போதெல்லாம் விழித்து சற்று நகர்ந்து படுத்தாள்.......
நடுஇரவுக்குமேல் தன்னை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள் ...... .கண்ணன் நடுஇரவில் எழுந்து பாத்ரூம் சென்று வரும் போது கயல் கட்டலின் விளிம்பிற்கு வந்ததிருந்தாள். அவள் கீழே விழுந்துவிடுவாளே என்று நினைத்து .........அவளை தன்புறம் நகர்த்தி படுக்க வைத்தவன் அவள் மீண்டும் உருள ஆரம்பிக்கவும் அவள் மேல் கையை போட்டுப் படுத்திருந்தான்.............இவளும் அவனை தலகாணி என்று நினைத்து கையையும் காலையும் அவன் மேல் போட்டு படுத்திருந்தாள்........
இவள் கண் விழித்ததைக் கண்ட கண்ணன் ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கிச் செல்லவும் கயலும் அவசர அவசரமாக சேலையை கட்டினாள்..........இல்லை சுற்றிக் கொண்டிருந்தாள்..........
அவள் மெதுவாக மாடியிலிருந்து இறங்கிவந்ததை அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த கண்ணன் பார்த்து ஐய்யயோ இவ ஏன் சேலைய இப்புடி சுத்தி வச்சிருக்கா.........அவ தலையில பூவ காணோம்....இப்புடி........ இவ வர்றத பாத்தா நம்மள தானே தப்பா நினைப்பாங்க....அங்க ஒன்னுமே நடக்கல........ஆனா இவ வர்றத பாத்தா யாரும் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணி அங்க ஒன்னும் நடக்கலைன்னு சொன்னாக்கா ஒரு பயலும் நம்ப மாட்டாங்க.................. என்று நினைத்து சுற்றிமுற்றி பார்க்க.........சாவித்திரியும் தாமரையும் மனதிற்குள் சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க கண்ணனுக்கு வெட்கம் வந்து விறுவிறுவென்று மாடிக்கு சென்றான்........ கயல் தாமரையிடம் வந்து ஏதோ கேட்க வரவும்
“ முதல்ல போயி குளி......”..என்று அவளை அனுப்பி வைத்தாள்.........
கயல் குளித்து வரவும் தாமரை அவளுக்கு சேலையை இரண்டு மூன்று தரம் கட்டி பழக்கிவிட்டு பின் கயல் சாமி கும்பிட்டு வரவும்............தாமரை சாவித்திரியிடம் சென்று.......
“அத்த அம்மா போன் பண்ணியிருந்தாங்க.........மறுவீட்டுக்கு கயலையும் அவுகளையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க..........”
“ஏத்தா இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கன இருந்துட்டு போகலாம்ல.......”
“இல்லத்த அவசரமா வந்ததால பிள்ளைங்க ரெண்டையும் அம்மாட்ட விட்டுட்டு வந்தேன்........ அதுக ரெண்டும் அம்மாவ ஒருவழியாக்கி இருக்குங்க......... அவுகளும் ஊருக்கு போயிட்டாங்களாம்...........நான் இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போனாதாத்த பிள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டு நாளைக்காச்சும் ஊருக்கு கிளம்பமுடியும்.... அப்புறம் லேட்டான்னா அவுக சாப்பாட்டுக்கும் ரொம்ப செரமபடுவாங்க.......... மல்லிகாவுக்கும் பள்ளிக்கூடம் இருக்குல்லத்த............ நாங்க கிளம்புறோம் நீங்க கயலு மாப்ளகிட்ட கேட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு எப்ப வாறாங்கன்னு போன பண்ணிச் சொல்லிருங்கத்த........”
“சரித்தா நானும் போன்ல சொல்லிருரேன்.........நான் கலியாணம் நல்ல படியா முடிஞ்சா குலசாமி கோவிலுக்கு போயிட்டு அப்புடியே பழனிக்கு வரதா வேண்டியிருக்கேன்...........இங்கயும் போட்டது போட்டபடி கிடக்கா.......இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு......மத்தியானத்துக்கு மேல கோயிலுக்கு கிளம்பலாமுன்னு பாக்குறேத்தா..........”
“சரித்தே அப்ப நாங்க கிளம்புறோம்........”
“டேய் ராமா..........நீ போயி நம்மவுட்டு காருல இவுகள ஊருல கொண்டுபோயி விட்டுட்டு வெரசா வா......... நாம கோவிலுக்கு கிளம்பனும்..........”.
ராமருக்கு பரவால்லயே....... இன்னும் கொஞ்சநேரம் இந்த ஜாமூன சைட் அடிக்கலாம் போலவே...........என்று நினைத்து சீட்டி அடித்தபடி காரின் சாவியை எடுக்கச் சென்றான்.
தாமரையும் கயலுக்கு சில அறிவுரைகளை கூறியவள் காருக்கு அருகில் செல்ல.... மல்லிகாவுக்கு அழுகை வந்தது....... கயலும் மல்லிகாவையும் தாமரையையும் கட்டிக் கொண்டு அழ............மூவருமே அழ ஆரம்பித்தனர்...........
சாவித்திரி தான் அவர்களை சமாதானப்படுத்த...............கயலை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்..........
கார் கிளம்ப போக.........மல்லிகா ........”..ஒரு நிமிஷம்...... ஒரு நிமிஷம் ......நிப்பாட்டுங்க...... ப்ளிஸ்.......”.என்று காரைவிட்டு இறங்கியவள்......... கயலிடம் செல்ல அப்போதுதான் கயலுக்கு மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டு ஞாபகத்திற்கு வந்தது......... குடுகுடுவென்று மாடிக்கு ஒடியவள்.........மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டை கொண்டு வந்து கொடுக்க..........
“சாரிக்கா.......சாரிக்கா.......தெரியாம நோட்டை கொண்டு வந்துட்டேன்.......... நான் போயி இத அமுதா அக்காகிட்ட குடுத்து படம் வரஞ்சுக்குறேன்..................”என்ற படி நோட்டை பிரித்துப் பார்க்க.......... கயல் எல்லா படத்தையும் வரைந்திருந்தாள்............. அதை பார்த்த மல்லிகா................
“ ஏஏஏஏஏ...........சூப்பர்கா எப்புடிக்கா சொன்னபடி எல்லா படத்தையும் வரஞ்ச..............”.. என்றவள்..கயலின் கன்னத்தில முத்தம் கொடுக்க............ கண்ணனுக்கும் ராமனுக்கும் காதில் புகை வந்தது.........கண்ணனோ இவதான் நமக்கு வில்லியா.........தாமரையோ தலையில் அடித்துக் கொண்டாள்.......... இவ எப்ப படம் வரஞ்சுருப்பா......... கயலையும் அவுக வீட்டுக்காரரையும் பாத்தா ராத்திரி சந்தோசமா இருந்த மாதிரிதான் இருந்துச்சு........ பின்ன எப்ப..............வரஞ்சா..........
அவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்ப................. கயலை சிறுசிறு வேலைகள் கொடுத்து அவளை இயல்பு நிலைக்குத் திருப்பினார்......... காலை உணவை தயாரித்தவர்கள்.......... சாவித்திரி ஆண்கள் மூவரையும் சாப்பிட அழைக்க........... மூவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சாவித்திரி கயலையும் சாப்பிடச் சொல்ல கண்ணனுக்கு புரை ஏறியது...........ஆத்தி இவ ராத்திரி நம்மகிட்ட பேசுன மாதிரி எதையாவது சொல்லுவாளோ......என்று நினைத்து தன் தாய் மற்றும் தம்பிகளின் கவனத்தை வேறுபுறம் திருப்பியவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தியிருந்தான்..............
“பேசாம இங்கன உக்காந்து சாப்புடு “என்று அவள் காதின் அருகில் சென்று சொல்ல......... அவளோ என்ன இவுக எல்லாரும் இருக்கும் போதே கையை புடிச்சு இழுக்குறாரு...............என்ன என்று ஏதோ சொல்லவர........
சாவித்திரியோ “எல்லாரும் சீக்கிரமா சாப்புடுங்க........ வேலைய முடிச்சுட்டு கோவிலுக்கு கிளம்பனும்.”.