நேசம் மறவா நெஞ்சம்-14Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
என்னடா இது ஒன்னு இந்த பொண்ணு தூங்கிகிட்டு இருக்கும்இல்லைனா அழுதுகிட்டு இருக்குமுன்னு நினைச்சுவந்தா.............இந்தபுள்ள என்னமோ எழுதிகிட்டுல்ல இருக்கு..............



அறைக்குள் நுழைந்தவன்............. தன் ரூமைச்சுற்றி பார்த்தவன்........டேபிள் மேல் அவள் வைத்திருந்த பூ , ஏர்பின்கள்......அவள் கட்டியிருந்த சேலை பாதி மடித்தும் மடிக்காமலும் அந்த பேக்கின் மேல் கிடந்தது...........



கட்டிலில் இருந்த தலகாணி அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது........ கட்டிலைச் சுற்றி நோட்டு புத்தகம் விரித்தபடி ஸ்கேல் பென்சில் ரப்பர் என அவளைச் சுற்றி கிடந்தன.............



கட்டிலின் அருகே சென்றவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் ஏதோ படம் வரைவது போல தெரியவும் ஆமா இது என்ன ரெக்கார்டு நோட்டு மாதிரி இருக்கு..................... அம்மாடி இவ காலேஜ்தான படிக்குறதா நெனச்சோம்.....................



தன் அருகில் யாரோ நிற்பது போல தெரியவும் மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்................ கண்ணனைப் பார்த்து அதிர்ந்தவள்........... இவரு எப்ப ரூமுக்குள்ள வந்தாரு............கதவ தொறந்த சத்தமே கேக்கலயே................... என்று நினைத்து டக்கென்று..........கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்............



“என்ன பண்ணிக்கிட்டு இருக்க...............”.



அவள் பேசாமல் தலை குனிந்து நிற்கவும்.........(டேய் நான் இன்னைக்கு மவுன விரதம்.......).



அவளை நிமிர்ந்து பார்த்தவன்..........ஆமா பஸ்ட் நைட் ரூமுகுள்ள ஒரு பொண்ணு இப்புடியா இருப்பா..........படத்துல எல்லாம் வேற மாதிரியில்ல காமிக்குறாங்க............ இந்த புள்ள என்னனா பூவ கொண்டு போயி அந்த டேபுளுக்கு வச்சுருக்கு தலையில வச்சிருந்தா மட்டும் இப்ப இங்க என்ன நடக்க போகுது.......... டேய் மொத அவ மனச ஒன்பக்கம் மாத்து....... அப்புறம் அந்த பூவ நீயே எடுத்து அவ தலையில வச்சுவிடலாம்...................



என்ன இந்த ஐயனாரு நம்மள இப்புடி மொறைக்குறாரு......(..ஏய் மொறைக்கலப்பா...........ரசிக்குறாரு.....)..



“என்ன கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டியா............”

ஒழுங்கா பதில சொல்லிரு கயலு அவரு பாட்டுக்கு நம்மள சப்புன்னு அறைஞ்சுப்புடாம..................” அது வந்து…………அது வந்து..........இது என் தங்கச்சியோட நோட்டு..............அவ ஏற்கனவே படம் வரைஞ்சு தரச்சொன்னாலா.................இன்னைக்கு வரஞ்சு தரதா சொன்னேன் இன்னைக்கு இப்புடி நடந்துப்போச்சா.............. அதுதான் இப்ப வரையுறேன்.............. இன்னும் ரெண்டே ரெண்டுப் படம் மட்டும் தான் ...........சீக்கிரமே வரஞ்சு முடிச்சுருரேன்..........”.



“ம்ம்ம்.........”.என்றவன் ஸ்ஸ்ஸ் அப்பாடி இது இந்த நோட்டு இவ தங்கச்சியோடதா...........ஒரு வேளை பள்ளிக்கூடம் படிக்குற பிள்ளைக்குதான் தாலி கட்டிடோம்ன்னு ஒரு நிமிசம் பயந்து போயிட்டோம்............என்று பெருமூச்சு விட்டவன்........சட்டையை கழற்றி ஹாங்கரில் போட்டவன்... பனியனோடு..கைலியை மாற்றிக்கொண்டு துண்டோடு கொல்லைப்புறத்திற்கு சென்றான்............

அவன் சட்டை கழற்றியதையோ கொல்லைப்புறம் சென்றதையோ கவனிக்காமல் கயல் தன் கவனம் முழுவதையும் படம் வரைவதில் செலுத்தினாள்..........

அறைக்குள் நுழைந்த கண்ணன் அங்கு கயலின் கால் புறமாக்கிடந்த தலகாணியை எடுத்து தலைக்கு வைத்து கையை இருபுறமாக தலைக்கு கீழே வைத்து கட்டிலின் ஒரு ஓரமாக படுத்திருந்தவன் கயலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்..............



மேலும் ஒரு இருபது நிமிடம் கழித்து படத்தை வரைந்துமுடித்தவள் ......”..ஸ்ஸ்ஸ்” என்று நிமிர்ந்தவள்.......கண்ணனை பார்த்து..........

“ஐயோ.......... அம்மா” என்று கத்தினாள்............



“ஏய் ......... என்ன.......என்னாச்சு......”



“நீங்க என்ன இப்புடி இருக்கீங்க........”..



“எப்புடி..........”



“சட்டையில்லாம..........”



“ஏன் .........இருந்தா...... என்ன........”



“நீ மட்டும் நைட்டியோட இருக்க............”.



அப்போதுதான் தன்னைப் பார்த்தவள்..........அப்போதுதான் அவளுக்கு தாமரை சொன்னது ஞாபகத்துக்கு வர.......உடனே தன்சேலையை எடுத்து தன் மேல் போட்டுக்கொண்டாள்.......



“ஏய் இப்ப என்ன பண்ணுற.........”



“இல்ல எங்க அக்கா சொன்னாங்க.......... உங்க முன்னாடியும் உங்க தம்பிங்க முன்னாடியும் சேலைதான் கட்டிக்கச் சொன்னாங்க..........”.



“என் முன்னாடி நீ இந்த ரூமுக்குள்ள நைட்டிப் போட்டிக்கலாம்....... இந்த மாதிரி நைட்டியா இருந்தா....... இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நீ வீட்டுக்குள்ளயே போட்டுக்கலாம்......... இப்பனா வீட்டுக்கு நம்மள பாக்க ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க..........சரி சரி .........படு.....”



“இங்கயா......”



“இங்கயில்லாம..........வேற எங்க படுப்ப.....”

“இல்ல அத்தகிட்ட ஒரு பாயி வாங்கிட்டு வரவா..........”

“உன்னைய..........”என்றவனுக்கு கோபம் ஏறத் தொடங்கியது........நம்மள நம்ம அம்மாகிட்ட மாட்டிவிடாம விடமாட்டா போலயிருக்கே.........


“ஏய் இங்கபாரு நானும் ஒன்கிட்ட ஒன்னையும் எதிர்பார்க்கல........நீயும் என்கிட்ட ஒன்னையும் எதிர் பாக்கக்கூடாது புரியுதா.............”



நம்மகிட்ட என்ன இருக்கு இவருகிட்ட குடுக்க..........ஆனா....... “அப்ப ஒரு போன் பண்ணிக்கவா.............”



“இப்பவா.........யாருக்கு இந்நேரத்துல..........”




“எங்க அம்மாவுக்குதான்..............”



“எதுக்கு........”



“நீஙகதான் உங்ககிட்ட ஒன்னையும் எதிர்பாக்ககூடாதுன்னு சொல்லிட்டீங்கள்ள அதுனால காலையில 8 மணிக்கு எங்க ஊருல இருந்து இங்க பஸ்ஸு வருமா..........அதுல எனக்கு மூனு நேரத்துக்கு சாப்பாடு குடுத்துவிடச் சொல்லுறேன்............... எங்க அப்பத்தா தான் நீங்க சொல்லாம என்னைய அங்க வரக்கூடாதுன்னு சொல்லிருச்சே..............”

“ஏய்..........மூச்.........வாயே திறக்கக் கூடாது............ இங்கே பேசாம படு............என்றவனுக்கு தலை சுற்றியது...........”

காலை ஆறு மணி..........கண்ணை திறந்த கண்ணனுக்கு தன் மேல் பூமாலை ஒன்று கிடப்பது போல இருந்தது..........அதே நேரம் கண்விழித்த கயல்.........என்னடா இது இப்புடி ஒரு தலகாணி மேல கால போட்டு இருக்கோம் .....நம்ம தலகாணி நல்லா மெத்து மெத்துன்னு தானே இருக்கும் ஆனா இப்புடி கல்லு மாதிரி இருக்கு...............

இனி............?
தொடரும்..............
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top