நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-14
கண்ணன் குடும்பத்தினர் கோவிலிலிருந்து கிளம்பவும் அனைவரும் தங்கள் கவனத்தை வாசு சுதாவிடம் திருப்பினர்........
அழகர் வாசுவிடம் சென்று” என்னப்பா வாசு உங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டியா.........”
“பண்ணிட்டேன் மாமா இப்ப வந்துருவாங்களாம் மாமா........”.என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் தங்களுடைய காரில் வந்து இறங்கினர்............மறுபடியும் ஆளாளுக்கு ஒன்று பேச மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது..........
வாசுவின் அப்பாவுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை..........இன்று அதிகாலையில் எழுந்து ஒரு முக்கியமான உறவினர் கல்யாணத்துக்கு சென்றுவிட்டு இங்கே வரலாம் என்று நினைத்தவர்கள் இந்த விசயம் கேள்விபட்டவர்கள் பதறியடித்து பாதியிலேயே திரும்பியிருந்தார்கள்..........
வாசுவின் அம்மாவுக்கு விபரம் தெரிந்தாலும் இப்படி திடீரென்று தாலி கட்டுவான் என்று நினைக்கவில்லை............
அங்கிருந்தவர்களில் சிலர் “ஏப்பா.......... இந்த பொண்ணு……… கழுத்துல தாலிய கட்டுன......இந்த பொண்ணை அந்த பையனுக்குன்னு தானே பேசியிருந்தாங்க.............நடுவுல உனக்கு ஏப்பா புத்தி இப்புடி போச்சு.........”
“உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா முறைப்படி அவுக வீட்டுல போயி பேச வேண்டியதுதானே...........உனக்கும் சுத்திவளச்சுப் பாத்தா முறைப்பொண்ணுதானேப்பா.................ஏதாவது பேசுப்பா ஏன் பேசாம இருக்க........இந்த பொண்ணுதான் உன்னைய இப்புடி வந்து கல்யாணம் பண்ணச் சொன்னுச்சா..............”
அங்கு நின்றிருந்த வாசுவின் உறவின பெண்கள் சிலர் வாசுவின் அம்மாவிடம் சென்று” அக்கா இந்த பொண்ணுதான் நம்ம வாசுவ மயக்கியிருக்குமுன்னு நினைக்கிறேன்கா.......”
“ஏண்டி அப்புடி சொல்லுற..... “
“இல்லக்கா கல்யாணத்தப்ப இந்தபொண்ணு பின்னாடி வந்தத நான் பாத்தேன்கா.....”
“. அப்புடியா.....”.என்று சந்தேகத்துடன் சுதாவை பார்க்க
அதுவரை தனக்கும் நடந்ததற்கும் எதுவுமே சம்மந்தமில்லாதது போல நின்றிருந்த சுதா அங்கிருந்த பெண்கள் ஏதோதோ பேச ஆரம்பிக்கவும் நிமிர்ந்து வாசுவை பார்த்தாள்......
வாசுவோ ஐய்யய்யோ இவளுக கல்யாணத்தன்னிக்கே தேவையில்லாம பேசி என்னைய இமயமலைக்கு சாமியாரா அனுப்பிவச்சுருவாளுக போலயிருக்கே........... வாசு இப்பவாச்சும் ஒழுங்கா பேச ஆரம்பிச்சுரு..........
“எல்லாரும் ஆளாளுக்கு ஒன்னு பேசாம கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா............என்னைய கொஞ்சம் பேசவுடுங்க............நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி எதுவுமே இல்ல........சுதாவுக்கு கல்யாணம் நடக்குற கடைசி நிமிசம் வரைக்கும் எதுவுமே தெரியாது.......நான்தான் அவள பின்னாடி இழுத்து கல்யாணம் பண்ணுனேன்...........எனக்கு சுதாவ ரொம்ப புடிச்சிருந்துச்சு........நான் பொண்ணுகேக்கலாமுன்னு நினைக்கும்போது அவுக வீட்ல வேற பையனபாத்து முடிக்கவும்தான் நான் இந்தமாதிரி பண்ணவேண்டியதாப்போச்சு.........இனிமே சுதாதான் என்னோட பொண்டாட்டி யாரும் தேவையில்லாம பேசாதீங்க.............”
இப்போதுதான் மாணிக்கத்துக்கும் சகுந்தலாவிற்கும் மூச்சே வந்தது .எங்கே தன் பெண் இந்த வாசுவை விரும்பியிருப்பாளோ அதனால்தான் இவன் தைரியமாக இந்தமாதிரி செய்தானோ என்று மனம் நொந்து இருந்தவர்கள்,,,,,,,,வாசு தன் வாயாலே சுதாவிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னவுடன் தான் மனதின் பெரிய பாரமே இறங்கியது............
மாணிக்கம் இந்த பையன் வாசு வேலைவெட்டி இல்லாம சும்மாதான ஊரஊர சுத்திக்கிட்டு இருந்தான்..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த மாதிரி செய்வான்........என்று ஏகத்திற்கும் கோபப்பட்டார்.அழகர்தான் அவரை வந்து சமாதானப்படுத்தி
“இனி என்ன பண்ணுறது நடந்தது நடந்து போச்சு.......இது உன் பொண்ணோட வாழ்க்கைப்பா.........அவுக்கூட நாம போயி மல்லுக்கட்ட முடியுமா........ஒரு ஊருல இருக்கோம் நம்ம பொண்ணும் அங்கே தானப்பா வாழப்போகனும்......”
“அதுவரைக்கும் பரவாயில்லப்பா......ஆத்தா சூதானமா இந்த பையன் நம்ம சுதா கழுத்துல தாலிய கட்டவும் டக்குன்னு நம்ம கயல கண்ணனுக்கு பொண்டாட்டி ஆக்கிருச்சு..........நமக்குகூட இந்த யோசனை தோனிருக்காதுப்பா.......அந்த நேரத்துலயும் ஆத்தா எப்புடி சூதானமா யோசிச்சி இருக்குன்னு பாரேன்..........இதுனால அந்த குடும்பத்துக்கும் ஒரு விசனமும் ஏற்படாம காப்பாத்தி குடுத்திருச்சுப்பா........”.
“இல்லன்னே இருந்தாலும் எனக்கு மனசு ஆறல.........”
“பரவால்ல விடுப்பா.........விடுப்பா.......”
..ஏனென்றால் அழகரின் மனைவி பேச்சிதான் சுதாவின் பின்னால் நின்றிருந்தார்,.........சுதா பின்னால் நகர்ந்ததையும் வாசு கண்ணனிடம் ஏதோ கூறியபடி தாலி கட்டியதையும் அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்........
அதனால் தான் அழகர் இந்த சுதாவின் சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடைபெற்றிருக்காது என்ற முடிவுக்கு வந்தவர்.மேலும் திடிரென வேறொருவரின் கையில் தாலி வாங்கிய கயல் மயங்கி விழுந்ததையும் ஆனால் இந்த பொண்ணோ எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் யாராவது கேட்கும்போது மட்டும் கண்ணை மூடிக்கொண்டு அழுது மற்றநேரம் சாதாரணமாக இருப்பதையும் கவனித்திருந்தார்.............
மாணிக்கத்தின் தாய்க்கும் இது ஏற்கனவே தெரிந்ததால்தான் அவர் சட்டென்று முடிவுசெய்து கயலை கண்ணனுக்கு மனைவியாக்கியிருப்பார் என்றும் நினைத்தார்..........இப்பொழுதும் இவ்வளவு பேர் பேசும்போதும் காந்திமதி அமைதியாக நிற்பதை கண்டவர் சாதாரணமாக தன் குடும்பத்தை யாராவது ஏதாவது பேசிவிட்டு சென்றாலே சண்டைக்கு அழைப்பவர் இன்று பேசாமல் அமைதியாக நின்றதே அவருக்கு சந்தேகத்தை கிளப்பியது.........
வாசுவின் தந்தையோ.......இது எப்படி நடந்தது..........நம்ம மகனுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்கா........இந்த பய........வெட்டி பந்தா காட்டிக்கிட்டு சும்மா உதார்விட்டுகிட்டுதானே திரிஞ்சான்.............சின்னவனுக்கு மாதிரி இவனுக்கு கூறுபத்தாதே........... இவனே ஒரு தெண்டம்.......இனி இவன நம்பி ஒரு பொண்ணு வேறயா.............. அவருடைய மனைவி அவனுக்கு பொண்ணுபாக்கலாம் என்று சொல்லும்போது கூட வெட்டிபயலுக்கு எப்படி பொண்ணுபார்ப்பது என்று நினைத்துதான் அந்த கடையை இவனுக்கு பார்த்தார் அதுவும் கண்ணனுக்கு கைமாறவும் இப்ப என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு இப்ப என்னடா புதுப்பிரச்சனை..................
இந்தபய ஊள்ளுருலயே பொண்ணு எடுத்துருக்கானே..........இந்த புள்ளைய ஒழுங்கா வச்சுக்குவானா.............என்னமாச்சும் பிரச்சனை வந்தா ஊள்ளுருல நமக்கு இருக்குற கொஞ்சநஞ்ச மானமும் கப்பலேறிருமே............... இப்ப என்ன பண்ணுறது..............
வாசுவும் ஏதேதோ சொல்லி தன் அம்மாவையும் அப்பாவையும் சமாதானப்படுத்தினான்........பின் அனைவரும் ஒருவாறு பேசிமுடித்து சுதாவை அவர்கள் வீட்டிற்கு கூட்டிச்செல்ல முடிவுசெய்தனர்........
சௌந்தரமும் சகுந்தலாவிடம் பேசி ஆறுதல் கூறி............. காந்திமதியிடம் “அத்தே........இந்த வாசுவோட அம்மாவுக்கு ஆசை கொஞ்சம் அதிகம் அதுனால சேத்த சீரையும் நகையையும் சுதாவுக்கே குடுத்திருவோம்..........நம்ம கயலுக்கு அடுத்த அறுவடையில வார வருமானத்துல சீரு செஞ்சுக்கலாம் அந்த அத்தாச்சியும் எதையும் எதிர்பாக்கமாட்டாங்க..........நம்ம புள்ளைய தங்கமா தாங்குவாங்க............நீங்க என்னத்தே நினைக்குறீங்க........”..
“நான் என்னத்தா நினைக்கப்போறேன் இந்தா அவளோட அம்மாவும் அப்பாவும் இருக்காங்க...............அவுகட்ட பேசிக்கத்தா.........”
சகுந்தலா பதறியபடி “என்னத்தே யாருவுட்டோ கல்யாணம் மாதிரி பேசுறீக......”..
“இல்ல சகுந்தலா அருணக்கூப்புடு நான் வீட்டுக்குப் போறேன்.........நீங்க எவ வீட்டுக்குனாலும் போயி சீர இறக்கிட்டு வாங்க...........நான் எம்பேத்தி கயலுகிட்ட அப்புறமா போன்ல பேசிக்குறேன்...........நான் கிளம்புறேத்தா............”
“என்னக்கா அத்த இப்புடி பேசிட்டு போறாக...........”
“சரி விடு சகுந்தலா இங்கன நடந்தது நமக்கே மனசு ஆறல......... அவுக பெரிய மனசவுக தானே......... அதான் கொஞ்சம் ஓஞ்சு போயிட்டாங்க............. ரெண்டு மூனு நாளு போனா தன்னால சரியாயிருவாக.......வா நம்ம போயி அடுத்த வேலைய பாப்போம்................”.
அத்தியாயம்-14
கண்ணன் குடும்பத்தினர் கோவிலிலிருந்து கிளம்பவும் அனைவரும் தங்கள் கவனத்தை வாசு சுதாவிடம் திருப்பினர்........
அழகர் வாசுவிடம் சென்று” என்னப்பா வாசு உங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டியா.........”
“பண்ணிட்டேன் மாமா இப்ப வந்துருவாங்களாம் மாமா........”.என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் தங்களுடைய காரில் வந்து இறங்கினர்............மறுபடியும் ஆளாளுக்கு ஒன்று பேச மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது..........
வாசுவின் அப்பாவுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை..........இன்று அதிகாலையில் எழுந்து ஒரு முக்கியமான உறவினர் கல்யாணத்துக்கு சென்றுவிட்டு இங்கே வரலாம் என்று நினைத்தவர்கள் இந்த விசயம் கேள்விபட்டவர்கள் பதறியடித்து பாதியிலேயே திரும்பியிருந்தார்கள்..........
வாசுவின் அம்மாவுக்கு விபரம் தெரிந்தாலும் இப்படி திடீரென்று தாலி கட்டுவான் என்று நினைக்கவில்லை............
அங்கிருந்தவர்களில் சிலர் “ஏப்பா.......... இந்த பொண்ணு……… கழுத்துல தாலிய கட்டுன......இந்த பொண்ணை அந்த பையனுக்குன்னு தானே பேசியிருந்தாங்க.............நடுவுல உனக்கு ஏப்பா புத்தி இப்புடி போச்சு.........”
“உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா முறைப்படி அவுக வீட்டுல போயி பேச வேண்டியதுதானே...........உனக்கும் சுத்திவளச்சுப் பாத்தா முறைப்பொண்ணுதானேப்பா.................ஏதாவது பேசுப்பா ஏன் பேசாம இருக்க........இந்த பொண்ணுதான் உன்னைய இப்புடி வந்து கல்யாணம் பண்ணச் சொன்னுச்சா..............”
அங்கு நின்றிருந்த வாசுவின் உறவின பெண்கள் சிலர் வாசுவின் அம்மாவிடம் சென்று” அக்கா இந்த பொண்ணுதான் நம்ம வாசுவ மயக்கியிருக்குமுன்னு நினைக்கிறேன்கா.......”
“ஏண்டி அப்புடி சொல்லுற..... “
“இல்லக்கா கல்யாணத்தப்ப இந்தபொண்ணு பின்னாடி வந்தத நான் பாத்தேன்கா.....”
“. அப்புடியா.....”.என்று சந்தேகத்துடன் சுதாவை பார்க்க
அதுவரை தனக்கும் நடந்ததற்கும் எதுவுமே சம்மந்தமில்லாதது போல நின்றிருந்த சுதா அங்கிருந்த பெண்கள் ஏதோதோ பேச ஆரம்பிக்கவும் நிமிர்ந்து வாசுவை பார்த்தாள்......
வாசுவோ ஐய்யய்யோ இவளுக கல்யாணத்தன்னிக்கே தேவையில்லாம பேசி என்னைய இமயமலைக்கு சாமியாரா அனுப்பிவச்சுருவாளுக போலயிருக்கே........... வாசு இப்பவாச்சும் ஒழுங்கா பேச ஆரம்பிச்சுரு..........
“எல்லாரும் ஆளாளுக்கு ஒன்னு பேசாம கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா............என்னைய கொஞ்சம் பேசவுடுங்க............நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி எதுவுமே இல்ல........சுதாவுக்கு கல்யாணம் நடக்குற கடைசி நிமிசம் வரைக்கும் எதுவுமே தெரியாது.......நான்தான் அவள பின்னாடி இழுத்து கல்யாணம் பண்ணுனேன்...........எனக்கு சுதாவ ரொம்ப புடிச்சிருந்துச்சு........நான் பொண்ணுகேக்கலாமுன்னு நினைக்கும்போது அவுக வீட்ல வேற பையனபாத்து முடிக்கவும்தான் நான் இந்தமாதிரி பண்ணவேண்டியதாப்போச்சு.........இனிமே சுதாதான் என்னோட பொண்டாட்டி யாரும் தேவையில்லாம பேசாதீங்க.............”
இப்போதுதான் மாணிக்கத்துக்கும் சகுந்தலாவிற்கும் மூச்சே வந்தது .எங்கே தன் பெண் இந்த வாசுவை விரும்பியிருப்பாளோ அதனால்தான் இவன் தைரியமாக இந்தமாதிரி செய்தானோ என்று மனம் நொந்து இருந்தவர்கள்,,,,,,,,வாசு தன் வாயாலே சுதாவிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னவுடன் தான் மனதின் பெரிய பாரமே இறங்கியது............
மாணிக்கம் இந்த பையன் வாசு வேலைவெட்டி இல்லாம சும்மாதான ஊரஊர சுத்திக்கிட்டு இருந்தான்..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த மாதிரி செய்வான்........என்று ஏகத்திற்கும் கோபப்பட்டார்.அழகர்தான் அவரை வந்து சமாதானப்படுத்தி
“இனி என்ன பண்ணுறது நடந்தது நடந்து போச்சு.......இது உன் பொண்ணோட வாழ்க்கைப்பா.........அவுக்கூட நாம போயி மல்லுக்கட்ட முடியுமா........ஒரு ஊருல இருக்கோம் நம்ம பொண்ணும் அங்கே தானப்பா வாழப்போகனும்......”
“அதுவரைக்கும் பரவாயில்லப்பா......ஆத்தா சூதானமா இந்த பையன் நம்ம சுதா கழுத்துல தாலிய கட்டவும் டக்குன்னு நம்ம கயல கண்ணனுக்கு பொண்டாட்டி ஆக்கிருச்சு..........நமக்குகூட இந்த யோசனை தோனிருக்காதுப்பா.......அந்த நேரத்துலயும் ஆத்தா எப்புடி சூதானமா யோசிச்சி இருக்குன்னு பாரேன்..........இதுனால அந்த குடும்பத்துக்கும் ஒரு விசனமும் ஏற்படாம காப்பாத்தி குடுத்திருச்சுப்பா........”.
“இல்லன்னே இருந்தாலும் எனக்கு மனசு ஆறல.........”
“பரவால்ல விடுப்பா.........விடுப்பா.......”
..ஏனென்றால் அழகரின் மனைவி பேச்சிதான் சுதாவின் பின்னால் நின்றிருந்தார்,.........சுதா பின்னால் நகர்ந்ததையும் வாசு கண்ணனிடம் ஏதோ கூறியபடி தாலி கட்டியதையும் அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்........
அதனால் தான் அழகர் இந்த சுதாவின் சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடைபெற்றிருக்காது என்ற முடிவுக்கு வந்தவர்.மேலும் திடிரென வேறொருவரின் கையில் தாலி வாங்கிய கயல் மயங்கி விழுந்ததையும் ஆனால் இந்த பொண்ணோ எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் யாராவது கேட்கும்போது மட்டும் கண்ணை மூடிக்கொண்டு அழுது மற்றநேரம் சாதாரணமாக இருப்பதையும் கவனித்திருந்தார்.............
மாணிக்கத்தின் தாய்க்கும் இது ஏற்கனவே தெரிந்ததால்தான் அவர் சட்டென்று முடிவுசெய்து கயலை கண்ணனுக்கு மனைவியாக்கியிருப்பார் என்றும் நினைத்தார்..........இப்பொழுதும் இவ்வளவு பேர் பேசும்போதும் காந்திமதி அமைதியாக நிற்பதை கண்டவர் சாதாரணமாக தன் குடும்பத்தை யாராவது ஏதாவது பேசிவிட்டு சென்றாலே சண்டைக்கு அழைப்பவர் இன்று பேசாமல் அமைதியாக நின்றதே அவருக்கு சந்தேகத்தை கிளப்பியது.........
வாசுவின் தந்தையோ.......இது எப்படி நடந்தது..........நம்ம மகனுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்கா........இந்த பய........வெட்டி பந்தா காட்டிக்கிட்டு சும்மா உதார்விட்டுகிட்டுதானே திரிஞ்சான்.............சின்னவனுக்கு மாதிரி இவனுக்கு கூறுபத்தாதே........... இவனே ஒரு தெண்டம்.......இனி இவன நம்பி ஒரு பொண்ணு வேறயா.............. அவருடைய மனைவி அவனுக்கு பொண்ணுபாக்கலாம் என்று சொல்லும்போது கூட வெட்டிபயலுக்கு எப்படி பொண்ணுபார்ப்பது என்று நினைத்துதான் அந்த கடையை இவனுக்கு பார்த்தார் அதுவும் கண்ணனுக்கு கைமாறவும் இப்ப என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு இப்ப என்னடா புதுப்பிரச்சனை..................
இந்தபய ஊள்ளுருலயே பொண்ணு எடுத்துருக்கானே..........இந்த புள்ளைய ஒழுங்கா வச்சுக்குவானா.............என்னமாச்சும் பிரச்சனை வந்தா ஊள்ளுருல நமக்கு இருக்குற கொஞ்சநஞ்ச மானமும் கப்பலேறிருமே............... இப்ப என்ன பண்ணுறது..............
வாசுவும் ஏதேதோ சொல்லி தன் அம்மாவையும் அப்பாவையும் சமாதானப்படுத்தினான்........பின் அனைவரும் ஒருவாறு பேசிமுடித்து சுதாவை அவர்கள் வீட்டிற்கு கூட்டிச்செல்ல முடிவுசெய்தனர்........
சௌந்தரமும் சகுந்தலாவிடம் பேசி ஆறுதல் கூறி............. காந்திமதியிடம் “அத்தே........இந்த வாசுவோட அம்மாவுக்கு ஆசை கொஞ்சம் அதிகம் அதுனால சேத்த சீரையும் நகையையும் சுதாவுக்கே குடுத்திருவோம்..........நம்ம கயலுக்கு அடுத்த அறுவடையில வார வருமானத்துல சீரு செஞ்சுக்கலாம் அந்த அத்தாச்சியும் எதையும் எதிர்பாக்கமாட்டாங்க..........நம்ம புள்ளைய தங்கமா தாங்குவாங்க............நீங்க என்னத்தே நினைக்குறீங்க........”..
“நான் என்னத்தா நினைக்கப்போறேன் இந்தா அவளோட அம்மாவும் அப்பாவும் இருக்காங்க...............அவுகட்ட பேசிக்கத்தா.........”
சகுந்தலா பதறியபடி “என்னத்தே யாருவுட்டோ கல்யாணம் மாதிரி பேசுறீக......”..
“இல்ல சகுந்தலா அருணக்கூப்புடு நான் வீட்டுக்குப் போறேன்.........நீங்க எவ வீட்டுக்குனாலும் போயி சீர இறக்கிட்டு வாங்க...........நான் எம்பேத்தி கயலுகிட்ட அப்புறமா போன்ல பேசிக்குறேன்...........நான் கிளம்புறேத்தா............”
“என்னக்கா அத்த இப்புடி பேசிட்டு போறாக...........”
“சரி விடு சகுந்தலா இங்கன நடந்தது நமக்கே மனசு ஆறல......... அவுக பெரிய மனசவுக தானே......... அதான் கொஞ்சம் ஓஞ்சு போயிட்டாங்க............. ரெண்டு மூனு நாளு போனா தன்னால சரியாயிருவாக.......வா நம்ம போயி அடுத்த வேலைய பாப்போம்................”.