Superrநெஞ்சமெல்லாம் அலரே.....
அகனெழிலன்
பார்வையில் ஏக்கம் கொண்டு
பிடித்தமாக மாறி
பாசம் காதல் ஆகி
பள்ளி பருவத்திலேயே
பதிந்த காதல் கொண்டு
படித்து முடித்தும்
பதவியில் இருந்தும்
பாவையை விடாமல்
பதியம் போட்டுக் கொண்டவன்
அலர்விழி.....
அன்பில் திளைத்தவள் அப்பாவின் செல்லப்பிள்ளை அனைத்து குடும்பத்துக்கும் அதிரடி பெண்ணாக வலம் வரும்
அலர்விழி ....
அன்பானவனுக்கு மட்டும்
ஆட்டம் காட்டும் அல்லி ராணி....
அல்லிராணியை
அன்பால் அடக்கி
அலர்விழியை கை பிடிக்கும்
அகனெழிலன்......
அப்பத்தா ஆயா
பெரியப்பா பெரியம்மா
சித்தி சித்தப்பா
அக்கா அண்ணா
அத்தை மாமா
மாமா மாமி
தாய்மாமன் உறவு
நட்பு பகை என்று கடந்த தலைமுறைகளில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே
இந்த கதையின் கருவும்
புனிதமும் பெருமையும்
புரியும்.....
நம் குடும்பத்தில் உள்ள
அனைத்து குணாதிசயம்
கொண்ட உறவுகளை
கண்முன்னே காட்டி
அதை படித்த நம்மையும் கதைக்குள் ஒருவராய் மாற்றிவிட்ட பெருமையை தங்களையே சாரும்.....
அற்புதம் சகி.....
குடும்பத்து காதல்
கதை என்பதற்கு இணங்க
குடும்பத்தில் ஏற்படும்
அன்பும் பாசமும்
அரவணைப்பும்
கோபமும் தாபமும்
ஆசையும் பேராசையும் அமைதியும் பேரமைதியும்
விட்டுக் கொடுத்தாலும்
விடாமல் பலி தீர்க்கும் என பலதரப்பட்ட மனித
நெஞ்சங்களை கொண்டு இருக்கும் குடும்பத்தில் நெஞ்சத்தில் ஒருத்தியை வைத்துக்கொண்டு அவள் நினைவாகவே வாழ்ந்து அவளை கரம் பிடிக்கும் எழில்
நெஞ்சமெல்லாம் அலரே.....
எல்லா அப்பாக்களும்
நியாயமாய் நடந்து கொள்வதும் மகளின் ஹீரோவாக
மனதில் பதிவதும் ஆனால் மனைவிக்கு நல்ல கணவனா...
அப்பா நல்லவர்
அம்மாவுக்கு அவர் நல்லவரா???
சந்தோஷமாக வாழ்கிறார்களா சகித்து வாழ்கிறார்களா சந்தேகமே நம்மில் உண்டு....
மகளின் குமறல்களை அலரின்
மூலம் படிப்பதில்
மனதிற்கு மகிழ்ச்சி.....
வெற்றி தாமரை
அழகு காதல்....
அலரிடம் மாட்டிக் கொண்டு தாமரையும்
எழிலிலும் மாட்டிக் கொண்ட வெற்றியும்
அருமை அருமை
நட்புக்கு இருவரும்
சிறந்த எடுத்துக்காட்டு......
சரண்
தாய் மாமனாய்
தாயாய் அரவணைத்துச் செல்லும் தங்கமான மாமன்....
நாதன் வளர்மதி
கணவன் சொல் பேச்சை
தட்டாத மனைவி வளர்...
கணவனின் கோபத்தையும் மகளின் பிடிவாதத்தையும் மகனின் வளர்ப்பிலும் உள்ளுக்குள்ளே அழுது
புதைந்து கொண்டிருக்கும்
பல மனைவிகளின் எடுத்துக்காட்டு.....
நாதன்
சுயமாய் உழைத்து
சம்பாதித்து ஒரு நிலைக்கு வந்து சுற்றத்தையும் பாதுகாத்து சொந்தங்களை அரவணைத்து சென்றாலும் சில இடங்களில் கணவனாய் மாறி நிற்கும் பல கணவன்களின் எடுத்துக்காட்டாய் நாதன் ....
தன் தவறையே உணராமல்
தலை நிமிர்ந்து நிற்கும்
தலைவன்.....
நெஞ்சத்தில் அன்பையும் மஞ்சத்தில் காதலையும் நிறைத்து சஞ்சலம் இன்றி வாழும்
இளம் ஜோடிகள்......
நெஞ்சமெல்லாம் அலரே...
அருமை......
வாழ்த்துகள் சகி......
மிக்க நன்றிகள் கோமதி டியர் உங்கள் ஆதரவில் அகமகிழ்ந்தேன் நாளை இரண்டாம் பாகம் பதிவிட தொடங்கி விடுவேன்Hi ma Migavum arumaiyaga irunthathu , ithil Ezhil character super, waiting for more stories of yours, keep up the good work
நன்றிகள்அருமையான கதை.....