fantasy story என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் ஒரு fantasy கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் தேவதையிடம் வரம் கேட்டேன்.
ஒரு தேவதை இருக்கணும், ஆவிகள் இருக்கணும் கூடவே முன் ஜென்ம கதையாகவும் இருக்க வேண்டும்.{அப்பாடா ஒரே கதைல எல்லாம் வந்திருச்சு}
முதல் அத்தியாயத்தை படிச்சிட்டு நிறைய பேர் இது என்ன சின்ன குழந்தைங்க கதை போல இருக்கே! என்று கதையை வாசிக்காம விட்டுட்டாங்க போல, என்னடா யாருக்கும் கதை பிடிக்கலையா? நிறுத்திடலாமான்னு நானும் சில நேரம் யோசிச்சதுண்டு. ஆனா silent readers அதிகமானவர்கள் இருக்கிறாங்க so கதையை எழுதுரத்துல எந்த தயக்கமும் இல்ல.
தேவதை ருத்ரமகாதேவில ஆரம்பிச்சு மதியோட family , friend and முன்ஜென்மம் வரை பாத்துட்டோம்.
அசோக் சாம்ராட்டின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவன்தான் அக்ஷய் என்று இரண்டாம் அத்தியாயத்தில் வலியுறுத்தி கூறும் பொழுதே நிறைய twist களை நீங்க எதிர்பாத்திருக்க வேண்டும்.
அடுத்து அஜித் யாருடைய மகன் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம் அத்தோடு அந்த உண்மை அவனுக்கு எப்படி தெரிய வருகிறது என்பதையும் பாத்திடலாம்.
இதுபோக பிர்ஜு.... அதை கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இன்னும் என்ன இருக்கு?.... வெற்றி எங்க? மதிக்கு முன்ஜென்ம நியாபகங்கள் வருமா? வராதா? ருத்ரமாதேவியும் அக்ஷையும் சந்திப்பார்களா? சந்தித்தால்.... மதிக்கு உண்மை எல்லாம் தெரிந்து விடுமே! {ஹாஹாஹா}