தேவதையிடம் வரம் கேட்டேன் P21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (15).jpg

யோசனைக்குள்ளான அக்ஷய் "ஆமா சிம்ரன் நம்ம கூட தானே! வாரா?" மதியை திரும்பி பார்த்து கேட்க



"இல்ல. நம்மள போக சொன்ன. அவ வந்து சேருறேன்னு சொன்னா"



"இந்த சிம்ரன நம்பலாமா?" அக்ஷய் சந்தேகமாக மதியை நோக்க



"செத்துப்போன பொண்ணையே சந்தேக படுறீங்களா?" அவனை நன்றாகவே முறைத்தாள் மதி.



"நான் எல்லாரையும் சந்தேகப்படுவேன் மதி. ஏன் எங்க அப்பாவையே சந்தேகப்படுவேன். நான் சந்தேகப்படாத ஒரே ஜீவன் அம்மா மட்டும் தான். இப்போ நீ. சில சமயம் என்னையே சந்தேகப்படுவேன்னா பாரேன்" என்றவன் சிரிக்க



"என்னது உங்கள நீங்களே! சந்தேக படுறீங்களா? இதெல்லாம் நம்பும்படியா இருக்கு?" தன்னை நம்புவதாக சொன்னவனை பெருமையாக ஒரு நொடி பார்த்தவள் கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தாள்.



"பின்ன இந்த போலீஸ்காரிக்கிட்ட கைதாகி இருக்கிறத நினைச்சா எனக்கே ஆச்சரியமாக இருக்கு, உண்மையா? பொய்யான்னு? சந்தேகம் வேற அதான் அடிக்கடி சந்தேகம் வருது" என்றவன் வாய் மூடி சிரிக்க மதியால் அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.



"மதி இவனை கிண்டல் செய்தால் அவன் உன்னை கிண்டல் செய்துகொண்டிருக்கிறான். இவன் கிட்ட பல்பு வாங்குறதுதான் உன் வேல. என்ன மாதிரி சிட்டுவேஷன் போய்கிட்டு இருக்கு இப்போ உனக்கு இந்த நையாண்டி தேவையா?" மதியின் மைண்ட் வொய்ஸ் ஏகத்துக்கும் குரல் கொடுக்க அமைதியாக அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்க்கலானாள்.

download (17).jpg

"மதி இப்போ உன் கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். சிம்ரன் இல்லங்குறது நல்லதுதான்" அவள் அமைதியை குலைத்தான் அக்ஷய்.



அக்ஷையின் குரலின் அமைதியே விஷயம் ரொம்ப சீரியஸ் என்று புரிந்து கொண்ட மதி கண்களை அக்ஷையை விட்டு திருப்பினாலில்லை.



"வீட்டில் வைத்து கூட என்னால் உன் கிட்ட இதை பேச முடியாது. இது எனக்கும் அப்பாகும் மட்டும் தெரிந்த ரகசியம்" என்றவன் நெற்றியை தடவிக்கொள்ள மதி அவனை கண்சிமிட்டாமல் பாத்திருந்தாள்.



"எட்டு மாதங்களுக்கு முன் நான் அப்பாவை சிங்கப்பூர்ல வச்சி சந்திச்சேன். ரகசிய மீட்டிங்கோ, திட்ட மிட்ட மீட்டிங்கோ கிடையாது. அவர் ஒரு பிஸ்னஸ்க்காக வந்திருந்தார், நானும் என் வேலையாக திடீருனு போய் இருந்தேன். அந்த ரெண்டு நாளும் அவர் கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு, என் வேலைகளை பாத்துகிட்டு டைம் ஒதுக்கி கூடவே இருந்தேன்.



திடீருனு அவருக்கு உடம்பு முடியாம போச்சு. ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணேன். பெருசா ஒன்னும் இல்லன்னுதான் டாக்டர் சொன்னாரு. மனசு கேக்காம, அவரை வற்புறுத்தி புள் பாடி செக்கப் பண்ண வச்சிச்சேன். அதுல அவருக்கு ஸ்லொவ் பாய்சன் கொடுக்க படுறத கண்டு பிடிச்சேன்"



"என்ன சொல்லுறீங்க அக்ஷய்"



"எஸ் மதி. எனக்கு அந்த பொம்பள மேலதான் சந்தேகம். உடனே அப்பாகிட்ட பேசினேன். மூணு வேலையும் வீட்டு சாப்பாடுதான். பிரேக்பஸ்ட், டின்னர் வீட்டுல, வீட்டாரோடு சாப்பிடுறவரு, லன்ச் வீட்டுல இருந்து வரும் சாப்பாட்டை தான் சாப்பிடுறாரு. அங்கேயே அவருக்கு டிரீட்மென்ட் ஆரம்பிச்சிச்சு, ஹெல்த் இஸு சமயக்காரன் முதல் தனியா பி.ஏ வர என் ஆள வச்சி என் கண்காணிப்புக்கு கொண்டு வந்தேன்"



"தங்க் கோட்" மதி நிம்மதி பெருமூச்சு விட அக்ஷய் தொடர்ந்தான்
 

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி சமேலி
கட்டின புருஷனுக்கே அஜய்யின் அம்மா ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்காளா?
சீ இவளெல்லாம் ஒரு பொம்பளையா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடிப்பாவி சமேலி
கட்டின புருஷனுக்கே அஜய்யின் அம்மா ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்காளா?
சீ இவளெல்லாம் ஒரு பொம்பளையா?
இன்னும் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கு:p;)
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கு:p;)
அடங்கொன்னியா
இன்னும் டுவிஸ்ட்டா?
நான் தாங்குவேனா, மிலா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top