Rajesh Lingadurai
Active Member
நான் குறிப்பிட்ட விரும்பியது இது அழிக்கமுடியாதது இதன் சாட்சிகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன
யாரவது இதை தூக்கி நிறுத்தணும் போராடனும் அவசியமில்லை ஒவ்வொரு தமிழனுக்கும் இயல்பாய் இந்த உணர்வு வரவேண்டும்
தாய் மீது பாசத்தை வை என்று சொல்லிக்கொடுத்து வராது
அழிந்துவிடும் என்ற பயமே வேண்டாமென்று நினைப்பதால் அப்படி சொன்னேன் விரிவாக எழுதாமல் மனதில் பேசியதை அப்படி எழுதிட்டேன்
வலித்தால் அம்மா என்றும் அப்பா என்றும் அழைத்தால் அவன் இன்னமும் பூர்விகத்தை அழிக்க நினைக்கவில்லை என்றுதான் அர்த்தம் அவன் சிந்தனைகள் தாய் மொழி கொண்டே அமையும் மூத்த மொழி என்று தெரிந்தால்தான் ஏற்று கொள்ள சுணக்கம் காட்ப்படுகிறது
காலம் காலமாய் உலகத்தில் போர் என்று நடந்து பல விஷயங்கள் மருவி வருபவை தான் இதில் இயர்கையும் அடக்கம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி. உங்கள் கருத்தாழத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழன் என்ற உணர்வு உண்மையில் அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.
பள்ளிக்கூடத்தில், ஆங்கில மோகத்துக்கும், ஹிந்திக்கும் ஆசைப்பட்டு தாய்மொழி தமிழே இல்லையென்றாலும், அதையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெற்றோர் எத்தனை பேர். இன்றைய தலைமுறைக் குழந்தைகளால் தமிழை சரளமாக வாசிக்க முடியவில்லை. தமிழில் பிழையின்றி எழுத முடியவில்லை. தமிழுக்காக இந்திய அரசாங்கத்திடம் மட்டுமல்ல, நம் மக்களிடமே போராட வேண்டியிருக்கிறது. அதனால் போராடத் தேவையில்லை என்ற கருத்தை ஏனோ என்னால் மனதார ஏற்க முடியவில்லை.
தமிழ் வரலாறாய் இருப்பதை விட, நமது வாழ்வியலாய் இருக்க வேண்டியது முதன்மையானது என்பது எனது எண்ணம்.