கனமான பதிவு சவீதா.மூனு நாளா அருளு மூனு வேளையும் சாப்பிடாம இருந்ததை அன்னப்பூரணி கவனிக்கலையா.ருத்ரா சொன்னதுக்காக இப்படி பட்டினியா இருந்து நிரூபிக்க நெனச்சது சரியில்லை.
நல்லவேளை டாக்டருக்கு அன்னப்பூரணியை தெரிஞ்சதால ருத்ரா தப்பிச்சான்.அருள் இருக்கும் நிலமைய பார்த்த டாக்டர் போலிஸ்க்கு சொல்லாம இருந்தது பெரிய விஷயம்.
தனக்கு ஆதரவாய் ஒரு ஜீவன் இருப்பதை,அருள் இப்போதாவது புரிந்து கொண்டாளே .
ஏரியா சரியில்லைனா வேற இடத்துல வீடு பார்த்துக்க வேண்டியது தானே,காயத்ரி வீட்டு மாடியில் இருக்கனும்னு அவசியம் இல்லையே.அவன் மட்டுமாப்பான்னு சொன்ன அருள்,மா என தொடங்கியது மாமாவா.
என்னப்பா அருளோட நிலை அடுப்புக்கு தப்பி வாணலியில் விழுந்த கதை ஆயிடுமோ????
காத்திருக்கும் சீதைக்கு எல்லாம்
ராமன் கிடைப்பதில்லை
ராவணனுக்கு சீதை என்று
பிரம்மன் எழுதவில்லை
புதிய பாதை போட்டுக்கொள்ள
யாவரும் மறுப்பதில்லை
பலிகள் கேட்கும் பழமை தனை
யாவரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும்
தெய்வம் இல்லை
அத்தை கண்களில்
அன்னை தோன்றினால்...