அடிப்பாவி அஞ்சனா
கருப்புன்னு ஆருத்ராவைப் பிடிக்கலைன்னா அவனைக் கல்யாணமே செஞ்சிருக்க வேண்டாமே
எவ்வளவு பொய்? எத்தனை புனைசுருட்டு?
இவளையெல்லாம் நடுரோட்டில் நிற்க வைத்து சவுக்கடி கொடுக்கணும்
எப்படி இவளிடமிருந்து ருத்ரா தப்பித்து வந்தான்?
அந்த பதினைந்து பவுன் நகை என்னவாச்சு?
இன்றைய தேதிக்கு ஆறு லட்சமாச்சே
கல்யாணத்துக்கு பேசறப்போ ருத்ரா பார்க்கற வேலை பிடிக்கலைன்னு சொன்னா,நிச்சயத்தின் போது பார்த்து விட்டு கருப்பா இருக்கான்னு சொல்றா, முதலிரவு அன்று ருத்ராவோட கைய பார்த்து முகத்தை சுளிக்கறா,முதல் கோணல் முற்றும் கோணலாகி விட்டது.
இவளே கல்யாண அலைச்சல் தூங்குனா சரியா போய்டும்னு சொல்றா,சரி தூங்குன்னு சொன்னா... இவன் என்ன இப்படி இருக்கான் நினைக்கிறாளே.அடிப்பாவி...இவ வீட்ல வெளியே பாத்ரூம் வச்சுட்டு,பாத்ரூம்னா பெட்ரூம்ல இருக்கனும்னு சொல்றா.
அடியேய்...பக்கத்து வீட்டு பக்கிய தான் பிடிச்சிருக்குன்னா கல்யாணம் பேசறப்போவே வேணாம்னு சொல்ல வேண்டியது தானே.அடுத்தவன் பொண்டாட்டி என தெரிஞ்சும் கட்டிபுடிக்கறான் அவனுக்காக ருத்ரா மேல அநியாயமா பழியை போட்டு போயிருக்கா ராட்சஷி.
வசதிக்காக கல்யாணம் செய்து ருத்ராவோடு வாழாமலேயே,ஊர் முன் அவன் வாழ்க்கையை சீரழித்ததுடன்,தன் குட்டு வெளிபட்டு விடாமல் இருக்க, அருளிடம் ருத்ராவை பற்றி இளாக்காரமாக பேசி அவனை விட்டு போகச் சொல்றாளே பொம்பளையா இவ.