தாமரைக்கு என்ன தான் பிரச்சனை,வேலை செய்யறவனுக்கு போன் போட்டு தொந்தரவு பண்ணுது.நடந்ததை,அம்மாட்ட அவ பேசுனதை சொல்லாம நான் உனக்கு முக்கியம் இல்லையான்னு கேட்குது.
ஒருத்தி ஓடிப்போனா வந்தவளும் அப்படியே செய்வாங்கறது போல பேசுது,அவளை நம்புன மாதிரி இவளையும் நம்பாதீங்கன்னு சொன்னவ,வேற என்ன அப்படி பெரிசா சொன்னேனு கேட்குது.இப்படி பேசுனா,இனிமே என்கிட்டயும் பேசாதேன்னு ருத்ரா சொன்னது சரிதான்.
என்னது...இவர் பொண்டாட்டிய அழ வைக்கிறாங்களா.கூடவோ,குறையவோ ஒரு வார்த்தை விட்டிருப்பாளா.உங்க பொண்டாட்டிகாக நீங்க பேசறதை போல,என் பொண்டாட்டிகாக நான் பேசமாட்டேனா,நான் தனியா இருந்தா அக்காவுக்கு சந்தோஷமான்னு நல்லா கேட்டான்.
அவள சாப்பிட்டியான்னு ஒரு தடவை கூட கேட்கலைன்னு இப்போதாவது தோனுச்சே.
அருமையான பதிவு சவீதா.
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை
கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்காதே
ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்
என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி