சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அன்னபூரணியம்மா இன்னமும் தாமரையிடம் பேசவில்லையா?
சூப்பர் லேடி

அக்கா மாமாவிடம் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசும் ஆருத்ரா அருளாசினியிடம் மட்டும் அரகென்ட்டா இருக்கானே
டாக்டர் திட்டின பிறகாவது மாறுவானா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
தாமரைக்கு என்ன தான் பிரச்சனை,வேலை செய்யறவனுக்கு போன் போட்டு தொந்தரவு பண்ணுது:oops::oops:.நடந்ததை,அம்மாட்ட அவ பேசுனதை சொல்லாம நான் உனக்கு முக்கியம் இல்லையான்னு கேட்குது:unsure::unsure::unsure:.

ஒருத்தி ஓடிப்போனா வந்தவளும் அப்படியே செய்வாங்கறது போல பேசுது:cautious::cautious:,அவளை நம்புன மாதிரி இவளையும் நம்பாதீங்கன்னு சொன்னவ,வேற என்ன அப்படி பெரிசா சொன்னேனு கேட்குது:mad::mad:.இப்படி பேசுனா,இனிமே என்கிட்டயும் பேசாதேன்னு ருத்ரா சொன்னது சரிதான்(y)(y)(y).

என்னது...இவர் பொண்டாட்டிய அழ வைக்கிறாங்களாo_Oo_O.கூடவோ,குறையவோ ஒரு வார்த்தை விட்டிருப்பாளா:eek::eek:.உங்க பொண்டாட்டிகாக நீங்க பேசறதை போல,என் பொண்டாட்டிகாக நான் பேசமாட்டேனா,நான் தனியா இருந்தா அக்காவுக்கு சந்தோஷமான்னு நல்லா கேட்டான்(y)(y).

அவள சாப்பிட்டியான்னு ஒரு தடவை கூட கேட்கலைன்னு இப்போதாவது தோனுச்சே:sneaky::sneaky::sneaky:.
அருமையான பதிவு சவீதா:love::love::love:.
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை
கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்காதே
ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்
என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top