உறவும் பிரிவும் உன்னாலே P5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (11).jpg

ஷக்திதான் நெருப்பில் இருப்பது போல் இருக்கலானான். கல்லூரியில் இரண்டு வருடங்களாக அவன் காதலிக்கும் ஓவியாவிடம் போன வாரம்தான் காதலிப்பதாக கூறி இருந்தான். அவளும் சக்தியை காதலிப்பதாக கூற, சிறகில்லாமல் பறந்தவன் அவளோடு நேரம் செலவிடக் கூட முடியாமல் அண்ணனின் திருமணத்துக்கு வந்தால் அவனுக்கு திருமணம் என்று அன்னை சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம்?

அன்னையின் பயமும் புரிகிறது. இங்கு இருக்கும் சூழ்நிலையும் புரிகிறது அதற்காக திடிரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா? முடியவே முடியாது. அன்னையிடம் மறுத்துப் பார்த்தான். கெஞ்சிப் பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.

நடப்பது நடக்கட்டும் இதுதான் தன் விதி என்று அமர்ந்தவனுக்கு அடுத்த இடியாக, கௌஷிதான் மணமகள் என்று அறிய நேர்ந்ததும் நொறுங்கிய விட்டான். அவனுக்கு எப்பொழுதும் கௌஷியை பிடிக்காது. அவளோடு எப்படி? ஒரு காலமும் முடியாது. நிச்சயமாக முடியாது. அவன் மனம் கூவ, தந்தையிடம் சென்று நின்றான்.

"சக்தி ரொம்ப நன்றி ப்பா... உங்க அம்மா வெற்றி கிட்ட கேட்காம கல்யாண ஏற்பாட்டை செய்தது தப்புதான். அதற்காக எதிரியை பழிவாங்குறது போல அவன் இப்படி பண்ணி இருக்கக் கூடாது. உன் கைலதான் எங்க குடும்ப மானமே இருக்கு" என்று பேசி அவன் மனதை கரைத்து விட்டார் கபிலர்.

அதன்பின் கௌஷிடம் பேசி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. பேசி இருந்தால் கௌஷி திருமணத்தை நிறுத்தி இருப்பாளா? சந்தேகம்தான்.

கௌஷியை தனது மணமகளாக பார்க்கும் பொழுது சக்திக்கு எரிய ஆரம்பித்தது. தனக்கு அவளை பிடிக்கவில்லை என்று தெரிந்தும் எப்படி இவளால் அலங்கரித்துக்கொண்டு தன் முன்னால் வந்து அமர்ந்திருக்க முடியும் என்று அவளை முயன்ற மட்டும் முறைக்கலானான்.



அவளுக்கும் தெரியுமே சக்திக்கு அவளை பிடிக்காது என்று. அவனுக்கு எங்கே தெரிய போகிறது அவளும் அவளுடைய பெற்றோரிடம் போராடிப் பார்த்து விட்டு தொற்றுப் போய்தான் அமர்ந்திருக்கின்றாள் என்று.

அப்படியே ஷக்தி வந்து அவளிடம் பேசி இருந்தால் கூட குடும்பத்தாருக்காக நடக்கும் திருமணம் என்றுதான் அவனிடம் கூறி இருப்பாளே ஒழிய ஒரு பொழுது தனது பெற்றோரின் பேச்சை மீறி நடந்திருக்க மாட்டாள்.

ஐயர் மந்திரம் ஓத வேண்டா வெறுப்பாக கௌஷியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டு அடுத்து என்ன எனும் விதமாக அமர்ந்திருந்தான் ஷக்தி.

அந்த நேரத்தில் தான் வெற்றி அழைத்து தான் சந்தியாவை திருமணம் செய்து கொண்டதாக தம்பியிடம் கூறி இருந்தான்.

UD தர கொஞ்சம் late ஆகும் எத்தனை நாள் என்று தெரியல மன்னிச்சிக்கோங்க friends .
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

அடப்பாவி சக்தி
இவன் மூஞ்சிக்கு லவ்வு வேறேயா?
விடாதே கௌஷி
உன்னைப் பிடிக்காத சக்தியை உன்னை தொட விடாதே

ஆறு வருஷம் எவளோ ஒருத்தி கூட வாழ்ந்துட்டு அவள் விட்டுட்டு ஓடிப் போன பிறகு பொண்டாட்டின்னு உன்னைத் தேடி வர்றான்

ஓவியா ஓடிப் போனதாலே உன்னை ஊறுகாய்ன்னு நினைத்து வர்றவனுக்கு பிஞ்சு போன செருப்பாலேயே சக்தியை இரண்டு போடு கௌஷி
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான pc மிலா:love::love::love:.வேற பொண்ண விரும்புனதால தான் அம்மா சொன்னதுக்காக வேண்டா வெறுப்பா தாலி கட்டுனவன்,கௌசிய விட்டுட்டு வர சொல்லவும் போய்ட்டானா:mad::mad::mad:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top