கார்த்திக் பதறியடித்துக் கொண்டு ஜமீனை அடைய மதில் சுவறுகளில் எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை தவிர மாளிகையையே கும்மிருட்டில் இருந்தது. காவல்நிலையத்தில் வேலை முடிந்தும் வீடு செல்ல மனமில்லாது அமர்ந்திருந்தவனுக்கு கவியின் அலைபேசியிலிருந்து குறுந் செய்தி வந்திருக்கவே! அதில் சீக்கிரம் ஜமீன் மாளிகைக்கு வரும் படி இருக்க என்ன விஷயம் என்று கேட்டு பதில் அனுப்பியவனுக்கு பதிலும் வரவில்லை. கவியின் அலைபேசிக்கு அழைத்துப் பார்க்க அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே பதில் வந்தது. கவிக்கு என்ன பிரச்சினையோ என்று அடித்துப்புப் பிடித்து வண்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு வர மாளிகையே இருளில் மூழ்கி இருந்தது.
கார்த்திக் உள்ளே அடியெடுத்து வைக்கவும் அத்தனை மின் குமிழ்களும் எரிய வீட்டாரனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட ஆசுவாசமடைந்தான் கார்த்திக். ஆருத்ராவின் கைகளில் அவனுக்கான பார்த் டே கேக் இருந்தது. முகம் கொள்ளா புன்னகையில் அவள் முகம். அந்த அதீத மின் விளக்குகளின் ஒளியில் தேவதையாய் மனைவி தெரிய கார்த்திக்கின் காதல் மனம் ஒருகணம் நின்று துடித்தது. தலையை உலுக்கிக் கொண்டவன் கவியை தேட ஆதியின் அருகில் நின்றிருந்தாள் கவிலயா.
கவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சிக்காகவே ஆருத்தாவின் புறம் அடியெடுத்து வைத்த கார்த்திக் கேக்கின் மீதிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியை மெதுவாக ஊதியனைக்க அவன் முகத்துக்கு நேராக கேக்கை பிடித்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் முத்திலும் அவன் மூச்ச்சுக்காற்றுப் பட்டு மேனி சிலிர்க்கலானாள்.
எத்தனை நாள் ஒதுக்கம்? எத்தனை நாள் பிரிவு? எத்தனை நாள் ஏக்கம்? கணவனின் மூச்சுக்கு காற்றுப் பட்டதும் அழைக்கலைந்துக் கொண்டிருந்த அவள் மனம் அடங்கி விட்ட மாயம்தான் என்ன? அந்த அளவுக்கு கார்த்திக் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து கொண்டவள் அதை அவன் உணர்ந்து கொள்ளாமல் போனதை நினைத்து ஒரு கணம் மனம் வருந்தினாள். மறுகணமே கணவனோடு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக இருக்க போகும் தருணத்தை இழக்க விரும்பாமல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டாள்.
"என்ன பொம்மு. கேக்க உன் கைலயே வைச்சிருக்கியே கட் பண்ண எண்ணமில்லையா?" ஆதி சத்தமாக சொல்ல
"அப்படியே லவட்டிட்டு வீட்டுக்கு கொண்டு போய்ட போறா மாப்புள. சீக்கிரம் புடுங்கி மேசைல வை" சீனு சொல்லியவாறே ஆருத்ராவின் கையில் இருந்த கேக்கை எடுத்து மேசையில் வைத்து சிறிய கத்தியை கார்த்திக்கின் கையில் கொடுத்தான்.
கரகோசத்துக்கு மத்தியில் கார்த்திக் கேக்கை வெட்ட ஆருத்ரா ஆசையாக கணவனின் முகம் நோக்கி நிற்க முதல் துண்டை கவியின் புறம் நீட்டி இருந்தான் கார்த்திக். ஆருத்ராவின் முகம் விழுந்து விட கவிக்குமே கார்த்திக் மேல் கோபம் வந்தது
"கார்த்தி முதல்ல உன் பொண்டாட்டிக்கு ஊட்டு" கவி கடிந்தவாறே சொல்ல
"அவ நேத்து வந்தவ கவி நம்ம ப்ரெண்ட்ஷிப் அப்படியா நீ பொறந்ததிலிருந்தே இருக்கே! எப்போதும் முதல் துண்டு உனக்குத்தான் கொடுப்பேன். காலம் காலமாக வந்த பழக்கத்தை உடனே மாத்த முடியுமா?" கார்த்தி ஆருத்ராவை சீண்டவேன்றே சொல்ல
ஆருத்ராவின் முகம் இன்னும் கறுத்தது. தனக்கு கார்த்திக்கின் மனதில் இடமே இல்லையா என்ற ஏக்கம் பிறந்து தன்மீதே கழிவிரக்கம் ஏற்பட கண்களின் ஓரம் நீர் நிரம்ப ஆரம்பிக்க யாரும் பார்த்து விடாமல் புன்னகைத்தவாறே இமைத்தட்டி உள்ளிழுத்தாள்.
Last edited: