ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த teaser introல கொடுத்த teaser நிறைய பேருக்கு குழப்பத்தத்தான் கொடுத்திருக்கு so..
"ஏய் கிழவி எதுக்கு இப்போ கத்துற? இங்க என்ன எழவா விழுந்திருக்கு? இப்படி கத்துற?" காதை குடைந்தவாறு கோதை பேச
"ஏன் டி அறிவிருக்கா உனக்கு? படிச்சவ தானே! டி நீ... உங்கப்பன் உனக்கு மாப்புள பாத்திருக்கான்னு சொன்னா... அவன் யாரு என்னனு விசாரிக்க மாட்டியா? மாப்பிள பாத்திருக்கான்னு சொன்னதும் சரினு சொல்லிட்ட"
"இங்க பாரு கிழவி... நான் என்ன எவனாயாச்சும் இழுத்துகிட்டு ஓடுறேன்னா சொல்லுறேன்" அன்னையை ஒரு பார்வை பார்த்தவள் "நான் என் அப்பா பார்த்த மாப்பிளையைதானே! கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறேன்" அமைதியாக அம்மாச்சிக்கு பதில் சொல்ல
பெத்த அன்னையே! ஓடிப்போய்தான் கல்யாணம் செய்தாள் என்பதை சைக்கிள் கேப்பில் சொல்லிக்காட்ட இவளால் மட்டும்தான் முடியும் என்று நொடித்துக்கொண்ட வடிவுப்பாட்டி "அதான் உங்கப்பன் பார்த்தாலும் பார்த்தான் சீமைல இல்லாத மாப்பிளையை பாத்திருக்கான். எவனாச்சும் பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிளையை பாப்பானா? மூத்ததாரத்தோட தம்பிய இரண்டாம் தாரத்து பொண்ணுக்கு பாத்திருக்கான். அறிவு இருக்கா அவனுக்கு. அது சரி அவனுக்கு அறிவு இருந்திருந்தா ரெண்டு பொம்பளயத்தான் கட்டி இருப்பானா? அவன் பொண்ணுதான் இப்படி ஒரு மாப்பிளைக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சிருப்பாளா?"
"இங்க பாரு கிழவி எங்க அப்பாவ அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுறத முதல்ல நிறுத்து" கோதை பல்லைக் கடித்தவாறு சொல்ல
"இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல" கழுத்தை நொடித்தார் வடிவுப்பாட்டி.
"எங்க அப்பாக்கு அறிவிருக்கா இல்லையானு உன் கிட்ட சேட்டிபிகேட் கேட்டாரா? பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல" அதையும் தன் அன்னையை பார்த்துக் கூற
"அடியேய்... கிடைக்கிற கேப்ல எல்லாம் உன் அம்மாவ வையாத, இங்க நாம பேசுறது உன் கல்யாண விஷயம். எங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை" வடிவு முடிவாக சொல்ல
"எங்களுக்குனா? யாருக்கு?" கோதை தெனாவட்டாகவே! கேட்க தடுமாறி நின்றார் வடிவு.
கண்ணபிரானின் பேச்சுக்கு அபரஞ்சித்தை மறுப்பு தெரிவிக்க மாட்டாள். வசந்த் சின்ன பையன் என்று அவன் பேச்சு எடுபடாது. மறுப்பு தெரிவிக்க வேண்டிய கோதை திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள். இங்கே! வடிவு நாங்க என்று யாரை குறிப்பிடுகிறாள்?
"சொல்லு அம்மாச்சி... நாங்க.. நாங்கனு சொன்னியே! உன் கூட நாலு பேர் இருக்காங்களா? எங்க அவங்க?" கிண்டலாக மீண்டும் கோதை வினவ
"என்ன டி பேசாம நிக்குற? வாயத் தொறந்து உன் புருஷன் கிட்ட சொல்லு உன் சக்காலத்தி தம்பிக்கு உன் பொண்ண கொடுக்க மாட்டேன்னு" மகளிடம் பாய்ந்தார் வடிவு.
உண்மையில் அபரஞ்சிதாவுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. கணவனிடம் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை. மகளிடம் பேசவும் முடியாமல் அன்னையை ஏவி விட்டிருக்க வடிவுப்பாட்டி பேத்தியிடம் பேசி புரியவைக்க முடியாமல் மகளிடம் பாய்ந்து சொன்னது மகள்தான் என்று காட்டிக்கொடுத்திருந்தார்.
"இங்க பாரு கிழவி... அவங்க சொல்லுரதுலையும் ஒரு நியாயம் இருக்கு இல்ல. அந்தம்மா பொண்ணுக்கு ஊரறிய கல்யாணம் பண்ணும் போது நாம பிரச்சினை பண்ணுவோம்னு, இந்த விஷயம் தெரிஞ்சா தன் பொண்ணு வாழ்க என்ன ஆகுமோ! எங்குற பயம் இருக்கும். அந்த அம்மா கரெக்ட்டாதான் யோசிச்சு முடிவெடுத்திருக்காங்க" கயந்திகவை கோதை புகழ,
பேத்தியை முறைத்த வடிவு "அடியேய் கூறு கெட்டவளே! உன்ன கட்டிக்கிட்டு கொடும படுத்தினா? இல்ல. உன்ன வச்சி உன் அம்மாவ பிளாக்மெயில் பண்ணா? என்ன டி பண்ணுவ?"
"என்ன கொடும படுத்தினா என்ன பாத்துக்க அப்பா இருக்காரே! இவங்கள பிளாக் மெயில் பண்ணுவாங்களா?" அன்னையை அதிசியப்பிறவி போல் பார்த்தவள் "அப்படி நடந்தா சந்தோஷப்படும் மொத ஆள் நான்தான்" என்று விட்டு செல்ல தலையில் அடித்துக்கொண்டார் வடிவு.
பாட்டி மற்றும் பேத்தியின் சம்பாஷணையை கலந்துகொள்ளவில்லையானாலும் அங்கிருந்த அபரஞ்சிதா மகளின் வார்த்தைகளால் ரொம்பவும் காயப்பட்டு போனாள்.
வீடு வந்த வசந்த்திடம் வடிவு புலம்பித் தீர்க்க, "கூல் அம்மாச்சி இதுக்குப் போய் அவகிட்ட கத்தி டென்ஷனாகி... பிபிய ஏத்திக்கணுமா? எது நடந்தாலும் நல்லதுக்கு நடக்கிறதா எதடுத்துப்போம் சரியா?" என்று கட்டிக்கொள்ள
"நீ வாடா செல்லம் நா உனக்கு டீ போட்டு தரேன்" நொடியில் மனம் மாறி பேரனை அழைத்துக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தார் வடிவு.
"ஏய் கிழவி எதுக்கு இப்போ கத்துற? இங்க என்ன எழவா விழுந்திருக்கு? இப்படி கத்துற?" காதை குடைந்தவாறு கோதை பேச
"ஏன் டி அறிவிருக்கா உனக்கு? படிச்சவ தானே! டி நீ... உங்கப்பன் உனக்கு மாப்புள பாத்திருக்கான்னு சொன்னா... அவன் யாரு என்னனு விசாரிக்க மாட்டியா? மாப்பிள பாத்திருக்கான்னு சொன்னதும் சரினு சொல்லிட்ட"
"இங்க பாரு கிழவி... நான் என்ன எவனாயாச்சும் இழுத்துகிட்டு ஓடுறேன்னா சொல்லுறேன்" அன்னையை ஒரு பார்வை பார்த்தவள் "நான் என் அப்பா பார்த்த மாப்பிளையைதானே! கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறேன்" அமைதியாக அம்மாச்சிக்கு பதில் சொல்ல
பெத்த அன்னையே! ஓடிப்போய்தான் கல்யாணம் செய்தாள் என்பதை சைக்கிள் கேப்பில் சொல்லிக்காட்ட இவளால் மட்டும்தான் முடியும் என்று நொடித்துக்கொண்ட வடிவுப்பாட்டி "அதான் உங்கப்பன் பார்த்தாலும் பார்த்தான் சீமைல இல்லாத மாப்பிளையை பாத்திருக்கான். எவனாச்சும் பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிளையை பாப்பானா? மூத்ததாரத்தோட தம்பிய இரண்டாம் தாரத்து பொண்ணுக்கு பாத்திருக்கான். அறிவு இருக்கா அவனுக்கு. அது சரி அவனுக்கு அறிவு இருந்திருந்தா ரெண்டு பொம்பளயத்தான் கட்டி இருப்பானா? அவன் பொண்ணுதான் இப்படி ஒரு மாப்பிளைக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சிருப்பாளா?"
"இங்க பாரு கிழவி எங்க அப்பாவ அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுறத முதல்ல நிறுத்து" கோதை பல்லைக் கடித்தவாறு சொல்ல
"இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல" கழுத்தை நொடித்தார் வடிவுப்பாட்டி.
"எங்க அப்பாக்கு அறிவிருக்கா இல்லையானு உன் கிட்ட சேட்டிபிகேட் கேட்டாரா? பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல" அதையும் தன் அன்னையை பார்த்துக் கூற
"அடியேய்... கிடைக்கிற கேப்ல எல்லாம் உன் அம்மாவ வையாத, இங்க நாம பேசுறது உன் கல்யாண விஷயம். எங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை" வடிவு முடிவாக சொல்ல
"எங்களுக்குனா? யாருக்கு?" கோதை தெனாவட்டாகவே! கேட்க தடுமாறி நின்றார் வடிவு.
கண்ணபிரானின் பேச்சுக்கு அபரஞ்சித்தை மறுப்பு தெரிவிக்க மாட்டாள். வசந்த் சின்ன பையன் என்று அவன் பேச்சு எடுபடாது. மறுப்பு தெரிவிக்க வேண்டிய கோதை திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள். இங்கே! வடிவு நாங்க என்று யாரை குறிப்பிடுகிறாள்?
"சொல்லு அம்மாச்சி... நாங்க.. நாங்கனு சொன்னியே! உன் கூட நாலு பேர் இருக்காங்களா? எங்க அவங்க?" கிண்டலாக மீண்டும் கோதை வினவ
"என்ன டி பேசாம நிக்குற? வாயத் தொறந்து உன் புருஷன் கிட்ட சொல்லு உன் சக்காலத்தி தம்பிக்கு உன் பொண்ண கொடுக்க மாட்டேன்னு" மகளிடம் பாய்ந்தார் வடிவு.
உண்மையில் அபரஞ்சிதாவுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. கணவனிடம் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை. மகளிடம் பேசவும் முடியாமல் அன்னையை ஏவி விட்டிருக்க வடிவுப்பாட்டி பேத்தியிடம் பேசி புரியவைக்க முடியாமல் மகளிடம் பாய்ந்து சொன்னது மகள்தான் என்று காட்டிக்கொடுத்திருந்தார்.
"இங்க பாரு கிழவி... அவங்க சொல்லுரதுலையும் ஒரு நியாயம் இருக்கு இல்ல. அந்தம்மா பொண்ணுக்கு ஊரறிய கல்யாணம் பண்ணும் போது நாம பிரச்சினை பண்ணுவோம்னு, இந்த விஷயம் தெரிஞ்சா தன் பொண்ணு வாழ்க என்ன ஆகுமோ! எங்குற பயம் இருக்கும். அந்த அம்மா கரெக்ட்டாதான் யோசிச்சு முடிவெடுத்திருக்காங்க" கயந்திகவை கோதை புகழ,
பேத்தியை முறைத்த வடிவு "அடியேய் கூறு கெட்டவளே! உன்ன கட்டிக்கிட்டு கொடும படுத்தினா? இல்ல. உன்ன வச்சி உன் அம்மாவ பிளாக்மெயில் பண்ணா? என்ன டி பண்ணுவ?"
"என்ன கொடும படுத்தினா என்ன பாத்துக்க அப்பா இருக்காரே! இவங்கள பிளாக் மெயில் பண்ணுவாங்களா?" அன்னையை அதிசியப்பிறவி போல் பார்த்தவள் "அப்படி நடந்தா சந்தோஷப்படும் மொத ஆள் நான்தான்" என்று விட்டு செல்ல தலையில் அடித்துக்கொண்டார் வடிவு.
பாட்டி மற்றும் பேத்தியின் சம்பாஷணையை கலந்துகொள்ளவில்லையானாலும் அங்கிருந்த அபரஞ்சிதா மகளின் வார்த்தைகளால் ரொம்பவும் காயப்பட்டு போனாள்.
வீடு வந்த வசந்த்திடம் வடிவு புலம்பித் தீர்க்க, "கூல் அம்மாச்சி இதுக்குப் போய் அவகிட்ட கத்தி டென்ஷனாகி... பிபிய ஏத்திக்கணுமா? எது நடந்தாலும் நல்லதுக்கு நடக்கிறதா எதடுத்துப்போம் சரியா?" என்று கட்டிக்கொள்ள
"நீ வாடா செல்லம் நா உனக்கு டீ போட்டு தரேன்" நொடியில் மனம் மாறி பேரனை அழைத்துக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தார் வடிவு.
Last edited: