MEGALAVEERA
Well-Known Member
Nice epi oh vanthya congrats arul and ruthrà
மண்டையில் இருந்த கொண்டையை மறந்திட்டியே அருளுView attachment 8390
"நீ என்ன சொல்லுற? நான் வந்தது நீ என் வாழ்க்கைல விளையாடினது எதுக்காகன்னு கேட்க?" கிருஷ்ணா முறைக்க
"என்ன டா உளறுற?"
"நான் ஒன்னும் உளறல? நான் அமெரிக்கா போகும் போது உன்ன வர வேணாம்னு சொன்னேன். நீ வரலைனுதான் நானும் நினைச்சி கிட்டு இருந்தேன். நீ வந்தியோ! என்ன வேவு பாக்க ஆள் அனுப்பினியோ! நான் கோதைக்கு கொடுத்த என் போன் நம்பர எடுத்து எனக்கு கோதை அனுப்புறது போல மெஸேஜ் பண்ணி காதலிக்கிறதா சொல்லி, அவளுக்கு கல்யாணம்னு என்ன வர வளச்சு உன் தலைமைல கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்க"
"டேய் என்ன டா என்னென்னமோ சொல்லுற?" அருள்வேல் திகைக்க
"இதெல்லாம் பண்ணது நான் அரசில்ல காலடி எடுத்து வைக்கக் கூடாதுனு தானே உன் குட்டு உடைஞ்சதும் நல்லவன் மாதிரி பேசுறியா?"
"டேய் எத வச்சிடா சொல்லுற? நான் தான் இதெல்லாம் பண்ணேன்னு" முகம் சிவந்தான் அருள்வேல்.
View attachment 8391
"கோதையோட அப்பா உனக்கு கல்யாண பத்திரிக்கை அனுப்பி இருக்காரு அது போதுமே அத போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருக்க"
"ஏன் டா கல்யாண பத்திரிக்கையை யார் வேணாலும் அனுப்பி இருக்கலாம் இல்ல டா.."
"இருக்கலாம். ஆனா போன் நம்பர மாத்தி இருக்கலாம். போன மாத்தாம அந்த போனையே பாவிக்கிறியே! அதுக்கு வேற சிம் போட்டு ஆக்டிவ் பண்ணதும் மாட்டிக்கிட்ட" என்று கிருஷ்ணா சொன்னதும் அருள்வேல் தனது அலைபேசியை வெறிக்கலானான்.