ஐஞ்சு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுதான் டீ கடையா இருந்த எங்க கடைய டீ ஸ்டாலா உயர்த்தினோம். ஊருல எங்களுக்குனு மானம் மாறுவதை எல்லாம் இருக்குங்க ஐயா... அக்கா மூணு வேலையும் சாப்பாடு சமைச்சி கடைக்கு போடும். அப்படித்தான் எங்க பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. யார் வம்புக்கும் நாங்க போறதில்ல. இராத்திரில லாரிகள் வந்து நிறுத்தி சாப்பிடுவாங்க" வார்த்தைகளை கோர்த்து கோர்த்து தங்களை பற்றி யாரும் தவறாக நினைத்து விடக் கூடாதென்று கணபதி பேசுவது அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே! புரிந்தது.
முனீஸ்வரீ வந்ததிலிருந்து அழுதுகொண்டிருந்தாளே! தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. சின்ன மகன் அன்னையின் பிடியை விட முயல்வதும் அவள் இறுக்கிப் பிடிப்பதுமாக இருக்க, மூத்தவன் ஏதோ! சினிமா பார்ப்பது போல் நின்றிருந்தான்.
"ரெண்டு நாளைக்கு முன்னாடி இவரு லாரி சாப்பிட வந்ததுங்க, அப்போ அக்கா சாப்பாடு கொடுத்துட்டு உள்ள போச்சு. என் கிட்ட வந்து இங்க தங்க இடம் ஏதாவது இருக்கானு கேட்டருங்க, வழக்கமா வாறவரு தெரிஞ்சவரு தானேனு நானும் வீட்டு பக்கத்துல இருக்குற குடிசைல தங்க சொன்னேங்க, அது என் நாபனுடையதுங்க. அதுக்கான காச வாங்கி அவனுக்கு காலைல கொடுக்கலாம்னு கல்லால வேற போட்டுட்டேங்குங்க"
"சீக்கிரம் சொல்லு பா..." ஒரு பெருசு காதை குடைந்தவாறே கத்த
"அப்பொறம் நான் தூங்க போய்ட்டேனுங்க, இவரு இவரோட கூட்டாளியோட சேர்ந்து குடிச்சிருக்காரு போல, குடிச்சவரு குடிச்சிட்டு தூங்கோனும் இல்ல. எங்க வீட்டு கதவை தட்டி தண்ணி கேட்டு இருக்காருங்க. அக்காதான் கதவை திறந்திருக்கா..கத திறந்தவள மானபங்க படுத்திட்டாருங்க, காலைல பஞ்சாயத்தாகி போச்சுங்க அக்கா கழுத்துல தாலி கட்ட சொல்லிட்டாங்க, இதுதாங்க நடந்ததுங்க"
முத்தழகிக்கு அதிர்ச்சி எல்லாம் இல்ல. இப்படி ஏதாவது தான் நடந்திருக்கும் என்று தான் ஊகித்தாள்.
"அட வெக்கம் கெட்ட மனிஷா குடிச்சா இப்படியா பண்ணுவ? உன்ன நம்பி உன்ன உன் வீட்டுக்குள்ளேயே! விட முடியாம போய்டுமே! யா..." என்று ஊர் தூற்ற ஆரம்பித்திருக்க,
"ஏன்மா முத்தழகி பாதிக்கப் பட்டதும் ஒரு பொண்ணுதான். இது உன் வாழ்க பிரச்சினையும் கூட, இதுல நீதான் தீர்ப்பு சொல்லணும். உன் தீர்ப்பை வச்சுதான் நான் தீர்ப்பு சொல்லுவேன்" என்றார் செல்வராஜ்.