Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-7
இரண்டு நாட்கள் செல்ல மது வழக்கம்
போல ஹாஸ்பிடல் சென்று வந்தாள்.
வீடே அமைதியே உருவாக
காட்சியளித்துக் கொண்டு இருந்தது.
வீட்டினர் எல்லோரும் கொஞ்சம்
தெளிவாக இருந்தது போலத்
தெரிந்ததை மது கவனித்தாள்.
ஆனால் எல்லாருமே அவரவர்
யோசனையில் ஆழ்ந்து இருந்தனரே
தவிர யாரும் எதுவும் அவளிடம்
கேட்கவில்லை.
"உனக்கு அந்தப் பையனை ரொம்பப்
பிடிக்குமா கண்ணு" என்று ஒரு நாள்
கிடைத்தத் தனிமையில் மதுவிடம்
கேட்டார் ஈஸ்வரி அம்மாள். இதுவரை
பேத்தி அழுதுப் பார்க்காதவர் அன்று
ஒருவனை எட்டு வருடங்களாக
காதலிக்கிறேன் என்று சொல்லி
மூச்சை இழுத்து அழுதுவிட்டுப்
போனது அவருக்குப் பரிதாபமாக
இருந்தது.
"ஆமாம் பாட்டி" என்று அவரின்
முகத்தைப் பார்க்க முடியாமல்
தலையை மட்டும் ஆட்டினாள் மது.
"அந்தப் பையனிற்குத் தெரியுமா?
சொல்லி இருக்கிறாயா?" எனப்
பேத்தியிடம் கேட்டார் ஈஸ்வரி அம்மா.
"இல்லை பாட்டி.. அவருக்குத்
தெரியாது" என்ற மதுவிற்கு பொய்
சொல்கிறோம் என்று மனம்
உறுத்தியது.
"அப்புறம் எதுக்கு வருத்தப்படறே..
உன்னைப் பிடிக்காமல் போகுமா
யாருக்காவது? எதுக்கும்
வருத்தப்படாதே கண்ணு. உன் நல்ல
மனசுக்கு எல்லாம் நல்லதாகவே
நடக்கும்.." என்று பேத்திக்குத்
தன்னால் முடிந்த தைரியத்தைக்
கூறினார் ஈஸ்வரி.
பாட்டியிடம் பேசிவிட்டு அறைக்கு
வந்த மதுவிற்குத் தான் அவனிடம்
பேசியது நினைவு வந்தது. ஜானகி
அம்மாள் எப்படியும் கார்த்திக்கிடம்
சொல்லி இருப்பார்.. என்ன
நினைத்திருப்பானோ.. முருகாகாகா
என்று இருந்தது மதுமிதாவிற்கு..
அடுத்த நாள் வழக்கம் போல மது
வேலையை முடித்துக் கொண்டு நாலு
மணிக்கு கிளம்ப கோயம்பத்தூரில்
ஏதோ மந்திரி அரெஸ்ட் ஆகிவிட்டார்
என்று அவரின் தொண்டர்கள் பிரச்சினை செய்து கொண்டு
இருந்தனர். ஒரு பஸ்ஸிற்கு வேறு தீ
வைத்துவிட்டனர். சித்தப்பாவிற்கு
போன் செய்யலாம் என்று எண்ணிய
மதுவிற்கு அப்போது தான் அவர்,
இன்று தான் ஒரு ஆர்டர் விஷயமாக
திருப்பூர் வரை பதினொரு மணிக்கு
மேல் செல்லவதாகக் காலையில்
வரும்போது சொன்னது நினைவு
வந்தது. என்ன செய்வது என்று
புரியாமல் சுந்தர மூர்த்திக்கு போனில்
கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாள்
மது.
"நான்தான் உன்னிடம் காலையிலேயே
சொன்னேன்ல மது. எனக்கு இந்த
மாதிரி தகவல் கிடைத்தது, இன்று
செல்ல வேண்டாம் என்று நான்
சொன்னேனா இல்லையா?" என்று
கோபமாகப் பேசினார். அவர் எங்கே
மதுவிடம் சொன்னார்.. ஈகோ பார்த்து
மகளிடம் நேரிடையாகவே
சொல்லாமல் காலையில் அனைவரும்
சாப்பிடும் போது பொதுவாகச்
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு.
மதுவிற்கு கோபம் வந்தது..
இருந்தாலும் பதட்டத்தில் அப்பா
கோபப்படுகிறார் என்று கோபத்தை
அடக்கியவள் "அப்பா.. நான் என்ன
அந்த மாதிரி வேலையிலா இருக்கேன்.
நீங்க சொன்னவுடன் லீவ்
போடுவதற்கு" என்று திருப்பிக்
கொடுத்தாள் மதுமிதா.
சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு
கோவிலிற்கு வந்திருந்தார். மகள்
போன் செய்து விஷயத்தை சொன்ன
பொழுது அவருக்கும் என்ன செய்வது
என்று தெரியவில்லை. பேசாமல்
தாமே சென்று கூட்டி வரலாம் என்று
நினைத்த பொழுதுதான் ஜானகி
கோயிலிற்கு வந்து சேர்ந்தார்.
அவருக்கும் காமாட்சி அம்மன் இஷ்ட
தெய்வம் என்பதால் அவரும் அங்கு
வாராவாரம் வருவார்.
"என்ன அண்ணா பதட்டமா
இருக்கீங்க?" என்று சாதரணமாகக்
கேட்டபடி வந்து நின்றார் ஜானகி. உமா
விஷயத்தைச் சொல்ல ஜானகிக்கு
ஒரு யோசனைத் தோன்றியது.
"நான் ஒன்று சொன்னால் தப்பா
நினைக்காதீங்க. வேறு வழியும்
இல்லை. கார்த்திக்கும் கோவையில்
தான் இருக்கிறான். அவனை கூட்டி
வரச் சொல்லிவிடலாமா?" என்று
மனதில் தோன்றியதை மறைக்காமல்
கேட்டுவிட்டார் ஜானகி.
எல்லாருக்கும் ஒரு நிமிடம்
திகைப்புதான், அந்தப் பக்கம் போனில்
கேட்ட மதுவிற்கு வியர்த்து விட்டது.
வேறு வழி இல்லை என்பதால் சுந்தர
மூர்த்தியும் சரி என்று விட்டார்.
கார்த்திக்கிற்கு போன் போட்ட ஜானகி
"கார்த்திக் எங்க இருக்கே?
கிளம்பிட்டயா?" எனக் கேட்டார்.
"ஒரு ஐந்து நிமிடத்தில் கிளம்பி
விடுவேன் ம்மா.. ஏன்? ஏதாவது
வாங்கிட்டு வர வேண்டுமா?" என்றுத்
தன் டேபிள் மேல் இருந்த பைலை
சரிபார்த்தபடி வினவினான் கார்த்திக்.
"இல்லை கார்த்திக்... வந்து.." என்று
இழுத்தவர் அனைத்தையும் சொல்லி
முடித்தார். "நீதான் கார்த்திக் மதுவைக்
கூட்டி வர வேண்டும்" என்று சிறு
கட்டளைக் குரலில் கூறினார்.
"சரி.. மதுமிதா போன் நம்பரை மட்டும்
அனுப்பி வைங்க" என்று போனை
வைத்துவிட்டான். ஜானகிக்கே
அதிசயம் தான்.. மகன் எரிச்சல்
படுவான் அல்லது ஏதாவது சாக்கு
போக்கு சொல்லுவான் என்று
நினைத்திருந்தார் ஜானகிக்கு மகன்
அளித்த பதில் வியப்பே. கார்த்திற்கு
மதுவின் நம்பரை அனுப்பி வைத்தார்.
கார்த்திற்கு மதுவின் நம்பரை அனுப்பி
வைத்த ஜானகி மதுவிற்கும்
கார்த்திக்கின் நம்பரை
சுந்தரமூர்த்தியிடம் சொல்லி
மதுவிற்கும்அனுப்பினர். ஆனால்
அந்த நம்பர் அவளிடம் முன்பே
இருந்ததை யார் அறிவார்?
நம்பரைப் பார்த்த மது அதே நம்பர்
என்று எண்ணி புன்னகை சிந்தினாள்.
மறுநொடியே அந்த நம்பரிலிருந்து
மதுவிற்கு கால் வந்தது. TL என்ற
பெயரில் அவன் நம்பரை பதிவு செய்து
வைத்து இருந்தவள் அதில் இருந்து
கால் வந்தவுடனே ஏதோ தன் இதயம்
1000 மடங்கு அதிகமாகத் துடிப்பதை
உணர்ந்தாள்.
கை நடுங்க அட்டென்ட் செய்து காதில்
வைத்தவளிடம் "எந்த இடத்தில் இருக்க?
என்று நேராக விஷயத்திற்கு வந்து
கேட்டான் கார்த்திக்.
"நீலாம்பூர் பஸ் ஸ்டாப்" என்றாள்
மதுமிதா.
"சரி வருகிறேன்" என்று
வைத்துவிட்டான். கார் நம்பரை
மெசேஜும் அனுப்பினான்.
சொல்லிவிட்டு அவன்
வைத்துவிட்டான். ஆனால் மதுவால்
தான் சரியாக நிற்கக் கூட
முடியவில்லை. எப்படி அவன் முகத்தில்
முழிப்பது என்று இருந்தது.
கைகால்கள் எல்லாம் சில்லிட்ட மாதிரி
ஆகிவிட அப்படி இப்படி என்றும்
டான்ஸ் ஆடியபடி நின்றிருந்தவளை..
பக்கத்தில் இருந்த ஒருவர் இவளின்
செய்கையை கவனிக்க மது தன்னைத்
தானே கடிந்தபடி கொஞ்சம்
அமைதியாக நின்றாள். சரியாக பத்து
நிமிடத்தில் வந்து சேர்ந்தான் அவளின்
இதயத்துடிப்பிற்கு காரணமானவன்.
மது காரின் பின் கதவைத் திறந்து
உள்ளே ஏறி அமரக் கார் நகர ஆரம்பித்தது.
இப்படி ஒரு நாள் வரும் என்று அவள்
நினைத்துப் பார்த்தது கூட இல்லை.
ஐய்யோ முருகாகாகா என்றிருந்தது
மதுவிற்கு. அவன் பார்வையைச்
சந்திக்க மறுத்து முகத்தை வின்டோ
பக்கம் திருப்பி வெளியே பார்த்துக்
கொண்டு வந்தாள். ஆனால் மனம்
முழுதும் அவனின் பிம்பமே வந்து
நின்றது. அவனைப் பார்க்க வேண்டும்
என்று துடித்த மனதை அடக்கினாள்.
'முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்து
விட்டது அவனைப் பார்த்து..
கடைசியாக திருவிழாவில் பார்த்த
நினைவு..' என்று யோசித்தபடியே
வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் கார்த்திக்கும் அவளைத்
தான் காரை ஓட்டியபடி கண்ணாடி
வழியாக கவனித்துக்கொண்டு தான்
வந்தான். கார்த்திக்கிற்கு அன்றைய
நாள் நினைவு வந்தது.
இரண்டு நாட்கள் செல்ல மது வழக்கம்
போல ஹாஸ்பிடல் சென்று வந்தாள்.
வீடே அமைதியே உருவாக
காட்சியளித்துக் கொண்டு இருந்தது.
வீட்டினர் எல்லோரும் கொஞ்சம்
தெளிவாக இருந்தது போலத்
தெரிந்ததை மது கவனித்தாள்.
ஆனால் எல்லாருமே அவரவர்
யோசனையில் ஆழ்ந்து இருந்தனரே
தவிர யாரும் எதுவும் அவளிடம்
கேட்கவில்லை.
"உனக்கு அந்தப் பையனை ரொம்பப்
பிடிக்குமா கண்ணு" என்று ஒரு நாள்
கிடைத்தத் தனிமையில் மதுவிடம்
கேட்டார் ஈஸ்வரி அம்மாள். இதுவரை
பேத்தி அழுதுப் பார்க்காதவர் அன்று
ஒருவனை எட்டு வருடங்களாக
காதலிக்கிறேன் என்று சொல்லி
மூச்சை இழுத்து அழுதுவிட்டுப்
போனது அவருக்குப் பரிதாபமாக
இருந்தது.
"ஆமாம் பாட்டி" என்று அவரின்
முகத்தைப் பார்க்க முடியாமல்
தலையை மட்டும் ஆட்டினாள் மது.
"அந்தப் பையனிற்குத் தெரியுமா?
சொல்லி இருக்கிறாயா?" எனப்
பேத்தியிடம் கேட்டார் ஈஸ்வரி அம்மா.
"இல்லை பாட்டி.. அவருக்குத்
தெரியாது" என்ற மதுவிற்கு பொய்
சொல்கிறோம் என்று மனம்
உறுத்தியது.
"அப்புறம் எதுக்கு வருத்தப்படறே..
உன்னைப் பிடிக்காமல் போகுமா
யாருக்காவது? எதுக்கும்
வருத்தப்படாதே கண்ணு. உன் நல்ல
மனசுக்கு எல்லாம் நல்லதாகவே
நடக்கும்.." என்று பேத்திக்குத்
தன்னால் முடிந்த தைரியத்தைக்
கூறினார் ஈஸ்வரி.
பாட்டியிடம் பேசிவிட்டு அறைக்கு
வந்த மதுவிற்குத் தான் அவனிடம்
பேசியது நினைவு வந்தது. ஜானகி
அம்மாள் எப்படியும் கார்த்திக்கிடம்
சொல்லி இருப்பார்.. என்ன
நினைத்திருப்பானோ.. முருகாகாகா
என்று இருந்தது மதுமிதாவிற்கு..
அடுத்த நாள் வழக்கம் போல மது
வேலையை முடித்துக் கொண்டு நாலு
மணிக்கு கிளம்ப கோயம்பத்தூரில்
ஏதோ மந்திரி அரெஸ்ட் ஆகிவிட்டார்
என்று அவரின் தொண்டர்கள் பிரச்சினை செய்து கொண்டு
இருந்தனர். ஒரு பஸ்ஸிற்கு வேறு தீ
வைத்துவிட்டனர். சித்தப்பாவிற்கு
போன் செய்யலாம் என்று எண்ணிய
மதுவிற்கு அப்போது தான் அவர்,
இன்று தான் ஒரு ஆர்டர் விஷயமாக
திருப்பூர் வரை பதினொரு மணிக்கு
மேல் செல்லவதாகக் காலையில்
வரும்போது சொன்னது நினைவு
வந்தது. என்ன செய்வது என்று
புரியாமல் சுந்தர மூர்த்திக்கு போனில்
கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாள்
மது.
"நான்தான் உன்னிடம் காலையிலேயே
சொன்னேன்ல மது. எனக்கு இந்த
மாதிரி தகவல் கிடைத்தது, இன்று
செல்ல வேண்டாம் என்று நான்
சொன்னேனா இல்லையா?" என்று
கோபமாகப் பேசினார். அவர் எங்கே
மதுவிடம் சொன்னார்.. ஈகோ பார்த்து
மகளிடம் நேரிடையாகவே
சொல்லாமல் காலையில் அனைவரும்
சாப்பிடும் போது பொதுவாகச்
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு.
மதுவிற்கு கோபம் வந்தது..
இருந்தாலும் பதட்டத்தில் அப்பா
கோபப்படுகிறார் என்று கோபத்தை
அடக்கியவள் "அப்பா.. நான் என்ன
அந்த மாதிரி வேலையிலா இருக்கேன்.
நீங்க சொன்னவுடன் லீவ்
போடுவதற்கு" என்று திருப்பிக்
கொடுத்தாள் மதுமிதா.
சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு
கோவிலிற்கு வந்திருந்தார். மகள்
போன் செய்து விஷயத்தை சொன்ன
பொழுது அவருக்கும் என்ன செய்வது
என்று தெரியவில்லை. பேசாமல்
தாமே சென்று கூட்டி வரலாம் என்று
நினைத்த பொழுதுதான் ஜானகி
கோயிலிற்கு வந்து சேர்ந்தார்.
அவருக்கும் காமாட்சி அம்மன் இஷ்ட
தெய்வம் என்பதால் அவரும் அங்கு
வாராவாரம் வருவார்.
"என்ன அண்ணா பதட்டமா
இருக்கீங்க?" என்று சாதரணமாகக்
கேட்டபடி வந்து நின்றார் ஜானகி. உமா
விஷயத்தைச் சொல்ல ஜானகிக்கு
ஒரு யோசனைத் தோன்றியது.
"நான் ஒன்று சொன்னால் தப்பா
நினைக்காதீங்க. வேறு வழியும்
இல்லை. கார்த்திக்கும் கோவையில்
தான் இருக்கிறான். அவனை கூட்டி
வரச் சொல்லிவிடலாமா?" என்று
மனதில் தோன்றியதை மறைக்காமல்
கேட்டுவிட்டார் ஜானகி.
எல்லாருக்கும் ஒரு நிமிடம்
திகைப்புதான், அந்தப் பக்கம் போனில்
கேட்ட மதுவிற்கு வியர்த்து விட்டது.
வேறு வழி இல்லை என்பதால் சுந்தர
மூர்த்தியும் சரி என்று விட்டார்.
கார்த்திக்கிற்கு போன் போட்ட ஜானகி
"கார்த்திக் எங்க இருக்கே?
கிளம்பிட்டயா?" எனக் கேட்டார்.
"ஒரு ஐந்து நிமிடத்தில் கிளம்பி
விடுவேன் ம்மா.. ஏன்? ஏதாவது
வாங்கிட்டு வர வேண்டுமா?" என்றுத்
தன் டேபிள் மேல் இருந்த பைலை
சரிபார்த்தபடி வினவினான் கார்த்திக்.
"இல்லை கார்த்திக்... வந்து.." என்று
இழுத்தவர் அனைத்தையும் சொல்லி
முடித்தார். "நீதான் கார்த்திக் மதுவைக்
கூட்டி வர வேண்டும்" என்று சிறு
கட்டளைக் குரலில் கூறினார்.
"சரி.. மதுமிதா போன் நம்பரை மட்டும்
அனுப்பி வைங்க" என்று போனை
வைத்துவிட்டான். ஜானகிக்கே
அதிசயம் தான்.. மகன் எரிச்சல்
படுவான் அல்லது ஏதாவது சாக்கு
போக்கு சொல்லுவான் என்று
நினைத்திருந்தார் ஜானகிக்கு மகன்
அளித்த பதில் வியப்பே. கார்த்திற்கு
மதுவின் நம்பரை அனுப்பி வைத்தார்.
கார்த்திற்கு மதுவின் நம்பரை அனுப்பி
வைத்த ஜானகி மதுவிற்கும்
கார்த்திக்கின் நம்பரை
சுந்தரமூர்த்தியிடம் சொல்லி
மதுவிற்கும்அனுப்பினர். ஆனால்
அந்த நம்பர் அவளிடம் முன்பே
இருந்ததை யார் அறிவார்?
நம்பரைப் பார்த்த மது அதே நம்பர்
என்று எண்ணி புன்னகை சிந்தினாள்.
மறுநொடியே அந்த நம்பரிலிருந்து
மதுவிற்கு கால் வந்தது. TL என்ற
பெயரில் அவன் நம்பரை பதிவு செய்து
வைத்து இருந்தவள் அதில் இருந்து
கால் வந்தவுடனே ஏதோ தன் இதயம்
1000 மடங்கு அதிகமாகத் துடிப்பதை
உணர்ந்தாள்.
கை நடுங்க அட்டென்ட் செய்து காதில்
வைத்தவளிடம் "எந்த இடத்தில் இருக்க?
என்று நேராக விஷயத்திற்கு வந்து
கேட்டான் கார்த்திக்.
"நீலாம்பூர் பஸ் ஸ்டாப்" என்றாள்
மதுமிதா.
"சரி வருகிறேன்" என்று
வைத்துவிட்டான். கார் நம்பரை
மெசேஜும் அனுப்பினான்.
சொல்லிவிட்டு அவன்
வைத்துவிட்டான். ஆனால் மதுவால்
தான் சரியாக நிற்கக் கூட
முடியவில்லை. எப்படி அவன் முகத்தில்
முழிப்பது என்று இருந்தது.
கைகால்கள் எல்லாம் சில்லிட்ட மாதிரி
ஆகிவிட அப்படி இப்படி என்றும்
டான்ஸ் ஆடியபடி நின்றிருந்தவளை..
பக்கத்தில் இருந்த ஒருவர் இவளின்
செய்கையை கவனிக்க மது தன்னைத்
தானே கடிந்தபடி கொஞ்சம்
அமைதியாக நின்றாள். சரியாக பத்து
நிமிடத்தில் வந்து சேர்ந்தான் அவளின்
இதயத்துடிப்பிற்கு காரணமானவன்.
மது காரின் பின் கதவைத் திறந்து
உள்ளே ஏறி அமரக் கார் நகர ஆரம்பித்தது.
இப்படி ஒரு நாள் வரும் என்று அவள்
நினைத்துப் பார்த்தது கூட இல்லை.
ஐய்யோ முருகாகாகா என்றிருந்தது
மதுவிற்கு. அவன் பார்வையைச்
சந்திக்க மறுத்து முகத்தை வின்டோ
பக்கம் திருப்பி வெளியே பார்த்துக்
கொண்டு வந்தாள். ஆனால் மனம்
முழுதும் அவனின் பிம்பமே வந்து
நின்றது. அவனைப் பார்க்க வேண்டும்
என்று துடித்த மனதை அடக்கினாள்.
'முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்து
விட்டது அவனைப் பார்த்து..
கடைசியாக திருவிழாவில் பார்த்த
நினைவு..' என்று யோசித்தபடியே
வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் கார்த்திக்கும் அவளைத்
தான் காரை ஓட்டியபடி கண்ணாடி
வழியாக கவனித்துக்கொண்டு தான்
வந்தான். கார்த்திக்கிற்கு அன்றைய
நாள் நினைவு வந்தது.