Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-12
அன்று காலை விரைவாகவே எழுந்து
விட்டக் கார்த்திக், போனை எடுத்துக்
கொண்டு பால்கனிப் பக்கம் சென்று,
தான் போன் செய்ய வேண்டிய
நபருக்கு ஒரு போன்காலைப்
போட்டான். குளித்து முடித்து வந்த மது
'இந்த காலை நேரத்தில் யாருடன்
பேசுகிறான்" என்று யோசித்தபடியே
பால்கனி கதவைத் திறந்தாள். அவள்
பால்கனி கதவைத் திறந்தவுடன் "சரி
நான் வைக்கிறேன்' என்று மதுவைப்
பார்த்து எதிர் முனையில்
இருந்தவரிடம் சொல்லிவிட்டு போனை
கட் செய்து விட்டான் அந்தக் கள்ளன்.
மதுவிற்கு போனில் யார் என்று
கேட்கவும் மனதில்லை.. ஆனால்
யோசித்தபடி பார்த்த மதுவிடம்
"குட்மார்னிங் மது.. என்ன சீக்கிரம்
எழுந்து விட்டாயா" என்று பேச்சை
மாற்றியபடிக் கேட்டான்.
"அதை நான் கேட்க வேண்டும்... நீங்க
தான் இன்னிக்கு ஏதோ வேலையா
எந்திருச்ச மாதிரி இருக்கு" என்று
ட்ரெஸிங் டேபிள் முன்னாடி வந்து
நின்றபடிக் கேட்டாள்.
'எப்படி இன்டைரக்டா... யார் கிட்ட
போன் பேசிட்டு இருக்க-ன்னு
கேக்கறா பாரு.. இதுல மட்டும்
விவரமா இருக்கா' என்று
நினைத்தவன் "அது ஒன்றுமில்லை
மது.. மூர்த்தி சார் இன்று மதியம் தான்
வருவேன் என்று போன் செய்து
சொன்னார்.. அவர் போன்
பண்ணியதால் தூக்கம்
கலைந்துவிட்டது" என்றான். ரெடி ஆகி
கீழே வந்தும் கார்த்திக் தன் அன்னை
ஜானகியிடம் ஏதோ கிசுகிசுத்ததைக்
கண்டாள் மது. யோசித்தவள்.. அவனே
சொல்லுவான் என்று விட்டுவிட்டாள்.
அவள் எதையும் பெரிதாகவும் எடுத்துக்
கொள்ளவில்லை.
மாலை ஆனதும் இருவரும் வீடு
திரும்ப..வழக்கம் போல பொள்ளாச்சி
ரோட்டில் கார் சென்றது.
கார்த்திக்கிடம் ஏதோ பேசியபடி வந்த
மது.. டக்கென்று தலையைத் திருப்பி
வெளியே பார்த்து மறுபடியும் திரும்பி
விட்டாள். அவளின் செய்கையைக்
கவனித்தவன் காரை யூடர்ன்
செய்தான்.
"ஏன் காரை திருப்பறீங்க?" என்று
வினவிய மதுவிடம் தோளை மட்டும்
குலுக்கினான்.
காரை அந்த ரோட்டில் ஓரமாக
அமைத்திருந்த பொம்மைக் கடையின்
முன்பு நிறுத்தினான். "இறங்கு மது..
இதைத் தானே ஆஆஆ..ன்னு
திரும்பிப் பாத்த.. நானே வாங்கித்
தரேன் வா" என்று அழைத்தான்.
மதுவும் காரை விட்டு இறங்க "எந்த
கலர் டெட்டி வேணும் மது" என்று கேட்க,
அந்தக் கடைப் பையன் டெட்டியை
எடுக்க ஆரம்பித்தான்.
"இல்லை இல்லை... டெட்டி வேணாம்..
நான் டெட்டி பொம்மையைப் பாக்கல"
என்றாள் கார்த்திக்கைப் பார்த்து.
"பின்னே எதைப் பார்த்த?" என்று
புருவத்தை நெறித்தபடிக் கேட்டான்.
"அதை...." என்று இரு புருவத்தையும்
தூக்கி சிரித்தபடி 'அவன் என்ன
நினைப்பானோ' என்று
யோசித்தபடியே கை நீட்டிச்
சொன்னாள்.
அவள் கையைக் காட்டிய பக்கம்
தலையைத் திருப்பிப் பார்த்தக்
கார்த்திக் "இதுவா" என்று தன்
வியப்பைக் காட்டியவாறு சிரித்தபடிக்
கேட்டான்.
'அய்யோ சிரிக்கிறானே' என்று
நினைத்துக்கொண்டே "ஆமாம்"
என்றாள் மது.
"சரி அந்தக் குரங்கு பொம்மையை எடு
தம்பி" என்று அந்தக் கடைப்
பையனிடம் சொல்ல மதுவிற்கு
வாயெல்லாம் பல்லாகி விட்டது.
வாங்கிக் கொண்டு இருவரும் காரில்
ஏறினர். பொம்மையை மடியில்
வைத்தபடி கையில் இறுகப் பிடித்துக்
கொண்டே உட்கார்ந்து இருந்தபடி
வந்தாள். "ஏன் மது இப்படி..."
வாய்விட்டுச் சிரித்தான்.
"எப்படி?" என்று கேட்டாள் புரியாமல்.
"எல்லாப் பொண்ணுகளுக்கும் டெட்டி
தான் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு
இருக்கிறேன்... ஆனால் நீ
என்னடானா.." என்று அந்த குரங்கு
பொம்மையைப் பார்த்தான். அவள்
மடியில் வைத்திருந்த குரங்கைப்
பார்க்க அவனுக்கு
பொறாமையாகத்தான் இருந்தது
"எனக்கு இதான் பிடிக்கும். குரங்கு
எல்லாம் செம க்யூட் தெரியுமா?..
எங்காச்சு உயிருள்ள குரங்க பாத்தாக்
கூட அப்படியே பாத்துட்டே நிப்பேன்"
என்று ஆர்வாகக் கூறினாள்.
"என்னதான் டேஸ்டோ உனக்கு" என்று
நக்கலடித்தவனிடம் "என் டேஸ்ட்
எல்லாம் அப்படித்தான் இருக்கும்..
க்யூட்டா அமைதியா இருக்கறத விட
மங்கி மாதிரி இருந்தாத்தான்
பிடிக்கும்.. அப்படித் தான் எல்லாமே
சூஸ் பண்ணுவேன்" என்றவள்
டக்கென்று நாக்கைக் கடித்துக்
கொண்டாள்.
'அய்யய்யோ இவன் ஏதாவது
இவனைச் சொல்கிறோம் என்று
நினைத்துக் கொண்டாள்' என்று
நினைத்தவள் அவனை
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
கார்த்திக்கோ மதுவைப் பார்த்து
"ஏய்ய்ய உனக்கு இதை வாங்கித் தந்த
பாவத்துக்கு என்னை ஏதோ சொல்ற
போல" என்று தன் தாடையை
நிமிர்த்தியபடிக் கேட்டான்.
"இல்லை இல்லை... நான் அப்படி
நினைத்து சொல்லவில்லை" என்று
தான் எதனால் அப்படிச் சொன்னேன்
என்று விளக்கினாள். "ம்ம்" என்று
பொய்யாய் முறைத்தான் கார்த்திக்.
பின்பு வீடு வந்து சேர தன் கையில்
இருந்த பொம்மையை வேலுமணியும்
ஜானகியும் வித்தியாசமாகப்
பார்ப்பதை உணர்ந்தாள் மது...
கார்த்திக் அவர்களிடம் பொம்மை
வாங்கிய கதையைக் கூறினான்.
"அப்படியா மது" என்று ஜானகி
மதுவைப் பார்த்துக் கேட்க மதுவோ
நெளிந்தபடி நின்றாள். பிறகு எப்பவும்
போல எல்லாவற்றையும் முடித்து
விட்டு இரவு அவரவர் அறைக்குள்
புகுந்து விட்டனர்.
நன்றாக உறக்கத்தில் இருந்தவளின்
காதருகில் சென்று குனிந்த கார்த்திக்
"மது" என்று அழைத்தான்.
"ம்ம்" என்றாவாறு மது
தூக்கத்திலேயே அவனுக்கு
ரேஸ்பான்ஸ் செய்ய அவனுக்குச்
சிரிப்பு வந்தது.
"மது எழுந்திரு மது" என்று அவளை
எழுப்பினான். அப்போது தான் அது
கனவில்லை.. உண்மையிலேயே
அவன் அழைக்கிறான் என்று
கண்ணைத் திறந்தாள்.
எழுந்து கண்களைத் தேய்த்தவள்
"என்ன?" கொட்டாவி விட்டபடியே
கேட்டாள்.
"ஹாப்பி பர்த்டே மது" என்று சரியாக
பண்ணிரெண்டு மணிக்கு மதுவின்
கழுத்தில் ஒரு தங்கச் செயினை
அணிவித்தான் கார்த்திக்.
அந்தச் செயினின் டாலரில் Kவும் Mமும்
சேர்ந்தார் போல இருக்க அந்த இரு
எழுத்துகளுக்கும் நடுவே சிறியதான
ஒரு இதயம் அந்த இரு
எழுத்துகளையும் இணைத்து
இருந்தன.
ஒரு கணம் அதன் வேலைப்பாடை
ரசித்தவள் "தேங்கஸ் பார் த விஷ்ஸஸ் அன்ட் கிப்ட்" (thanks for the wishes and
gift) என்று நன்றி கூறினாள். பிறகு
இன்னோரு கிப்டைக் அவள் கையில்
வைத்தான்.. அதைப் பிரித்தவள் "இது
எப்படி... " என்று வியப்பால் கண்களை
விரித்துக் கேட்டாள். அந்த கிப்டில் மது
தன் அன்னை கையில் இருந்த
போட்டோ இருந்தது.. அவள் மட்டும்
இருப்பது போன்ற ஒரு ப்ளாக் அன்
வைட் போட்டோ ப்ரேம். மிகவும்
அழகாக இருந்ததைத் தன் கை
விரல்களால் வருடினாள் மது.
"வருணிடம் கேட்டு வாங்கினேன் மது" என்று அவள் மூக்கைப் பிடித்து
ஆட்டினான் கார்த்திக். "தேங்க்யூ...
ரொம்ப அழகா இருக்கு" என்று
கண்கள் மின்ன சொல்லினாள் மது.
கட்டிப்பிடித்து தாங்க்ஸ் சொல்லுவாள்
என்று எதிர்ப்பார்த்தவனுக்கு
கொஞ்சம் வருத்தம் தான். ஆனால்
அவள் நிலை அறிந்து எதுவும் அவன்
தன் முகத்தில் காட்டவில்லை.
"இன்னும் முடியவில்லை மது" என்று
அவள் கண்களை ஒரு வெள்ளை
துப்பட்டாவால் கட்டினான்.
"எழுந்திரு மது, இன்னும் இருக்கு"
என்று அவளை எழுப்பி மெதுவாகக்
கீழே கூட்டிச் சென்றான்.
"மது கட்டை அவிழ்க்கப் போகிறேன்.
ஆனால் நான் சொன்ன பிறகு தான்
கண்ணைத் திறக்க வேண்டும்" என்று
கூற "சரி" என்று ஒரு கையை
இடுப்பில் வைத்தபடி புன்னகை
செய்தாள் மது.
கார்த்திக் சொன்ன பிறகு கண்ணைத்
திறந்தவள் தன் முழுக் குடும்பமும், தன்
தோழிகளும் நிற்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் இரு கைகளால் வாயைப் பொத்தி..கணவனை விழி
விரித்து நோக்கினாள். அத்தை
மாமாவோடு கேக் வெட்டத்தான் கூட்டி
வருகிறான் என்று நினைத்தவள் இந்த
நள்ளிரவில் தன் குடும்பத்தையும்
தோழிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.
பின் அனைவரும் வந்து வாழ்த்து
சொல்ல மது கேக்கை வெட்டி
கார்த்திக்கிற்கு முதலில் ஊட்டினாள்.
பின் அனைவருக்கும் கேக்கை
கொடுத்தனர்.
ஸ்வேதா தன் ஹஸ்பன்ட்டோடு
வந்திருந்தாள். அவளது கணவனிடம்
நலம் விசாரித்தவள் "எப்படி டி இங்க?
அதுவும் நைட் 12க்கு?" என்று கேட்டாள்.
"ஏய் மறந்துட்டயா.. என் சொந்த ஊரும்
இதான.. கார்த்திக் அண்ணா
எங்களிடம் நேற்று காலை போன்
செய்து சொன்னார்...அதான்
இன்னிக்கு ஈவ்னிங் என் அம்மா
வீட்டுக்கு வந்துட்டோம். குழந்தையை
அம்மாவிடம் கொடுத்துவிட்டு
வந்தோம்" என்றாள்.
"ஓஓ.. ஓகே டி... தாங்க்ஸ் பார் கம்மிங்"
என்று தோழியை அணைத்துக்
கொண்டாள்.
"சரி நாங்க கிளம்பறோம்" என்று
ஸ்வேதா சொல்ல "இருந்துவிட்டு
காலையில் போங்களேன்" என்றபடி
வந்தான் கார்த்திக்.
"இல்ல அண்ணா. பாப்பா முழிச்சுட்டா
ரிஸ்க். நாங்க கிளம்பறோம்" என்று
கூற இருவருக்கும் நன்றி கூறி
அனுப்பி வைத்தனர் கார்த்திக்கும்
மதுவும்.
பின் மிதுனாவும் சிவாவும் சிவாவின்
மனைவியும் கிளம்பினர். பின்
மதுவின் குடும்பத்தினரும் கிளம்ப
அவர்களைப் பார்த்து அனுப்பி வைத்து விட்டு வந்தான்.
கார்த்திக் உள்ளே வர மதுவும் ஜானகி
அம்மாவும் கேக் தட்டுகளை எடுத்துப்
போட்டபடியே பேசிக் கொண்டு
இருந்தனர். பின்பு தானும்
அவர்களுடன் பேசியபடி உதவி
செய்தான். வேலையை முடித்துக்
கொண்டு இருவரும் மேலே தங்கள்
அறைக்குச் வந்தனர்.
அறைக்கதவை சாத்திய மது
கார்த்திக்கை பின்னால் இருந்து
கட்டிப்பிடித்து, தன் முகத்தை அவன்
முதுகில் சாய்த்தபடியே நின்று
விட்டாள். கார்த்திக் திரும்ப முயற்சிக்க
"ப்ளீஸ் திரும்பாதிங்க" என்றாள்
மெதுவான குரலில்.
"தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்.
சொல்லப்போனா நானே என்
பர்த்டேவ மறந்துட்டேன். எ..எனக்கு
என்ன சொல்றதுனே தெரியல. ஏதோ
ட்ரீம்ல இருக்க மாதிரி இருக்கு. இந்ந
வீட்டுக்கு வந்ததுல இருந்து நீங்க
மட்டும் இல்ல அத்தை மாமா கூட
சின்னதா ஒரு குறை கூட
சொன்னதில்லை. என்னோட
பீலிங்ஸிற்கு மதிப்பு கொடுத்து
இதுவரைக்கு ஒரு நல்ல.... இல்ல...
ஒரு பெஸ்ட் ஹஸ்பன்டா இருக்கீங்க.
ஆனா என்னால தான் ஒரு நல்ல
மனைவியா இருக்க முடியல
கார்த்திக் .. உங்க கூட இருக்க
ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு
நிம்மதியா... பாதுகாப்பா தான்
இருக்கு.. ஆனா இன்னும் ஏதோ உள்ள
தடுக்கற மாதிரி.. ஏதோ.. என்ன
என்றே தெரியவில்லை. ஸாரி
என்னால உங்களுக்கு ரொம்பக்
கஷ்டம் கார்த்திக்" என்று சொல்லி
அவன் முதுகில் சாய்ந்தபடி கலங்கிய
குரலில் கூறினாள்.
அதுவரை அவள் பேசப்பேச தன்
மார்பின் மேல் இருந்த அவள்
கையைத் தட்டிக் கொடுத்தவன், அவள்
கலங்குவது தெரிந்ததும் அவளது
கையைப் பிடித்து மெதுவாய்
முன்னால் இழுத்தான். தன் முன்னாள்
நின்ற மதுவின் இரு கைகளையும்
மென்மையாய்ப் பிடித்தவன் "மது
என்னைப் பாரு" என்றான்.
மது அவனைப் பார்க்க "மது நல்லாக்
கேட்டுக்க..நீ என் மனைவி.. உன்னால
எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மது.
நான் சொன்னதுக்காக நம்ம
ஃபேமிலிஸ்காக நீ எட்டு வருஷமா
தாங்கிட்ட கஷ்டதிற்கு முன்னாடி இது
ஒன்னுமே இல்ல மது" என்று மதுவின்
கண்களைப் பார்த்துச் சொன்னவன்
"பர்த்டே அதுவுமா அழுதுவிடாதே மக்கு
மது" என்று அவளது நனி மூக்கின்
மச்சத்தை தொட்டுக் காட்டி சிரிக்க
மதுவும் சிரித்துவிட்டாள்.
"ஆனால்..." என்று மது வாய் திறக்க,
கார்த்திக் மதுவின் இதழின் மீது தன்
ஒற்றை விரலை வைத்து "நோ மது..
எதுவும் பேசமா போய்த் தூங்கலாம்"
என்றான் கார்த்திக்.
மது முகத்தை கழுவிக் கொண்டு வர
"மது நாளை மாலை நம்ம இரண்டு
பேரும் என் பாட்டி தாத்தா வீட்டுக்கு
போறோம். பாட்டி உன்ன கூட்டிட்டு வர
சொல்றாங்க. சிறுமுகை தான ஸோ(so)
லீவ் போட அவசியம் இருக்காது. இந்த
வீக் என்ட் வரைக்கும் அங்க
இருந்துட்டு வரலாம். மூனு நாலு செட்
ட்ரெஸ் எடுத்துக்க மது" என்றான்
கார்த்திக்.
"ம்ம் ஓகே" என்றாள் மது.
அன்று காலை விரைவாகவே எழுந்து
விட்டக் கார்த்திக், போனை எடுத்துக்
கொண்டு பால்கனிப் பக்கம் சென்று,
தான் போன் செய்ய வேண்டிய
நபருக்கு ஒரு போன்காலைப்
போட்டான். குளித்து முடித்து வந்த மது
'இந்த காலை நேரத்தில் யாருடன்
பேசுகிறான்" என்று யோசித்தபடியே
பால்கனி கதவைத் திறந்தாள். அவள்
பால்கனி கதவைத் திறந்தவுடன் "சரி
நான் வைக்கிறேன்' என்று மதுவைப்
பார்த்து எதிர் முனையில்
இருந்தவரிடம் சொல்லிவிட்டு போனை
கட் செய்து விட்டான் அந்தக் கள்ளன்.
மதுவிற்கு போனில் யார் என்று
கேட்கவும் மனதில்லை.. ஆனால்
யோசித்தபடி பார்த்த மதுவிடம்
"குட்மார்னிங் மது.. என்ன சீக்கிரம்
எழுந்து விட்டாயா" என்று பேச்சை
மாற்றியபடிக் கேட்டான்.
"அதை நான் கேட்க வேண்டும்... நீங்க
தான் இன்னிக்கு ஏதோ வேலையா
எந்திருச்ச மாதிரி இருக்கு" என்று
ட்ரெஸிங் டேபிள் முன்னாடி வந்து
நின்றபடிக் கேட்டாள்.
'எப்படி இன்டைரக்டா... யார் கிட்ட
போன் பேசிட்டு இருக்க-ன்னு
கேக்கறா பாரு.. இதுல மட்டும்
விவரமா இருக்கா' என்று
நினைத்தவன் "அது ஒன்றுமில்லை
மது.. மூர்த்தி சார் இன்று மதியம் தான்
வருவேன் என்று போன் செய்து
சொன்னார்.. அவர் போன்
பண்ணியதால் தூக்கம்
கலைந்துவிட்டது" என்றான். ரெடி ஆகி
கீழே வந்தும் கார்த்திக் தன் அன்னை
ஜானகியிடம் ஏதோ கிசுகிசுத்ததைக்
கண்டாள் மது. யோசித்தவள்.. அவனே
சொல்லுவான் என்று விட்டுவிட்டாள்.
அவள் எதையும் பெரிதாகவும் எடுத்துக்
கொள்ளவில்லை.
மாலை ஆனதும் இருவரும் வீடு
திரும்ப..வழக்கம் போல பொள்ளாச்சி
ரோட்டில் கார் சென்றது.
கார்த்திக்கிடம் ஏதோ பேசியபடி வந்த
மது.. டக்கென்று தலையைத் திருப்பி
வெளியே பார்த்து மறுபடியும் திரும்பி
விட்டாள். அவளின் செய்கையைக்
கவனித்தவன் காரை யூடர்ன்
செய்தான்.
"ஏன் காரை திருப்பறீங்க?" என்று
வினவிய மதுவிடம் தோளை மட்டும்
குலுக்கினான்.
காரை அந்த ரோட்டில் ஓரமாக
அமைத்திருந்த பொம்மைக் கடையின்
முன்பு நிறுத்தினான். "இறங்கு மது..
இதைத் தானே ஆஆஆ..ன்னு
திரும்பிப் பாத்த.. நானே வாங்கித்
தரேன் வா" என்று அழைத்தான்.
மதுவும் காரை விட்டு இறங்க "எந்த
கலர் டெட்டி வேணும் மது" என்று கேட்க,
அந்தக் கடைப் பையன் டெட்டியை
எடுக்க ஆரம்பித்தான்.
"இல்லை இல்லை... டெட்டி வேணாம்..
நான் டெட்டி பொம்மையைப் பாக்கல"
என்றாள் கார்த்திக்கைப் பார்த்து.
"பின்னே எதைப் பார்த்த?" என்று
புருவத்தை நெறித்தபடிக் கேட்டான்.
"அதை...." என்று இரு புருவத்தையும்
தூக்கி சிரித்தபடி 'அவன் என்ன
நினைப்பானோ' என்று
யோசித்தபடியே கை நீட்டிச்
சொன்னாள்.
அவள் கையைக் காட்டிய பக்கம்
தலையைத் திருப்பிப் பார்த்தக்
கார்த்திக் "இதுவா" என்று தன்
வியப்பைக் காட்டியவாறு சிரித்தபடிக்
கேட்டான்.
'அய்யோ சிரிக்கிறானே' என்று
நினைத்துக்கொண்டே "ஆமாம்"
என்றாள் மது.
"சரி அந்தக் குரங்கு பொம்மையை எடு
தம்பி" என்று அந்தக் கடைப்
பையனிடம் சொல்ல மதுவிற்கு
வாயெல்லாம் பல்லாகி விட்டது.
வாங்கிக் கொண்டு இருவரும் காரில்
ஏறினர். பொம்மையை மடியில்
வைத்தபடி கையில் இறுகப் பிடித்துக்
கொண்டே உட்கார்ந்து இருந்தபடி
வந்தாள். "ஏன் மது இப்படி..."
வாய்விட்டுச் சிரித்தான்.
"எப்படி?" என்று கேட்டாள் புரியாமல்.
"எல்லாப் பொண்ணுகளுக்கும் டெட்டி
தான் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு
இருக்கிறேன்... ஆனால் நீ
என்னடானா.." என்று அந்த குரங்கு
பொம்மையைப் பார்த்தான். அவள்
மடியில் வைத்திருந்த குரங்கைப்
பார்க்க அவனுக்கு
பொறாமையாகத்தான் இருந்தது
"எனக்கு இதான் பிடிக்கும். குரங்கு
எல்லாம் செம க்யூட் தெரியுமா?..
எங்காச்சு உயிருள்ள குரங்க பாத்தாக்
கூட அப்படியே பாத்துட்டே நிப்பேன்"
என்று ஆர்வாகக் கூறினாள்.
"என்னதான் டேஸ்டோ உனக்கு" என்று
நக்கலடித்தவனிடம் "என் டேஸ்ட்
எல்லாம் அப்படித்தான் இருக்கும்..
க்யூட்டா அமைதியா இருக்கறத விட
மங்கி மாதிரி இருந்தாத்தான்
பிடிக்கும்.. அப்படித் தான் எல்லாமே
சூஸ் பண்ணுவேன்" என்றவள்
டக்கென்று நாக்கைக் கடித்துக்
கொண்டாள்.
'அய்யய்யோ இவன் ஏதாவது
இவனைச் சொல்கிறோம் என்று
நினைத்துக் கொண்டாள்' என்று
நினைத்தவள் அவனை
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
கார்த்திக்கோ மதுவைப் பார்த்து
"ஏய்ய்ய உனக்கு இதை வாங்கித் தந்த
பாவத்துக்கு என்னை ஏதோ சொல்ற
போல" என்று தன் தாடையை
நிமிர்த்தியபடிக் கேட்டான்.
"இல்லை இல்லை... நான் அப்படி
நினைத்து சொல்லவில்லை" என்று
தான் எதனால் அப்படிச் சொன்னேன்
என்று விளக்கினாள். "ம்ம்" என்று
பொய்யாய் முறைத்தான் கார்த்திக்.
பின்பு வீடு வந்து சேர தன் கையில்
இருந்த பொம்மையை வேலுமணியும்
ஜானகியும் வித்தியாசமாகப்
பார்ப்பதை உணர்ந்தாள் மது...
கார்த்திக் அவர்களிடம் பொம்மை
வாங்கிய கதையைக் கூறினான்.
"அப்படியா மது" என்று ஜானகி
மதுவைப் பார்த்துக் கேட்க மதுவோ
நெளிந்தபடி நின்றாள். பிறகு எப்பவும்
போல எல்லாவற்றையும் முடித்து
விட்டு இரவு அவரவர் அறைக்குள்
புகுந்து விட்டனர்.
நன்றாக உறக்கத்தில் இருந்தவளின்
காதருகில் சென்று குனிந்த கார்த்திக்
"மது" என்று அழைத்தான்.
"ம்ம்" என்றாவாறு மது
தூக்கத்திலேயே அவனுக்கு
ரேஸ்பான்ஸ் செய்ய அவனுக்குச்
சிரிப்பு வந்தது.
"மது எழுந்திரு மது" என்று அவளை
எழுப்பினான். அப்போது தான் அது
கனவில்லை.. உண்மையிலேயே
அவன் அழைக்கிறான் என்று
கண்ணைத் திறந்தாள்.
எழுந்து கண்களைத் தேய்த்தவள்
"என்ன?" கொட்டாவி விட்டபடியே
கேட்டாள்.
"ஹாப்பி பர்த்டே மது" என்று சரியாக
பண்ணிரெண்டு மணிக்கு மதுவின்
கழுத்தில் ஒரு தங்கச் செயினை
அணிவித்தான் கார்த்திக்.
அந்தச் செயினின் டாலரில் Kவும் Mமும்
சேர்ந்தார் போல இருக்க அந்த இரு
எழுத்துகளுக்கும் நடுவே சிறியதான
ஒரு இதயம் அந்த இரு
எழுத்துகளையும் இணைத்து
இருந்தன.
ஒரு கணம் அதன் வேலைப்பாடை
ரசித்தவள் "தேங்கஸ் பார் த விஷ்ஸஸ் அன்ட் கிப்ட்" (thanks for the wishes and
gift) என்று நன்றி கூறினாள். பிறகு
இன்னோரு கிப்டைக் அவள் கையில்
வைத்தான்.. அதைப் பிரித்தவள் "இது
எப்படி... " என்று வியப்பால் கண்களை
விரித்துக் கேட்டாள். அந்த கிப்டில் மது
தன் அன்னை கையில் இருந்த
போட்டோ இருந்தது.. அவள் மட்டும்
இருப்பது போன்ற ஒரு ப்ளாக் அன்
வைட் போட்டோ ப்ரேம். மிகவும்
அழகாக இருந்ததைத் தன் கை
விரல்களால் வருடினாள் மது.
"வருணிடம் கேட்டு வாங்கினேன் மது" என்று அவள் மூக்கைப் பிடித்து
ஆட்டினான் கார்த்திக். "தேங்க்யூ...
ரொம்ப அழகா இருக்கு" என்று
கண்கள் மின்ன சொல்லினாள் மது.
கட்டிப்பிடித்து தாங்க்ஸ் சொல்லுவாள்
என்று எதிர்ப்பார்த்தவனுக்கு
கொஞ்சம் வருத்தம் தான். ஆனால்
அவள் நிலை அறிந்து எதுவும் அவன்
தன் முகத்தில் காட்டவில்லை.
"இன்னும் முடியவில்லை மது" என்று
அவள் கண்களை ஒரு வெள்ளை
துப்பட்டாவால் கட்டினான்.
"எழுந்திரு மது, இன்னும் இருக்கு"
என்று அவளை எழுப்பி மெதுவாகக்
கீழே கூட்டிச் சென்றான்.
"மது கட்டை அவிழ்க்கப் போகிறேன்.
ஆனால் நான் சொன்ன பிறகு தான்
கண்ணைத் திறக்க வேண்டும்" என்று
கூற "சரி" என்று ஒரு கையை
இடுப்பில் வைத்தபடி புன்னகை
செய்தாள் மது.
கார்த்திக் சொன்ன பிறகு கண்ணைத்
திறந்தவள் தன் முழுக் குடும்பமும், தன்
தோழிகளும் நிற்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் இரு கைகளால் வாயைப் பொத்தி..கணவனை விழி
விரித்து நோக்கினாள். அத்தை
மாமாவோடு கேக் வெட்டத்தான் கூட்டி
வருகிறான் என்று நினைத்தவள் இந்த
நள்ளிரவில் தன் குடும்பத்தையும்
தோழிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.
பின் அனைவரும் வந்து வாழ்த்து
சொல்ல மது கேக்கை வெட்டி
கார்த்திக்கிற்கு முதலில் ஊட்டினாள்.
பின் அனைவருக்கும் கேக்கை
கொடுத்தனர்.
ஸ்வேதா தன் ஹஸ்பன்ட்டோடு
வந்திருந்தாள். அவளது கணவனிடம்
நலம் விசாரித்தவள் "எப்படி டி இங்க?
அதுவும் நைட் 12க்கு?" என்று கேட்டாள்.
"ஏய் மறந்துட்டயா.. என் சொந்த ஊரும்
இதான.. கார்த்திக் அண்ணா
எங்களிடம் நேற்று காலை போன்
செய்து சொன்னார்...அதான்
இன்னிக்கு ஈவ்னிங் என் அம்மா
வீட்டுக்கு வந்துட்டோம். குழந்தையை
அம்மாவிடம் கொடுத்துவிட்டு
வந்தோம்" என்றாள்.
"ஓஓ.. ஓகே டி... தாங்க்ஸ் பார் கம்மிங்"
என்று தோழியை அணைத்துக்
கொண்டாள்.
"சரி நாங்க கிளம்பறோம்" என்று
ஸ்வேதா சொல்ல "இருந்துவிட்டு
காலையில் போங்களேன்" என்றபடி
வந்தான் கார்த்திக்.
"இல்ல அண்ணா. பாப்பா முழிச்சுட்டா
ரிஸ்க். நாங்க கிளம்பறோம்" என்று
கூற இருவருக்கும் நன்றி கூறி
அனுப்பி வைத்தனர் கார்த்திக்கும்
மதுவும்.
பின் மிதுனாவும் சிவாவும் சிவாவின்
மனைவியும் கிளம்பினர். பின்
மதுவின் குடும்பத்தினரும் கிளம்ப
அவர்களைப் பார்த்து அனுப்பி வைத்து விட்டு வந்தான்.
கார்த்திக் உள்ளே வர மதுவும் ஜானகி
அம்மாவும் கேக் தட்டுகளை எடுத்துப்
போட்டபடியே பேசிக் கொண்டு
இருந்தனர். பின்பு தானும்
அவர்களுடன் பேசியபடி உதவி
செய்தான். வேலையை முடித்துக்
கொண்டு இருவரும் மேலே தங்கள்
அறைக்குச் வந்தனர்.
அறைக்கதவை சாத்திய மது
கார்த்திக்கை பின்னால் இருந்து
கட்டிப்பிடித்து, தன் முகத்தை அவன்
முதுகில் சாய்த்தபடியே நின்று
விட்டாள். கார்த்திக் திரும்ப முயற்சிக்க
"ப்ளீஸ் திரும்பாதிங்க" என்றாள்
மெதுவான குரலில்.
"தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்.
சொல்லப்போனா நானே என்
பர்த்டேவ மறந்துட்டேன். எ..எனக்கு
என்ன சொல்றதுனே தெரியல. ஏதோ
ட்ரீம்ல இருக்க மாதிரி இருக்கு. இந்ந
வீட்டுக்கு வந்ததுல இருந்து நீங்க
மட்டும் இல்ல அத்தை மாமா கூட
சின்னதா ஒரு குறை கூட
சொன்னதில்லை. என்னோட
பீலிங்ஸிற்கு மதிப்பு கொடுத்து
இதுவரைக்கு ஒரு நல்ல.... இல்ல...
ஒரு பெஸ்ட் ஹஸ்பன்டா இருக்கீங்க.
ஆனா என்னால தான் ஒரு நல்ல
மனைவியா இருக்க முடியல
கார்த்திக் .. உங்க கூட இருக்க
ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு
நிம்மதியா... பாதுகாப்பா தான்
இருக்கு.. ஆனா இன்னும் ஏதோ உள்ள
தடுக்கற மாதிரி.. ஏதோ.. என்ன
என்றே தெரியவில்லை. ஸாரி
என்னால உங்களுக்கு ரொம்பக்
கஷ்டம் கார்த்திக்" என்று சொல்லி
அவன் முதுகில் சாய்ந்தபடி கலங்கிய
குரலில் கூறினாள்.
அதுவரை அவள் பேசப்பேச தன்
மார்பின் மேல் இருந்த அவள்
கையைத் தட்டிக் கொடுத்தவன், அவள்
கலங்குவது தெரிந்ததும் அவளது
கையைப் பிடித்து மெதுவாய்
முன்னால் இழுத்தான். தன் முன்னாள்
நின்ற மதுவின் இரு கைகளையும்
மென்மையாய்ப் பிடித்தவன் "மது
என்னைப் பாரு" என்றான்.
மது அவனைப் பார்க்க "மது நல்லாக்
கேட்டுக்க..நீ என் மனைவி.. உன்னால
எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மது.
நான் சொன்னதுக்காக நம்ம
ஃபேமிலிஸ்காக நீ எட்டு வருஷமா
தாங்கிட்ட கஷ்டதிற்கு முன்னாடி இது
ஒன்னுமே இல்ல மது" என்று மதுவின்
கண்களைப் பார்த்துச் சொன்னவன்
"பர்த்டே அதுவுமா அழுதுவிடாதே மக்கு
மது" என்று அவளது நனி மூக்கின்
மச்சத்தை தொட்டுக் காட்டி சிரிக்க
மதுவும் சிரித்துவிட்டாள்.
"ஆனால்..." என்று மது வாய் திறக்க,
கார்த்திக் மதுவின் இதழின் மீது தன்
ஒற்றை விரலை வைத்து "நோ மது..
எதுவும் பேசமா போய்த் தூங்கலாம்"
என்றான் கார்த்திக்.
மது முகத்தை கழுவிக் கொண்டு வர
"மது நாளை மாலை நம்ம இரண்டு
பேரும் என் பாட்டி தாத்தா வீட்டுக்கு
போறோம். பாட்டி உன்ன கூட்டிட்டு வர
சொல்றாங்க. சிறுமுகை தான ஸோ(so)
லீவ் போட அவசியம் இருக்காது. இந்த
வீக் என்ட் வரைக்கும் அங்க
இருந்துட்டு வரலாம். மூனு நாலு செட்
ட்ரெஸ் எடுத்துக்க மது" என்றான்
கார்த்திக்.
"ம்ம் ஓகே" என்றாள் மது.