Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-11
ஒவ்வொரு படிகளாக
எண்ணியெண்ணி ஏறியவள்
கடைசியாக தங்கள் அறை வந்துவிட
அப்படியே நின்றாள்.. கோபமாக
இருப்பானோ என்றும் யோசித்தவள்..
சரி எப்படியும் உள்ளே போய் தானே
ஆகனும் என்று எண்ணிக் கதவைத்
திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து கதவைத்
தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்
இல்லாததைக் கண்டவள் பால்கனி
பக்கம் சென்று பார்க்க அவள்
நினைத்த படியே அங்கே தான்
அவளுடைய பிரஷர் குக்கர்
நின்றிருந்தான்.
அங்கு நின்று யாருடனோ போனில்
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
போனை அணைத்தவன் இவள்
நின்றிருந்ததைப் பார்த்து "என்ன?"
என்று வினவினான்.
"தூங்க வரலையா?" என்று
மெதுவானக் குரலில் பால்கனிக்
கதவைப் பிடித்தபடி மது கேட்டாள்.
"நீ போய் படு" என்றுத்
திரும்பிவிட்டான்.
இரண்டு நிமிடம் அங்கேயே நின்றவள்
திரும்பி வந்து லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டாள். ஆனால்
தூங்கவில்லை. ஒருமணி நேரம்
கழித்து உள்ளே வந்தவன் லைட்டை
ஆன் செய்ய மது தலையை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள். அவள்
பார்ப்பதைக் கண்டவன் எதுவும்
பேசாமல் பின் லைட்டை அணைத்து
விட்டு வந்து கையை மடக்கி
தலையின் மேல் வைத்துப் படுத்து
விட்டான். கோபமாக இருந்தாலும்
ஏதாவது பேசுவான் என்றிருந்த
மதுவிற்கு அழுகை தான் வந்தது.
அவனுக்கு முதுகுக் காட்டி
படுத்திருந்தவளுக்கு அவன் பேசாமல்
இருந்ததில் முகம் சுருங்க சும்மா
கண்களை மூடிப் படுத்திருந்தாள்.
கார்த்திக்கும் தூங்கவில்லை..
கண்ணை மூடிப் படுத்திருந்தானே
தவிர சிறிதும் அவனுக்கும் தூக்கம்
வரவில்லை. நேரம் செல்ல ஏதோ
உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன்
அருகில் மறுபறம் திரும்பிப் படுத்து
மது சத்தமில்லாமல் குலுங்கி
அழுவதைக் கவனித்தான். சத்தம்
கேட்காமல் இருக்க எழுந்து
பால்கனிக்குச் செல்லலாம் என
நினைத்தவளை, திடீரென
கார்த்திக்கின் கரங்கள் வந்து மதுவின்
இடையை அணைத்து அவன் புறம்
திருப்பியது. அவன் அவளைத் தன்
பக்கம் திருப்பி அணைக்க மது அவன்
மார்பில் புதைந்து அழுது விட்டாள்.
"ஸாரி...ஸாரி.." என்று அவன் மார்பில்
புதைந்ந படியே முணுமுணுத்தபடி
கண்ணீர் விட்டாள் அவனது
மனையாள்.
"ஓகே ஓகே.. ஹே அழாதே மது இப்போ
எதுக்கு அழுகை.." என்று
அணைத்தபடியே கேட்டான் கார்த்திக்.
அவளைத் தேற்றத் தெரியாமல்
விழித்தவனுக்கு மது தந்த பதில்
நெஞ்சில் பனியை இறக்கியது.
"ஸாரி இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ
பொஸசிவ்னெஸ்ல அப்படி
பண்ணிட்டேன்" என்று தன்னை
மறந்து கண்ணீருடன் மது கூற,
கார்த்திக்கிற்குத் தான் மிதப்பது போல
இருந்தது.. தன்னையும் ஒருத்தி
இப்படி உருகி உருகி காதலிப்பது
அவனுக்கு குலுகுலுவென இருந்தது
உண்மை தான். ஆனால் அவள் அழுவது என்னவோ போலும்
இருந்தது. அவள் அழுவதை அவனால்
ஏதோ ஏற்க முடியவில்லை.
"சரி சரி... நானும் ஸாரி..உன்னைத்
திட்டிவிட்டேன்.. அழதே மது .. எனக்கு
என்னமோ மாதிரி இருக்கு" என்று
கூறி தேம்பி அழுத அவளின் முதுகைத்
தேய்த்து விட்டான்.
எழுந்து உட்கார்ந்து அவளையும்
உட்கார வைத்து கண்களையும்
கன்னத்தையும் துடைத்து விட்டு, முகம்
கழுவி வரச் சொன்னான். "நான் கோபப் பட்டா இப்படி அழுவியா மது?",
உனக்கு என்னை ஏன் தான் இப்படி
புடிக்குதோ?". என்று மனதிற்குள்
நினைத்தபடி அமர்ந்திருந்தான்.
முகம் கழுவி வந்தவள், "சாப்பிடப்
போவோமா?" என்றாள் வாய்
எல்லாம் பற்கலாகக் கேட்டாள்.
"நீ சாப்பிடவில்லையா?" எனக் கேட்க
மது இல்லை என்று தலை ஆட்டினாள்.
"லூசு" என்று அவளைக் கடிந்தவன்,
கீழே அவளைக் கூட்டிக் கொண்டு
சென்றான். கீழே வந்த பின் மது
தோசை சுட்டுப் பொடி வைத்துக்
குடுக்க, சமையல் மேடையில்
உட்கார்ந்து அவளுக்கும் ஊட்டி
விட்டபடியே தானும் உண்டு முடித்தான்.
உண்டு முடித்துவிட்டு இருவரும்
அறைக்கு வந்து படுக்க மது சீக்கரமாக
உறங்கிவிட்டாள். ஆனால் கார்த்திக்
தான் அவளைப் பார்த்த படி
படுத்திருந்தான்.
குழந்தை போல உறங்கிக் கொண்டு
இருந்தவளைப் பார்த்தவனுக்கு
புன்னகை அரும்பியது. அரைமணி
நேரம் முன் அவளைத் தன் கைக்குள்
வைத்து இருந்தவனுக்கு, இப்போது
தான் அவளின் அருகாமையையும்
அவளின் மேல் வீசிய தன்
மனைவியின் வாசனையையும்
உணர்ந்தான். அதை உணர்ந்தவன்
அவளிடம் மயங்கி தன்னைத்
தொலைத்து அவளின் அருகில் செல்ல
அப்போது எங்கு இருந்தோ வந்த
பறவையின் ஒலி அவனை
சுயநினைவிற்கு கொண்டு வந்தது.
"ச்ச என்ன இது.. இப்படி
பண்றோம்.. ஏதாவது நடந்திருந்தால்
என்ன நினைத்திருப்பாள் நம்மை"
என்று தன்னைத் தானே கடிந்தவன்
அவளைப் பார்த்தான். தான் பக்கத்தில்
வந்ததைக் கூட அறியாமல்
உறக்கத்தில் இருந்தளைப்
பார்த்தவனுக்கு அப்போது தான்
தங்கையிடம் தன்னை விட்டுக்
கொடுக்காமல் பேசியது நினைவு
வந்தது. இவளுக்கு ஏன் இப்படி நம்
மேல் இவ்வளவு காதல் என்று
யோசிக்க "ஏன் உனக்கும் தானே"
என்று அவன் மனம் கேள்வி
எழுப்பியது அவனிடம். அவனுக்கும்
எப்போது வந்தது எதனால் வந்தது
என்று யூகிக்க முடியவில்லை. அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில்
மூழ்கினான்.
முன்பு இருந்ததிற்கு இப்போது லேசாக
உடம்பு ஏறி இருந்தது மதுவிற்கு.
கன்னங்கள் கூட அழகாய்
இருப்பதைக் கண்டான். பின் அவள்
அருகில் தள்ளி மெத்தையில் திரும்பிப்
படுத்தவன் அவளது தூக்கம்
கலையாமல் ஒன்றை விரலால் அவள்
கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.
"மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி
போல பளபளக்கும்
உன் கன்னங்களால்
சிதறிப்போகிறது என்
சிந்தனைகள்...
உன் இரு கன்னங்களை
எனக்குத் தந்து
என்னை சரி செய்து விடு
என் ராட்சசியே....!!!
என்று அவளது கன்னத்தை மெதுவாக
வருடினான். தன் செயலில்
கார்த்திக்கிற்கே வெட்கம் வந்தது.
(ஆணின் வெட்கம் என்பது
எழுதப்படாத கவிதை)..
பின் எப்போது உறங்கினான் என்று
அவனுக்கே நினைவில்லை.
காலையில் குளித்துவிட்டு
வந்த மது கார்த்திக்கை எழுப்பினாள்.
எழுந்து அரை தூக்கத்தில்
உட்கார்ந்தவனிடம் "அத்தை மாமா
எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம தான்
லேட்...சீக்கிரம் கிளம்புங்க"என்று
ஈரத் தலையை துடைத்த படியே
கூறினாள். அவன் அப்படியே
அவளைப் பார்த்துக் கொண்டு எழுந்து
நிற்க "என்ன?" என கேட்டாள்.
"மது உன் கன்னத்தில் ஏதோ இருக்கு"
என்றபடி அருகில் சென்று தூசு
இருப்பது போல் துடைத்துவிட்டு
அவன் ஆசையை நிறைவேற்றிக்
கொண்டவன் குளிக்க உள்ளே
சென்றுவிட்டான்.
மது குளித்துவிட்டுக் கடைசியாக
பாத்ரூம் கண்ணாடியில் முகத்தைப்
பார்த்து விட்டு தான் வெளியே
வந்தாள். அப்போது எதுவும்
இல்லையே என நினைத்தாள். அவன்
செய்கை புரியாது நின்றவள் பின்
மணி ஆகக் கிளம்பத் தயாரானாள்.
பின் அவன் குளித்து முடித்து வெளிவர
மது கண்ணிற்கு ஐலைன்னர்
வைத்துக் கொண்டு இருந்தாள் மது.
"காதல் சொன்ன கணமே அது
கடவுளைக் கண்ட கணமே.. காற்றாய்
பறக்குது மனமே.. ஓஓஓஓஓஓ!" என்ற
பாடலை மெதுவாக வாயில் அசை
போட்டபடி ஐ லைனர் மூடியை
திருகியபடியே நடந்து கொண்டு
இருந்தாள்.
அவள் பாடியதைக் கேட்டவன்
"ப்ப்ப்பாபாபா.... என்ன வாய்ஸ்" என்று
கிண்டலாகச் சிரித்தான்.
"ஏன் என் வாய்ஸிற்கு என்னக்
குறைச்சல்" இடுப்பிற்கு கைகளைக்
கொடுத்தபடி வினவினாள்.
"என்னக் குறைச்சலா.. அஹான்ன்...
இந்தத் தகர டப்பாவில் கல்லைப்
போட்டு உருட்டினால் ஒரு சத்தம் வரும்
கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று
சிரிப்பை அடக்க முடியாமல்
வினவினான்.
"ம்கும்.. உங்களுக்குப் பாட வருமா
பர்ஸ்ட்.. என்னைய சொல்றீங்க" என்று
புகைந்தவளிடம் "ஏன் எனக்கு பாட
வராது.. இப்போ பார்" என்று
யோசித்தவன்... "காலையில காதல்
சொல்லி மதியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம்
வரியா" என்று தலையை
ஆட்டிக்கொண்டே தான் உடுத்த
வேண்டிய சட்டையை எடுத்தபடிப் பாட,
மதுவோ "ஆமாம் காதலைச் சொன்ன
உடனே கல்யாணம் பண்ணிக்
கொள்வீங்களோ.. சரிதான்" என்று
யோசித்தபடி நக்கலாகப் பேச.. "அப்படி
இல்லை தான்.. ஆனால் நீ
சொன்னால் நாளைக்கே ஹனிமூன்
கிளம்ப நான் ரெடி" என்றவன் "என்ன
சொல்ற?" என்று இரண்டு முறை தன்
புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவன் கேட்டதில் என்ன சொல்வது
என்று தெரியாமல் மது திக்கு
முக்காடித்தான் போனாள்.
இருமல் வருவது போலப் பாவனை
செய்து விட்டு அறையில் இருந்த
தண்ணீர் பாட்டிலை நோக்கிச் சென்று
அவனிற்கு முதுகைக் காட்டி நின்றாள்.
"இதுல மட்டும் விவரமா இருடி நீ"
என்று நினைத்துச் சிரித்தான்
கார்த்திக். பின்பு கார்த்திக் தலையைத்
துடைத்து விட்டு வர மதுவும் ரெடியாகி
முடித்தாள்.
தலையைக் கோதிவிட்டு வந்து
வாட்ச்சை கட்டிக் கொண்டு
இருந்தவனை கண் இமைக்காது
பார்த்துக் கொண்டு இருந்தாள் மது,
பெட்டில் அமர்ந்தபடி. வைட் ஷர்ட்டிலும்
லைட் ப்ளூ ஜீன்ஸிலும் இருந்தவனை
மேல் இருந்து அளவெடுத்து சைட்
அடித்துக் கொண்டிருந்த மதுவிற்கு
கண்களில் மின்னல் வெட்டியது.
கோவிலில் அவனைப் பார்த்தது
நினைவு வந்தது. 'அந்த ஒரு நொடி
பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டு இருந்ததும்'
நினைவு வந்தது. மனம் அவனிடம்
மனதளவில் லயித்து இருந்த
நாட்களுக்குச் சென்றது.
அவனையே பார்த்து பழைய
நினைவுகளில் இருந்தவளைக்
கார்த்திக்கின் குரல் தான் கலைத்தது.
"என்ன மது மார்க் போட்டாச்சா? நான்
பாஸ் தானே?" என்று அவளைக்
குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.
அவனின் கேள்வியில் திடிரென
விழித்தவள் "எ..என்ன?" என்றுத்
தடுமாறினாள்.
அவளின் அருகில் வந்து குனிந்தவன்
பெட்டில் அவள் இருபக்கமும் கையை
ஊன்றி "இல்ல என்னைப் பார்த்துட்டே
இருக்கியே மது. அதான் கேட்டேன்..
என்ன மார்க் மது? " என்று கண்களைக்
கூர்மையாக்கிக் கேட்டான்.
அவன் அவ்வளவு அருகில் இருப்பது
நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று
அவளைத் தடுத்தது. தலையைக்
குனிந்து கொண்டு அவன் கேட்ட
கேள்விக்கு என்ன சொல்வது என்று
தெரியாமல் திணறினாள் மது.
கார்த்திக்கின் பார்வையும் அவன்
அருகில் சென்று குனிந்த போது மது
பின் சாய அப்போது லேசாக விலகி
அவளின் இடைப் பகுதியை மதுவின்
சேலைக் காட்ட அவன் கண்கள்
அங்கேயே நின்றன. இதை எதையும்
அறியாமல் தலையைக் குனிந்தபடி
சிலை போல அமர்ந்திருந்தாள்
மதுமிதா.
தடுமாறித் தான் போனான் அவளின்
மணாளன். பின் அவன் என்ன
சாமியாரா? இல்லை முற்றும் துறந்த
முனிவரா?
"மது கிளம்பிவிட்டீர்களா?" என்று
ஜானகி கீழ் இருந்து குரல் கொடுத்தார்.
"அ.... வந்துட்டோம் அத்தை" என்று
அதான் சமயம் என்று கீழே
ஓடிவிட்டாள் மது.
மனதிற்குள் சிரித்து விட்டு
கார்த்திக்கும் கீழே வர நால்வரும்
காரில் கிளம்பினர்.
ஒவ்வொரு படிகளாக
எண்ணியெண்ணி ஏறியவள்
கடைசியாக தங்கள் அறை வந்துவிட
அப்படியே நின்றாள்.. கோபமாக
இருப்பானோ என்றும் யோசித்தவள்..
சரி எப்படியும் உள்ளே போய் தானே
ஆகனும் என்று எண்ணிக் கதவைத்
திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து கதவைத்
தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்
இல்லாததைக் கண்டவள் பால்கனி
பக்கம் சென்று பார்க்க அவள்
நினைத்த படியே அங்கே தான்
அவளுடைய பிரஷர் குக்கர்
நின்றிருந்தான்.
அங்கு நின்று யாருடனோ போனில்
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
போனை அணைத்தவன் இவள்
நின்றிருந்ததைப் பார்த்து "என்ன?"
என்று வினவினான்.
"தூங்க வரலையா?" என்று
மெதுவானக் குரலில் பால்கனிக்
கதவைப் பிடித்தபடி மது கேட்டாள்.
"நீ போய் படு" என்றுத்
திரும்பிவிட்டான்.
இரண்டு நிமிடம் அங்கேயே நின்றவள்
திரும்பி வந்து லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டாள். ஆனால்
தூங்கவில்லை. ஒருமணி நேரம்
கழித்து உள்ளே வந்தவன் லைட்டை
ஆன் செய்ய மது தலையை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள். அவள்
பார்ப்பதைக் கண்டவன் எதுவும்
பேசாமல் பின் லைட்டை அணைத்து
விட்டு வந்து கையை மடக்கி
தலையின் மேல் வைத்துப் படுத்து
விட்டான். கோபமாக இருந்தாலும்
ஏதாவது பேசுவான் என்றிருந்த
மதுவிற்கு அழுகை தான் வந்தது.
அவனுக்கு முதுகுக் காட்டி
படுத்திருந்தவளுக்கு அவன் பேசாமல்
இருந்ததில் முகம் சுருங்க சும்மா
கண்களை மூடிப் படுத்திருந்தாள்.
கார்த்திக்கும் தூங்கவில்லை..
கண்ணை மூடிப் படுத்திருந்தானே
தவிர சிறிதும் அவனுக்கும் தூக்கம்
வரவில்லை. நேரம் செல்ல ஏதோ
உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன்
அருகில் மறுபறம் திரும்பிப் படுத்து
மது சத்தமில்லாமல் குலுங்கி
அழுவதைக் கவனித்தான். சத்தம்
கேட்காமல் இருக்க எழுந்து
பால்கனிக்குச் செல்லலாம் என
நினைத்தவளை, திடீரென
கார்த்திக்கின் கரங்கள் வந்து மதுவின்
இடையை அணைத்து அவன் புறம்
திருப்பியது. அவன் அவளைத் தன்
பக்கம் திருப்பி அணைக்க மது அவன்
மார்பில் புதைந்து அழுது விட்டாள்.
"ஸாரி...ஸாரி.." என்று அவன் மார்பில்
புதைந்ந படியே முணுமுணுத்தபடி
கண்ணீர் விட்டாள் அவனது
மனையாள்.
"ஓகே ஓகே.. ஹே அழாதே மது இப்போ
எதுக்கு அழுகை.." என்று
அணைத்தபடியே கேட்டான் கார்த்திக்.
அவளைத் தேற்றத் தெரியாமல்
விழித்தவனுக்கு மது தந்த பதில்
நெஞ்சில் பனியை இறக்கியது.
"ஸாரி இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ
பொஸசிவ்னெஸ்ல அப்படி
பண்ணிட்டேன்" என்று தன்னை
மறந்து கண்ணீருடன் மது கூற,
கார்த்திக்கிற்குத் தான் மிதப்பது போல
இருந்தது.. தன்னையும் ஒருத்தி
இப்படி உருகி உருகி காதலிப்பது
அவனுக்கு குலுகுலுவென இருந்தது
உண்மை தான். ஆனால் அவள் அழுவது என்னவோ போலும்
இருந்தது. அவள் அழுவதை அவனால்
ஏதோ ஏற்க முடியவில்லை.
"சரி சரி... நானும் ஸாரி..உன்னைத்
திட்டிவிட்டேன்.. அழதே மது .. எனக்கு
என்னமோ மாதிரி இருக்கு" என்று
கூறி தேம்பி அழுத அவளின் முதுகைத்
தேய்த்து விட்டான்.
எழுந்து உட்கார்ந்து அவளையும்
உட்கார வைத்து கண்களையும்
கன்னத்தையும் துடைத்து விட்டு, முகம்
கழுவி வரச் சொன்னான். "நான் கோபப் பட்டா இப்படி அழுவியா மது?",
உனக்கு என்னை ஏன் தான் இப்படி
புடிக்குதோ?". என்று மனதிற்குள்
நினைத்தபடி அமர்ந்திருந்தான்.
முகம் கழுவி வந்தவள், "சாப்பிடப்
போவோமா?" என்றாள் வாய்
எல்லாம் பற்கலாகக் கேட்டாள்.
"நீ சாப்பிடவில்லையா?" எனக் கேட்க
மது இல்லை என்று தலை ஆட்டினாள்.
"லூசு" என்று அவளைக் கடிந்தவன்,
கீழே அவளைக் கூட்டிக் கொண்டு
சென்றான். கீழே வந்த பின் மது
தோசை சுட்டுப் பொடி வைத்துக்
குடுக்க, சமையல் மேடையில்
உட்கார்ந்து அவளுக்கும் ஊட்டி
விட்டபடியே தானும் உண்டு முடித்தான்.
உண்டு முடித்துவிட்டு இருவரும்
அறைக்கு வந்து படுக்க மது சீக்கரமாக
உறங்கிவிட்டாள். ஆனால் கார்த்திக்
தான் அவளைப் பார்த்த படி
படுத்திருந்தான்.
குழந்தை போல உறங்கிக் கொண்டு
இருந்தவளைப் பார்த்தவனுக்கு
புன்னகை அரும்பியது. அரைமணி
நேரம் முன் அவளைத் தன் கைக்குள்
வைத்து இருந்தவனுக்கு, இப்போது
தான் அவளின் அருகாமையையும்
அவளின் மேல் வீசிய தன்
மனைவியின் வாசனையையும்
உணர்ந்தான். அதை உணர்ந்தவன்
அவளிடம் மயங்கி தன்னைத்
தொலைத்து அவளின் அருகில் செல்ல
அப்போது எங்கு இருந்தோ வந்த
பறவையின் ஒலி அவனை
சுயநினைவிற்கு கொண்டு வந்தது.
"ச்ச என்ன இது.. இப்படி
பண்றோம்.. ஏதாவது நடந்திருந்தால்
என்ன நினைத்திருப்பாள் நம்மை"
என்று தன்னைத் தானே கடிந்தவன்
அவளைப் பார்த்தான். தான் பக்கத்தில்
வந்ததைக் கூட அறியாமல்
உறக்கத்தில் இருந்தளைப்
பார்த்தவனுக்கு அப்போது தான்
தங்கையிடம் தன்னை விட்டுக்
கொடுக்காமல் பேசியது நினைவு
வந்தது. இவளுக்கு ஏன் இப்படி நம்
மேல் இவ்வளவு காதல் என்று
யோசிக்க "ஏன் உனக்கும் தானே"
என்று அவன் மனம் கேள்வி
எழுப்பியது அவனிடம். அவனுக்கும்
எப்போது வந்தது எதனால் வந்தது
என்று யூகிக்க முடியவில்லை. அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில்
மூழ்கினான்.
முன்பு இருந்ததிற்கு இப்போது லேசாக
உடம்பு ஏறி இருந்தது மதுவிற்கு.
கன்னங்கள் கூட அழகாய்
இருப்பதைக் கண்டான். பின் அவள்
அருகில் தள்ளி மெத்தையில் திரும்பிப்
படுத்தவன் அவளது தூக்கம்
கலையாமல் ஒன்றை விரலால் அவள்
கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.
"மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி
போல பளபளக்கும்
உன் கன்னங்களால்
சிதறிப்போகிறது என்
சிந்தனைகள்...
உன் இரு கன்னங்களை
எனக்குத் தந்து
என்னை சரி செய்து விடு
என் ராட்சசியே....!!!
என்று அவளது கன்னத்தை மெதுவாக
வருடினான். தன் செயலில்
கார்த்திக்கிற்கே வெட்கம் வந்தது.
(ஆணின் வெட்கம் என்பது
எழுதப்படாத கவிதை)..
பின் எப்போது உறங்கினான் என்று
அவனுக்கே நினைவில்லை.
காலையில் குளித்துவிட்டு
வந்த மது கார்த்திக்கை எழுப்பினாள்.
எழுந்து அரை தூக்கத்தில்
உட்கார்ந்தவனிடம் "அத்தை மாமா
எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம தான்
லேட்...சீக்கிரம் கிளம்புங்க"என்று
ஈரத் தலையை துடைத்த படியே
கூறினாள். அவன் அப்படியே
அவளைப் பார்த்துக் கொண்டு எழுந்து
நிற்க "என்ன?" என கேட்டாள்.
"மது உன் கன்னத்தில் ஏதோ இருக்கு"
என்றபடி அருகில் சென்று தூசு
இருப்பது போல் துடைத்துவிட்டு
அவன் ஆசையை நிறைவேற்றிக்
கொண்டவன் குளிக்க உள்ளே
சென்றுவிட்டான்.
மது குளித்துவிட்டுக் கடைசியாக
பாத்ரூம் கண்ணாடியில் முகத்தைப்
பார்த்து விட்டு தான் வெளியே
வந்தாள். அப்போது எதுவும்
இல்லையே என நினைத்தாள். அவன்
செய்கை புரியாது நின்றவள் பின்
மணி ஆகக் கிளம்பத் தயாரானாள்.
பின் அவன் குளித்து முடித்து வெளிவர
மது கண்ணிற்கு ஐலைன்னர்
வைத்துக் கொண்டு இருந்தாள் மது.
"காதல் சொன்ன கணமே அது
கடவுளைக் கண்ட கணமே.. காற்றாய்
பறக்குது மனமே.. ஓஓஓஓஓஓ!" என்ற
பாடலை மெதுவாக வாயில் அசை
போட்டபடி ஐ லைனர் மூடியை
திருகியபடியே நடந்து கொண்டு
இருந்தாள்.
அவள் பாடியதைக் கேட்டவன்
"ப்ப்ப்பாபாபா.... என்ன வாய்ஸ்" என்று
கிண்டலாகச் சிரித்தான்.
"ஏன் என் வாய்ஸிற்கு என்னக்
குறைச்சல்" இடுப்பிற்கு கைகளைக்
கொடுத்தபடி வினவினாள்.
"என்னக் குறைச்சலா.. அஹான்ன்...
இந்தத் தகர டப்பாவில் கல்லைப்
போட்டு உருட்டினால் ஒரு சத்தம் வரும்
கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று
சிரிப்பை அடக்க முடியாமல்
வினவினான்.
"ம்கும்.. உங்களுக்குப் பாட வருமா
பர்ஸ்ட்.. என்னைய சொல்றீங்க" என்று
புகைந்தவளிடம் "ஏன் எனக்கு பாட
வராது.. இப்போ பார்" என்று
யோசித்தவன்... "காலையில காதல்
சொல்லி மதியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம்
வரியா" என்று தலையை
ஆட்டிக்கொண்டே தான் உடுத்த
வேண்டிய சட்டையை எடுத்தபடிப் பாட,
மதுவோ "ஆமாம் காதலைச் சொன்ன
உடனே கல்யாணம் பண்ணிக்
கொள்வீங்களோ.. சரிதான்" என்று
யோசித்தபடி நக்கலாகப் பேச.. "அப்படி
இல்லை தான்.. ஆனால் நீ
சொன்னால் நாளைக்கே ஹனிமூன்
கிளம்ப நான் ரெடி" என்றவன் "என்ன
சொல்ற?" என்று இரண்டு முறை தன்
புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவன் கேட்டதில் என்ன சொல்வது
என்று தெரியாமல் மது திக்கு
முக்காடித்தான் போனாள்.
இருமல் வருவது போலப் பாவனை
செய்து விட்டு அறையில் இருந்த
தண்ணீர் பாட்டிலை நோக்கிச் சென்று
அவனிற்கு முதுகைக் காட்டி நின்றாள்.
"இதுல மட்டும் விவரமா இருடி நீ"
என்று நினைத்துச் சிரித்தான்
கார்த்திக். பின்பு கார்த்திக் தலையைத்
துடைத்து விட்டு வர மதுவும் ரெடியாகி
முடித்தாள்.
தலையைக் கோதிவிட்டு வந்து
வாட்ச்சை கட்டிக் கொண்டு
இருந்தவனை கண் இமைக்காது
பார்த்துக் கொண்டு இருந்தாள் மது,
பெட்டில் அமர்ந்தபடி. வைட் ஷர்ட்டிலும்
லைட் ப்ளூ ஜீன்ஸிலும் இருந்தவனை
மேல் இருந்து அளவெடுத்து சைட்
அடித்துக் கொண்டிருந்த மதுவிற்கு
கண்களில் மின்னல் வெட்டியது.
கோவிலில் அவனைப் பார்த்தது
நினைவு வந்தது. 'அந்த ஒரு நொடி
பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டு இருந்ததும்'
நினைவு வந்தது. மனம் அவனிடம்
மனதளவில் லயித்து இருந்த
நாட்களுக்குச் சென்றது.
அவனையே பார்த்து பழைய
நினைவுகளில் இருந்தவளைக்
கார்த்திக்கின் குரல் தான் கலைத்தது.
"என்ன மது மார்க் போட்டாச்சா? நான்
பாஸ் தானே?" என்று அவளைக்
குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.
அவனின் கேள்வியில் திடிரென
விழித்தவள் "எ..என்ன?" என்றுத்
தடுமாறினாள்.
அவளின் அருகில் வந்து குனிந்தவன்
பெட்டில் அவள் இருபக்கமும் கையை
ஊன்றி "இல்ல என்னைப் பார்த்துட்டே
இருக்கியே மது. அதான் கேட்டேன்..
என்ன மார்க் மது? " என்று கண்களைக்
கூர்மையாக்கிக் கேட்டான்.
அவன் அவ்வளவு அருகில் இருப்பது
நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று
அவளைத் தடுத்தது. தலையைக்
குனிந்து கொண்டு அவன் கேட்ட
கேள்விக்கு என்ன சொல்வது என்று
தெரியாமல் திணறினாள் மது.
கார்த்திக்கின் பார்வையும் அவன்
அருகில் சென்று குனிந்த போது மது
பின் சாய அப்போது லேசாக விலகி
அவளின் இடைப் பகுதியை மதுவின்
சேலைக் காட்ட அவன் கண்கள்
அங்கேயே நின்றன. இதை எதையும்
அறியாமல் தலையைக் குனிந்தபடி
சிலை போல அமர்ந்திருந்தாள்
மதுமிதா.
தடுமாறித் தான் போனான் அவளின்
மணாளன். பின் அவன் என்ன
சாமியாரா? இல்லை முற்றும் துறந்த
முனிவரா?
"மது கிளம்பிவிட்டீர்களா?" என்று
ஜானகி கீழ் இருந்து குரல் கொடுத்தார்.
"அ.... வந்துட்டோம் அத்தை" என்று
அதான் சமயம் என்று கீழே
ஓடிவிட்டாள் மது.
மனதிற்குள் சிரித்து விட்டு
கார்த்திக்கும் கீழே வர நால்வரும்
காரில் கிளம்பினர்.