அருமையான பதிவு மிலா.மூடிட்டு தூங்கு.எப்படி கெத்தா இருந்தவன் நிலை இப்படி ஆகிடுச்சே.சின்ன பையன் மட்டும் கல்யாணத்தை நிறுத்த நினைக்கலைனா, கணபதி சுயரூபம் தெரிஞ்சிருக்காது,கல்யாணமும் நடந்திருக்கும்னு சரியா சொன்னா.
அருள் காதலை சொல்லாம கடலை மிட்டாய் கொடுத்துட்டு போனது தான், வேற என்ன பண்ணான்.கோதை,அருள்வேலுக்கு அடிபட்டதா சொல்லி அன்பழகியை அனுப்ப நினைக்க,இங்கே அன்புக்கு பாம்பு கடிச்சதை கேட்டு அருள் வந்துட்டான்,இதுவும் கோதை செஞ்ச வேலையா
பொண்டாட்டிய பார்க்க வந்துட்டு நல்லதா நாலு வார்த்தை பேசாம இப்படி கத்தறான்.இவன் இப்படியே பண்ணா அன்பு,அருள் தன்னை விரும்புவதை எப்படி புரிஞ்சுக்குவா.
அப்பா தன் பேரில் திருமணத்துக்காக சேர்த்து வச்ச வங்கி புத்தகத்தை பார்த்து தன் மேல் இவ்வளவு பாசமா என்றும்,முத்தழகி மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை சீட்டு போட்டது தெரிந்து பாலமுருகன் தாயை பார்க்கலை என நினைத்ததும் தவறு என புரியுது.அருள்,அப்பா இருவரிடமும் அன்பு மனசு விட்டு பேசாத பிரச்சனைக்கு காரணம்.
கோதை போட்ட ப்ளான் நடக்கலைன்னா என்ன பண்றதுன்னு பாம்பு தன் வேலையைக் காட்டிருச்சுஅதையும் சாமர்த்தியமா பயன்படுத்திட்டா
அன்பழகிக்கு அவங்க அப்பா பாசம் புரிய ஆரம்பிச்சிருச்சி...
அருள் தன்னோட பாசத்தினால தான் திட்டி தீர்க்கிறான் அது எப்ப அவளுக்குப் புரியப் போகுதோ...
கிருஷ்ணா குடும்பத்தைக் கலாய்க்க கோதையினால் மட்டுமே முடியும்