அருமையான பதிவு மிலா
எல்லாரும் கண்ணுக்கு தான் கண்ணாடி போட்டிருப்பாங்க,அனி மூளைக்கும் சேர்த்து போட்டிருக்கா
.அதீ,மஞ்சரிய பார்க்க போறதை சரியா சொல்லிட்டா
.
ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை போல மனசு துடிக்க,மஞ்சரியை பார்த்தே ஆக வேண்டும் என செல்லும் அதீசன்,மஞ்சரிக்கு அவள் கணவனால் பிரச்சனை எதாவது ஏற்பட, அவளை திருமணம் செய்து அழைத்து வருவானா
.
அர்ஜூன்,மாலினியை எப்போதும் வம்பிழுப்பதையும்,கிருஷ்ணாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதது தெரிந்து ஜோடி மாறுமோ என நினைத்தது தான்,ஆனா வேஷ்டிய பிடிக்கற நெனப்புல மாலினி கழுத்துல தாலிய போடுவான்னு நெனைக்கலே
.செந்தில் தன் மகளுக்கு அர்ஜூனோடு கல்யாணம் நடக்கனும்னு மனசாட்சி இல்லாம பேசறார்
.
கிருஷ்ணாவோட அப்பாவுக்காக மாலினி இனி வெக்கம்,மானம் இல்லாம கிருஷ் பின்னாடி அலைய வேண்டியதில்லை
.அதீக்கு தானே திடீர் கல்யாணம் நடக்கும்னு ஜோசியர் சொன்னார்
அர்ஜூனுக்கு நடந்திருச்சு, அதே நேரத்தில் அதீக்கும் கல்யாணம் நடந்திருக்குமோ
.
கணவன் மோசம் செய்து விட்டான் என சோர்ந்து போகாமல் வத்சலா,வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இல்லத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது அருமை
.