நான் உங்கள் தளத்தில் இணையலாமானு கேட்டவுடன் எனக்கு வாய்ப்பளித்த சகோதரி மல்லிகாமணிவண்ணண் அவர்களுக்கு மிக்க நன்றி.இது வரை வீரமாகாளி என்ற தலைப்பில் மூன்று பாகம் எழுதியிருக்கேன்.நிறைய பாராட்டுகள் கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.நிறைய ஆர்வத்தோடும் கேள்விகளோடும் என் பதிலுக்காகக் காத்திருப்பவர்களிடம் சின்ன வேண்டு கோள்.வீர மார்த்தாண்டன் ஒரு விசயத்தில் மட்டுமே மோசமானவர்.ஆனால் யார் உதவினு வந்து கேட்டாலும் உடனே செய்து கொடுப்பவர்.அவர் செய்த உதவியையும் தெரிஞ்சுக்கிட்டு கதைக்குள் போகலாம்.அது வரை பொறுமையாப் படிங்க.நிறையப் பேரைப் படிக்க சொல்லுங்க.நான் பிரதிலிபியிலே கதை எழுதும் போது வாசகர்கள் சேர்ந்தப்போ தனித் தனியா நன்றி சொல்லத் தெரியலை.மொத்தமா பிரதிலிபிக்குனு பதிவு போட்டு நன்றி சொல்லிட்டு இருந்தேன்.ஒரு நாள் நான் ஏதோ எழுதிய பதிவிற்கு மரியசெல்வம் என்ற சகோதரி எங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல மாட்டீங்களானு கேட்டவுடனே எனக்கு கஷ்டமாவும் அழுகையும் வந்திடுச்சு.பக்கத்தில் என் பெரிய பையன் படிச்சிட்டிருந்தவன் இதைக் கவனித்து அந்தப் பக்கத்தை எடுத்து இப்போ ரிப்ளை பண்ணுங்கனு சொன்னான்.அதுக்கப்புறம் தான் நான் அனைவருக்கும் தனியா நன்றி சொல்லத் தொடங்கினேன்.இப்போவும் எனக்கு எப்படி ஒவ்வொருத்தர் கூறும் விமர்சனத்துக்கு நன்றி சொல்றதுனு தெரியலை.திருப்பித் திருப்பி சொன்னவங்களுக்கே நன்றி சொல்றேன்.பெரியவன் நீட் கோச்சிங் போறான்.போன தடவை ஸ்கூல் சிலபஸ் நீட் இரண்டையும் எழுதினதுனாலே மார்க் கம்மியாகிடுச்சு.பாரின்லே கூப்பிட்டாங்க. இவன் வேணாம்னுட்டான்.டென்டல் கிடைச்சது.அதை என் தம்பியும் கொழுந்தனும் வேணாம்.ஒரு வருசம் கோச்சிங் போகட்டும்.அடுத்த தடவை எழுதட்டும்னுட்டாங்க.இப்போ நிறைய படிக்க வேண்டி இருப்பதாலே சொல்லித் தர மாட்டேன்கிறான்.இன்னிக்கு சாயந்திரம் வந்து சொல்லித் தாரேனு எக்ஸாம்க்குப் போயிருக்கான்.வந்தவுடனே சொல்லிக் கொடுத்தான்னா நான் தனித் தனியா நன்றி சொல்றேன்.அதுவரைக்கும் பொறுமையா இருங்கப்பா.தொடர்ந்து படிச்சு ஆதரவு தாங்கப்பா.இது வரை ஆதரவு தந்தவங்களுக்கு ரொம்ப நன்றிப்பா.