shiyamala sothy
Well-Known Member
Hi shoba sis!
வெகு வெகு பிரமாதமான கதை. இது உங்களடோ முதல் கதை மாதிரி தெரியேல்லை. சூப்பரா எழுதியிருக்கின்றீர்கள். கலக்கிட்டீங்கள் போங்கோ.(போங்கோன்னு சொன்னதும் போயிடாதேங்கோ இன்னும் பற்பல அரும்மையான கதைகளைத் தரவேணும்) ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. ரசிச்சு ருசிச்சு செதுக்கியிருக்கின்றீர்கள். எனக்கு சில சமயங்கள் கதைகளைக் காத்திருந்து ஒவ்வொரு எபியும் படிக்கப் பொறுமையிருப்பதில்லை. கதை முடிந்தவுடன் தான் படிக்கப் பிடிக்கும். அந்த வகையில் கதைகளை ஒவ்வொரு எபியாகப் படிக்கும் என் சக வாசக நெஞ்சங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். கதை இதயத் துடிப்பை அதிகரிக்காது என்று சொன்னீர்கள். முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம் படித்ததும் நெஞ்சுத்துடிப்பு அதிகரிக்குது, இதயம் எம்பி எம்பிக் குதிக்குது. வயிறெல்லாம் பிசையுது. அடுத்த பாகத்தைப் படிக்கப் போகப் பயமா இருக்குத் தயக்கமா இருக்கு. வேறு கதைகளை இப்படிப் படிக்கும் போது பொறுமையில்லாமல் நெஞ்சப் படபடப்பை அடக்குவதற்காக முடிவைப் படித்தபின் ஆறுதலாக அமைதியாக மிகுதி அத்தியாயங்களைப் படிப்பேன். இக்கதை இன்னும் போய்க் கொண்டிருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அசோகச்சக்கரவர்த்தியும் அவரது நெஞ்சத்து மகாராணியும் உருகிக் காதலித்து சண்டையிட்டுப் பிரிந்து இருவரும் மணம் முடித்து இனிதாக வாழ்க்கை பாடத்தைப் படிக்க ஆரம்பித்து வாழ்க்கையைத் தொடருவதற்குள் இப்படி ஆகிவிட்டதே. பாவம் சுசீலாம்மா என்ன பாடுபடப் போகின்றார்களோ இச்செய்தியை அறிந்தவுடன். அருமை பெருமையா மகனைப் போற்றி வளர்த்திருக்கின்றார்கள். மகனுக்காகவே வாழ்கின்றவர் எவ்வாறு துடிக்கப் போகின்றாரோ தெரியாது. அந்தப் பரதேசி குணா மட்டும் கையில் கிடைக்கட்டும் தெரியும் சங்கதி. பொறுக்கி நாய், பஞ்சப் பரதேசி, காமவெறி பிடித்த மிருகம், கேடுகெட்ட அரக்கன், அசுரன், பேய்பிசாசு(அதுகள் கூட என்னை அடிக்க வந்திடும் குணாவுடன் தங்களை ஒப்பிடுவதால்) சுதாவைத் தான் அடைவதற்காக் காதல் பறவைகளைப் பிரித்து விட்டானே. இருவரும் இறந்துவிட்டார்களா?, அல்லது ஒருவர் பிழைத்து ஒருவர் இறந்து விட்டாரா?, அல்லது இருவரும் கோமாவிலா? ஒருவர் சுயத்துக்கு வந்து மற்றவர் கோமாவிலா? அல்லது இருவரும் பிழைத்து ஒருவருக்கு நியாபக மறதியா? அல்லது இருவருக்குமேயா? ஒரு வழியாக நெஞ்சத்தைத் தேற்றி அடுத்த பாகத்தைப் படிக்கப் போகின்றேன். காலையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் போது மதியச் சாப்பாட்டுக்குப் பாஸ்தாவை லஞ்ச் பொக்சில் அடைக்கும் போது ஐயோ வேலை இன்னும் முடியேல்லையே இதுகளை ஸ்கூலுக்கு விரட்டி விட்டு எப்ப கதையைப் படிப்பேன் என்று இருக்கே. வேலையும் முடியமாட்டேங்குது கதையும் எப்படிப் போகப் போகுதோ தெரியாதே என்று நான் மெதுவாப் புலம்பும்போது என் பொண்ணு கேட்டாள் என்னமா முணுமுணுக்கின்றாய் என்று. ஆஹா நம்ம குட்டுத் தெரியக் கூடாதே. அது ஒண்ணுமில்லை வெறித் தனம் பாட்டைத் தான் முணுமுணுக்கின்றேன்.(என் பொண்ணுங்க விஜய் விசிறி ஆச்சே) என்றேன் அதுக்கு என் பொண்ணு காலையிலேயே அம்மா லொஸ்ட் ஹேர் மைன்ட் என்று பட்டம் சூட்டி விட்டாள். என் வெறித்தனம் எதுலையென்று தெரிந்தால் என் புருசன் கார்த்தாலையே லட்சார்ச்சனையைத் தொடங்கியிருப்பார். பொண்ணுகளும் புதுப் புது பட்டங்கள் சூட்டியிருப்பார்கள். அப்புறம் என்ன்ன் நிலமை? கதைகளைப் படித்துக் கருத்துக்களைப் போட சோம்பேறியான நானே இக்கதைக்காக இப்போ கருத்துப் போடுறேன் துணிந்து அடுத்த பாகத்தைப் படிக்கப் போகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த சூப்பர் கதைக்காகப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும். இக்கதைக்காக "ஏனோ வானிலை மாறுதே" பாடலை சமர்பிக்கின்றேன். "தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப்போகச் சொல்லாதே" , "விதியின் சதி விளையாடுதே எனைவிட்டுப் பிரியாதன்பே", "எனைவிட்டுப் பிரியாதன்பே". நன்றி.
வெகு வெகு பிரமாதமான கதை. இது உங்களடோ முதல் கதை மாதிரி தெரியேல்லை. சூப்பரா எழுதியிருக்கின்றீர்கள். கலக்கிட்டீங்கள் போங்கோ.(போங்கோன்னு சொன்னதும் போயிடாதேங்கோ இன்னும் பற்பல அரும்மையான கதைகளைத் தரவேணும்) ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. ரசிச்சு ருசிச்சு செதுக்கியிருக்கின்றீர்கள். எனக்கு சில சமயங்கள் கதைகளைக் காத்திருந்து ஒவ்வொரு எபியும் படிக்கப் பொறுமையிருப்பதில்லை. கதை முடிந்தவுடன் தான் படிக்கப் பிடிக்கும். அந்த வகையில் கதைகளை ஒவ்வொரு எபியாகப் படிக்கும் என் சக வாசக நெஞ்சங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். கதை இதயத் துடிப்பை அதிகரிக்காது என்று சொன்னீர்கள். முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம் படித்ததும் நெஞ்சுத்துடிப்பு அதிகரிக்குது, இதயம் எம்பி எம்பிக் குதிக்குது. வயிறெல்லாம் பிசையுது. அடுத்த பாகத்தைப் படிக்கப் போகப் பயமா இருக்குத் தயக்கமா இருக்கு. வேறு கதைகளை இப்படிப் படிக்கும் போது பொறுமையில்லாமல் நெஞ்சப் படபடப்பை அடக்குவதற்காக முடிவைப் படித்தபின் ஆறுதலாக அமைதியாக மிகுதி அத்தியாயங்களைப் படிப்பேன். இக்கதை இன்னும் போய்க் கொண்டிருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அசோகச்சக்கரவர்த்தியும் அவரது நெஞ்சத்து மகாராணியும் உருகிக் காதலித்து சண்டையிட்டுப் பிரிந்து இருவரும் மணம் முடித்து இனிதாக வாழ்க்கை பாடத்தைப் படிக்க ஆரம்பித்து வாழ்க்கையைத் தொடருவதற்குள் இப்படி ஆகிவிட்டதே. பாவம் சுசீலாம்மா என்ன பாடுபடப் போகின்றார்களோ இச்செய்தியை அறிந்தவுடன். அருமை பெருமையா மகனைப் போற்றி வளர்த்திருக்கின்றார்கள். மகனுக்காகவே வாழ்கின்றவர் எவ்வாறு துடிக்கப் போகின்றாரோ தெரியாது. அந்தப் பரதேசி குணா மட்டும் கையில் கிடைக்கட்டும் தெரியும் சங்கதி. பொறுக்கி நாய், பஞ்சப் பரதேசி, காமவெறி பிடித்த மிருகம், கேடுகெட்ட அரக்கன், அசுரன், பேய்பிசாசு(அதுகள் கூட என்னை அடிக்க வந்திடும் குணாவுடன் தங்களை ஒப்பிடுவதால்) சுதாவைத் தான் அடைவதற்காக் காதல் பறவைகளைப் பிரித்து விட்டானே. இருவரும் இறந்துவிட்டார்களா?, அல்லது ஒருவர் பிழைத்து ஒருவர் இறந்து விட்டாரா?, அல்லது இருவரும் கோமாவிலா? ஒருவர் சுயத்துக்கு வந்து மற்றவர் கோமாவிலா? அல்லது இருவரும் பிழைத்து ஒருவருக்கு நியாபக மறதியா? அல்லது இருவருக்குமேயா? ஒரு வழியாக நெஞ்சத்தைத் தேற்றி அடுத்த பாகத்தைப் படிக்கப் போகின்றேன். காலையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் போது மதியச் சாப்பாட்டுக்குப் பாஸ்தாவை லஞ்ச் பொக்சில் அடைக்கும் போது ஐயோ வேலை இன்னும் முடியேல்லையே இதுகளை ஸ்கூலுக்கு விரட்டி விட்டு எப்ப கதையைப் படிப்பேன் என்று இருக்கே. வேலையும் முடியமாட்டேங்குது கதையும் எப்படிப் போகப் போகுதோ தெரியாதே என்று நான் மெதுவாப் புலம்பும்போது என் பொண்ணு கேட்டாள் என்னமா முணுமுணுக்கின்றாய் என்று. ஆஹா நம்ம குட்டுத் தெரியக் கூடாதே. அது ஒண்ணுமில்லை வெறித் தனம் பாட்டைத் தான் முணுமுணுக்கின்றேன்.(என் பொண்ணுங்க விஜய் விசிறி ஆச்சே) என்றேன் அதுக்கு என் பொண்ணு காலையிலேயே அம்மா லொஸ்ட் ஹேர் மைன்ட் என்று பட்டம் சூட்டி விட்டாள். என் வெறித்தனம் எதுலையென்று தெரிந்தால் என் புருசன் கார்த்தாலையே லட்சார்ச்சனையைத் தொடங்கியிருப்பார். பொண்ணுகளும் புதுப் புது பட்டங்கள் சூட்டியிருப்பார்கள். அப்புறம் என்ன்ன் நிலமை? கதைகளைப் படித்துக் கருத்துக்களைப் போட சோம்பேறியான நானே இக்கதைக்காக இப்போ கருத்துப் போடுறேன் துணிந்து அடுத்த பாகத்தைப் படிக்கப் போகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த சூப்பர் கதைக்காகப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும். இக்கதைக்காக "ஏனோ வானிலை மாறுதே" பாடலை சமர்பிக்கின்றேன். "தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப்போகச் சொல்லாதே" , "விதியின் சதி விளையாடுதே எனைவிட்டுப் பிரியாதன்பே", "எனைவிட்டுப் பிரியாதன்பே". நன்றி.