Malli
வர்ஷ் தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் அவள் பின் இருந்து அனைத்தையும் செய்தது ஈஸ்வர் என்று வருது... ஈஸ்வர் செய்ததற்கு அவள் மேல் உள்ள அதீத காதல் காரணமாக இருக்கலாம்... ஒரு வேலை அவளிடம் உன் அப்பாவிற்காக என்றும் மறைக்கலாம்.... ஆனால் வர்ஷ் அதை ஏன் ஏற்றுக்கொண்டால்?? பொழுதும் அஷ்வின் மூலமாக அவள் அனைத்து செயலும் அவனுக்கு தெரியும் என்று அவளுக்கும் தெரியும்
வர்ஷ், ஈஸ்வரின் உதவிகளை ஏற்று கொண்ட காரணம் என்ன??? அவளுக்கு அவன் மேல் உள்ள காதலா... விலகினாலும் அவனை விட்டு முற்றிலும் விலக முடியா நிலையா?? அல்லது இயலாமையா??
சில நேரம் அவள் மிகுந்த ஆளுமையுடைய கதாபாத்திரமாக வருகிறாள்... அவள் அழகாக தன் நிலையை அண்ணன் தாத்தாவிடம் கூட தன் நிலையை அழகாக வெளி படுத்துகிறாள்... ராஜாராம் கூட தன் மகள் மட்டும் தன்னை கொண்டு உள்ளதாக நினைக்கிறார்... ஆனால் அந்த ஆளுமை ஈஸ்வரிடம் இல்லை... அவன் தவறாக நடக்க முற்பட்ட பின் போதை எடுக்கிறாள்... எந்த ஒரு சாதாரண பெண் என்றாலும் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பாலே ஒழிய... தன்னை அழிக்கும் என்று அறிந்தும் எடுக்க மாட்டாள்... (Is he her dream man, is that the reason behind she going after narcotics... like he did this to me.. you too brutus???)
அப்படி அவளுக்கும் அவன் மேல் தீரா காதல் இருந்தால் மனம் உடனே மன்னித்து விடுமே?? அந்த காதல் தான் அவளை மனித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது என்றால் அவளால் ஏன் ஐஸ் விஷயத்தை மன்னிக்க முடியவில்லை???
ஒரு வேளை ஐஸ் யார் மூலம் எவ்வாறு எதனால் தெரிய வந்தது என்பது தான் அவர்கள் பிரிவிற்கு காரணமா??? can we expect a twist there?? eagerly waiting malli