Sainandhu
Well-Known Member
உங்க வீட்டு வாஷிங் மெஷினிடம் இது போன்ற நடத்தையை நீங்களும் பார்த்து இருக்கலாம்,....
படிங்க ....மனம் விட்டு சிரிங்க.....
இதனிடம் ஒரு கெட்ட குணம் உண்டு. ஹாலில் விருந்தாளிகளுடன் நாம் பேசிக்கொண்டிருக்கும்
போது, தானும் ஏதோ விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயம்
அடிக்கடி இதுக்கு ஏற்பட்டு விடும்.
அலசுகிற வரை பொறுமையாக இருக்கும் ...உலர வைக்கும் கட்டத்துக்கு வந்ததும்
‘உய்ய்ங் டர்ர்ர்ங் “ என்று பிரமாதமாக சத்தம் போட்டவாறு பாத்ரூமிலிருந்து கிளம்பி,
ஹாலுக்கே வந்து நம்மோடு அதுவும் ஒரு மனுஷர் மாதிரி நின்றுகொண்டுவிடும்.
சரி, வந்ததுதான் வந்தது. சத்தம் போடாமல் நின்று கொண்டிருக்கலாமல்லவா..? யாரோ அதை
அடித்து கொலை செய்வது போல பல வகைகளில் கத்திக் கூவும். அருள் வந்த காளி கோயில் பூசாரி
மாதிரி உடம்பை ஆட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் !
பல விருந்தாளிகள் அடிக்கடி என்னை கேட்கும் முதல் கேள்வி : “ வாஷிங் மெஷின் சௌக்கியமா ? “
வீட்டுலே வயசான என் மாமியார் இருக்கிறாள்.சாகற வயசில மாமனார் இருக்கிறார்.
நானே இருமிக் கொண்டு கிடக்கிறேன். என்னைப் பற்றியோ,மற்றவர்களைப் பற்றியோ
ஒரு விசாரணை கிடையாது...நாலு பேர் வந்திருக்கும் போது ஏன் இது உள்ளையே
இருக்கக்கூடாது ? தன்னைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டுமென்று ஒரு
அல்ப ஆசை தானே. ...?
சிரிப்பு சித்தர் ,திரு பாக்கியம் ரமாசாமி ஐயா அவர்களின் காலத்தால் அழியாத
நகைச்சுவை கட்டுரை“ எங்கள் வீட்டு எந்திரங்கள் “ ஒரு பகுதி இது...
மனம் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்....
படிங்க ....மனம் விட்டு சிரிங்க.....
இதனிடம் ஒரு கெட்ட குணம் உண்டு. ஹாலில் விருந்தாளிகளுடன் நாம் பேசிக்கொண்டிருக்கும்
போது, தானும் ஏதோ விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயம்
அடிக்கடி இதுக்கு ஏற்பட்டு விடும்.
அலசுகிற வரை பொறுமையாக இருக்கும் ...உலர வைக்கும் கட்டத்துக்கு வந்ததும்
‘உய்ய்ங் டர்ர்ர்ங் “ என்று பிரமாதமாக சத்தம் போட்டவாறு பாத்ரூமிலிருந்து கிளம்பி,
ஹாலுக்கே வந்து நம்மோடு அதுவும் ஒரு மனுஷர் மாதிரி நின்றுகொண்டுவிடும்.
சரி, வந்ததுதான் வந்தது. சத்தம் போடாமல் நின்று கொண்டிருக்கலாமல்லவா..? யாரோ அதை
அடித்து கொலை செய்வது போல பல வகைகளில் கத்திக் கூவும். அருள் வந்த காளி கோயில் பூசாரி
மாதிரி உடம்பை ஆட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் !
பல விருந்தாளிகள் அடிக்கடி என்னை கேட்கும் முதல் கேள்வி : “ வாஷிங் மெஷின் சௌக்கியமா ? “
வீட்டுலே வயசான என் மாமியார் இருக்கிறாள்.சாகற வயசில மாமனார் இருக்கிறார்.
நானே இருமிக் கொண்டு கிடக்கிறேன். என்னைப் பற்றியோ,மற்றவர்களைப் பற்றியோ
ஒரு விசாரணை கிடையாது...நாலு பேர் வந்திருக்கும் போது ஏன் இது உள்ளையே
இருக்கக்கூடாது ? தன்னைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டுமென்று ஒரு
அல்ப ஆசை தானே. ...?
சிரிப்பு சித்தர் ,திரு பாக்கியம் ரமாசாமி ஐயா அவர்களின் காலத்தால் அழியாத
நகைச்சுவை கட்டுரை“ எங்கள் வீட்டு எந்திரங்கள் “ ஒரு பகுதி இது...
மனம் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்....