நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம் - 3(அ)
"ஏண்டி அமுதா, பரீட்சை ஈஸியா..? எப்படி எழுதியிருக்க..?"
"ஆமா, படிச்சாவுல ஈஸியா எழுதமுடியும் நைட்டு சாமிபாத்துட்டு நாட்டுப்புறப்பாட்டு பட்டி மன்றம் நடந்துச்சு அத பாத்துட்டு வந்து படுக்கவே மணி 12 ஆச்சு அப்புறம் எங்குட்டு படிக்க.... ஆமா நீ ஏண்டி சாமி கும்பிட்டுட்டு உடனே வந்துட்ட..? "
" இந்த இம்சை அப்பத்தாவ கூட்டிட்டு போனா எங்குட்டு பட்டி மன்றம் பாக்க...!. இருஅப்பத்தான்னு சொன்னா 'போங்கடி தூக்கம் வருது, கை வலிக்குது, கால் வலிக்குதுன்னு ஒரே புலம்பல்' , பத்தாததுக்கு இந்த 500ரூபாய் செல்போன கையில வச்சுக்கிட்டு அது படுத்துற பாடு தாங்க முடியல...!. நீ வீட்டுக்குப்போன்னு சொன்னா உடனே போன போட்டு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சொல்லி திட்டு வாங்கி குடுத்துகிட்டே இருக்குடி".
" ஆமாடி, நம்மள கூட காலேஜில செல்போன் யூஸ்பண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க. உங்க அப்பத்தா வயசு 75 ஆச்சு எதுக்குடி ரெண்டு போன் வச்சுக்கிட்டு ரொம்ப அலப்பர பன்னுது அதை எங்கிட்டாச்சும் தூக்கி எறிய வேண்டியது தானடி...?"
" போடி, நீ வேற அது என்னவோ பெரிய ID card மாதிரி சுருக்குபைக்குள்ள போனப்போட்டு கழுத்துல கட்டி தொங்க விட்டுட்டு திரியுது.... கேட்டா வயசான காலத்துல எங்கையாவது கை தவறி போட்றுவேன்னு சொல்லுது... ஒன்ன எடுத்து பீரோவுல வச்சு பூட்டி வச்சுருக்கு, கேட்டா ஜார்ஜ் போடும் போது போன் வந்தா அத எடுத்து பேச கூடாதுன்னு அந்த போன யூஸ் பண்றதா சொல்லுதடி ஈஸியா சிம்கிடைச்சதனால 2 போன யூஸ் பண்ணுது..... பால் கறக்கிற கந்தன் அண்ணன் லேட்டா வந்தாகூட கூட்பிட உடனே ஒரு போன், பாவம் அந்த அண்ணன் இந்த அப்பத்தாகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறார்டி"
" சரி வா பஸ் வந்துருச்சு. திருவிழா நடக்கிறதால பஸ்சை முன்னாடியே நிப்பாட்டி கீழே இறக்கி விட்டருவான். நாம நடந்து தான் வீட்டுக்கு போகனும்".
பஸ்சை விட்டு கீழே இறங்கியவர்கள் அங்கு நின்றிருந்த அப்பத்தாவை பார்த்தவுடன் கலகலவென சிரித்தார்கள்.
" ஏண்டி, என்ன என்னைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருது, ஏண்டி அமுதா என்ன நக்கலா, இரு உங்க வீட்டு கிழவிகிட்ட வந்து சொல்றேன்".
" ஆத்தி, கயலு உங்க அப்பத்தாவாச்சும் ஒரு மனோரமா தாண்டி, ஆனா அது பத்து மனோரமா மாதிரி இருக்குடி".
" அது யாருடி மனோரமா "
" அதாண்டி, 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்துல வருமே அந்த ஆச்சி மனோரமா மாதிரி தான் உங்க அப்பத்தா இருக்கு". (போனவாரம் டீவில பாத்தேன்...)
" ஏய் என் பேரு காந்திமதி, மனோரமா இல்லடி".
"அப்பா.., பாம்பு காதுடி உங்க அப்பத்தாவுக்கு எவ்வளவு மெதுவா பேசுறோம். இதுக்கு எப்படிடி கேட்டுச்சு"
....ஹிஹிஹி என அசடு வழிந்தபடி
" ஆமா அப்பத்தா கழுத்துல தான் ஒரு போன தொங்க விட்டுறிக்கியே அப்புறம் எதுக்கு கைல ஒரு போன் ".
" அதுவா இவளுகளுக்கு திருவிழாவுக்கு தலையில வைக்க பூ வாங்கலாமுன்னு வந்தேன் "
." நீந்தான் கடைக்கெல்லாம் வரமாட்டியே அப்பத்தா...? "
"சும்மா உட்காந்தே இருந்தா கை, காலெல்லாம் வலிக்குதடி. அதான் சும்மா அப்படியே நடந்து வந்தேன். அப்பத்தான் நீங்க வருவீங்கனு நினைப்பு வந்துச்சு. வர லேட்டான்னா போன்பண்ணி கேக்கலாம்ன்னு போன்ல சிக்னல் இல்லைன்னா என்ன பண்றது. அதான் பீரோவ திறந்து அந்த போனையும் எடுத்திட்டு வந்தேன்... "
" அது சரி நாங்கதான் காலேஜிக்கு போனே கொண்டு போகமாட்டோமே..? அப்புறம் எதுக்கு போன்.. "
" ஹிஹிஹி..... அதுடி.... "
" போதும் அப்பத்தா வழியுது......... சரி வா வீட்டுக்கு போய் கோவிலுக்கு கிளம்ப நேரமாச்சு ".
நீங்க முன்னாடி போங்கடி அந்த முனை வீட்டு பூவாத்த அவ மருமக கூட சண்டையாம். மருமக பேசுற அளவுக்கு அவளுக்கு பேச தெரியலையாம், அதான் அவளுக்கு சில பாய்ண்டை போன்ல சொல்லிட்டு வற்றேன்".
"அப்படிச் சொல்லு பின்ன என்னமோ என்னைய கூப்பிட்போக காத்துகிட்டு இருக்கிற மாதிரி என்ன பில்டப்".
" ஆத்தா கயலு ".
" என்னப்பத்தா"
" உன் அம்மாகிட்ட போய் அப்பத்தா போன்ல பேசுறத எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத. வீட்டுக்கு நிறைய விருந்தாளி திருவிழாவுக்கு வந்திருக்காக அவுக முன்னாடி என் பிரஸ்டீசு போயிரும்..."
"என்னது பிரஸ்டீசா.....?"
" ஆமாடி அதான் கௌரவம்...."
"சூப்பர் அப்பத்தா உன் பிரஸ்டீஜ்க்கு நாங்க கியாரண்டி. நீ இங்கிலீசு எல்லாம் சூப்பரா பேசுற அசத்து".
அப்பத்தாவின் போன் ரிங் அடித்தவுடன் காந்திமதி பேத்திகளை மறந்து சின்னக்கவுண்டர் மனோரமா மாதிரி பூவாத்தகிட்ட பாயிண்ட அள்ளி வீச ஆரம்பிக்க,
"சரி வாடி அப்பத்தா இப்போதைக்கு பேச்ச முடிக்காது.. ".
" கயலு உங்க அப்பத்தாவ பாத்தியா கோயிலுக்கு போக ரெடியாகி வந்துருச்சு 'அப்பொழுது தான் கயலு தன் அப்பத்தாவை திரும்பி நன்கு பார்த்தாள் மேட்சுக்கு மேட்சாக கண்டாங்கி சேலை கட்டி, தலையை அள்ளி முடிந்து (கிராமங்களில் கொண்டை போடாமல் மொத்தமாக சீவி அள்ளி முடிவார்கள்) திருநீறு பட்டை போட்டு, பெரிய வெள்ளைக் கல்லு தோடு போட்டு , 5வட கல்லு முகப்பு சங்கிலி போட்டு, அந்த மயில் கலர் சேலைக்கு பட்ரோஸ் கலர் பார்டர் எடுப்பாக இருந்தது. அதில் சிறிய தங்க கரையிட்ட மயில் புட்டா போட்டிருந்தது அந்த சேலைக்கு எடுப்பாக இருந்தது. அப்பத்தா போனில் புன்னகையுடன் பேசுவதை கண்ட கயலுக்கு அப்பத்தாவின் மேல் பாசம் பொங்கி வழிந்தது.
"என்னடி அப்பத்தாவ இப்படி பாக்குற....?"
"இல்லடி வீட்ல அப்பத்தா போன்ல பேசுனாலும் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு நல்லா தெரியும்.. பஸ் இன்னைக்கு தள்ளிநிக்கும்ன்னு அதான் இங்க வந்து நிக்குது. நம்மள பாத்தவுடன தான் அது போன் பேசவே ஆரம்பிக்குது. அதுக்கு முன்னாடி போன் வந்திருந்தாலும் அது போன எடுத்து பேச ஆரம்பக்காதுடி. அதுக்கு எங்க மேல எப்பவுமே தனி பிரியம்டி எங்க அத்த பிள்ளைகளை விட, எங்க மேல தான் தனிப் பாசம்டி. எனக்கும் அப்பத்தாவை ரொம்ப பிடிக்கும்.... சரி வர்றேன்டி".
அத்தியாயம் - 3(அ)
"ஏண்டி அமுதா, பரீட்சை ஈஸியா..? எப்படி எழுதியிருக்க..?"
"ஆமா, படிச்சாவுல ஈஸியா எழுதமுடியும் நைட்டு சாமிபாத்துட்டு நாட்டுப்புறப்பாட்டு பட்டி மன்றம் நடந்துச்சு அத பாத்துட்டு வந்து படுக்கவே மணி 12 ஆச்சு அப்புறம் எங்குட்டு படிக்க.... ஆமா நீ ஏண்டி சாமி கும்பிட்டுட்டு உடனே வந்துட்ட..? "
" இந்த இம்சை அப்பத்தாவ கூட்டிட்டு போனா எங்குட்டு பட்டி மன்றம் பாக்க...!. இருஅப்பத்தான்னு சொன்னா 'போங்கடி தூக்கம் வருது, கை வலிக்குது, கால் வலிக்குதுன்னு ஒரே புலம்பல்' , பத்தாததுக்கு இந்த 500ரூபாய் செல்போன கையில வச்சுக்கிட்டு அது படுத்துற பாடு தாங்க முடியல...!. நீ வீட்டுக்குப்போன்னு சொன்னா உடனே போன போட்டு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சொல்லி திட்டு வாங்கி குடுத்துகிட்டே இருக்குடி".
" ஆமாடி, நம்மள கூட காலேஜில செல்போன் யூஸ்பண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க. உங்க அப்பத்தா வயசு 75 ஆச்சு எதுக்குடி ரெண்டு போன் வச்சுக்கிட்டு ரொம்ப அலப்பர பன்னுது அதை எங்கிட்டாச்சும் தூக்கி எறிய வேண்டியது தானடி...?"
" போடி, நீ வேற அது என்னவோ பெரிய ID card மாதிரி சுருக்குபைக்குள்ள போனப்போட்டு கழுத்துல கட்டி தொங்க விட்டுட்டு திரியுது.... கேட்டா வயசான காலத்துல எங்கையாவது கை தவறி போட்றுவேன்னு சொல்லுது... ஒன்ன எடுத்து பீரோவுல வச்சு பூட்டி வச்சுருக்கு, கேட்டா ஜார்ஜ் போடும் போது போன் வந்தா அத எடுத்து பேச கூடாதுன்னு அந்த போன யூஸ் பண்றதா சொல்லுதடி ஈஸியா சிம்கிடைச்சதனால 2 போன யூஸ் பண்ணுது..... பால் கறக்கிற கந்தன் அண்ணன் லேட்டா வந்தாகூட கூட்பிட உடனே ஒரு போன், பாவம் அந்த அண்ணன் இந்த அப்பத்தாகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறார்டி"
" சரி வா பஸ் வந்துருச்சு. திருவிழா நடக்கிறதால பஸ்சை முன்னாடியே நிப்பாட்டி கீழே இறக்கி விட்டருவான். நாம நடந்து தான் வீட்டுக்கு போகனும்".
பஸ்சை விட்டு கீழே இறங்கியவர்கள் அங்கு நின்றிருந்த அப்பத்தாவை பார்த்தவுடன் கலகலவென சிரித்தார்கள்.
" ஏண்டி, என்ன என்னைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருது, ஏண்டி அமுதா என்ன நக்கலா, இரு உங்க வீட்டு கிழவிகிட்ட வந்து சொல்றேன்".
" ஆத்தி, கயலு உங்க அப்பத்தாவாச்சும் ஒரு மனோரமா தாண்டி, ஆனா அது பத்து மனோரமா மாதிரி இருக்குடி".
" அது யாருடி மனோரமா "
" அதாண்டி, 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்துல வருமே அந்த ஆச்சி மனோரமா மாதிரி தான் உங்க அப்பத்தா இருக்கு". (போனவாரம் டீவில பாத்தேன்...)
" ஏய் என் பேரு காந்திமதி, மனோரமா இல்லடி".
"அப்பா.., பாம்பு காதுடி உங்க அப்பத்தாவுக்கு எவ்வளவு மெதுவா பேசுறோம். இதுக்கு எப்படிடி கேட்டுச்சு"
....ஹிஹிஹி என அசடு வழிந்தபடி
" ஆமா அப்பத்தா கழுத்துல தான் ஒரு போன தொங்க விட்டுறிக்கியே அப்புறம் எதுக்கு கைல ஒரு போன் ".
" அதுவா இவளுகளுக்கு திருவிழாவுக்கு தலையில வைக்க பூ வாங்கலாமுன்னு வந்தேன் "
." நீந்தான் கடைக்கெல்லாம் வரமாட்டியே அப்பத்தா...? "
"சும்மா உட்காந்தே இருந்தா கை, காலெல்லாம் வலிக்குதடி. அதான் சும்மா அப்படியே நடந்து வந்தேன். அப்பத்தான் நீங்க வருவீங்கனு நினைப்பு வந்துச்சு. வர லேட்டான்னா போன்பண்ணி கேக்கலாம்ன்னு போன்ல சிக்னல் இல்லைன்னா என்ன பண்றது. அதான் பீரோவ திறந்து அந்த போனையும் எடுத்திட்டு வந்தேன்... "
" அது சரி நாங்கதான் காலேஜிக்கு போனே கொண்டு போகமாட்டோமே..? அப்புறம் எதுக்கு போன்.. "
" ஹிஹிஹி..... அதுடி.... "
" போதும் அப்பத்தா வழியுது......... சரி வா வீட்டுக்கு போய் கோவிலுக்கு கிளம்ப நேரமாச்சு ".
நீங்க முன்னாடி போங்கடி அந்த முனை வீட்டு பூவாத்த அவ மருமக கூட சண்டையாம். மருமக பேசுற அளவுக்கு அவளுக்கு பேச தெரியலையாம், அதான் அவளுக்கு சில பாய்ண்டை போன்ல சொல்லிட்டு வற்றேன்".
"அப்படிச் சொல்லு பின்ன என்னமோ என்னைய கூப்பிட்போக காத்துகிட்டு இருக்கிற மாதிரி என்ன பில்டப்".
" ஆத்தா கயலு ".
" என்னப்பத்தா"
" உன் அம்மாகிட்ட போய் அப்பத்தா போன்ல பேசுறத எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத. வீட்டுக்கு நிறைய விருந்தாளி திருவிழாவுக்கு வந்திருக்காக அவுக முன்னாடி என் பிரஸ்டீசு போயிரும்..."
"என்னது பிரஸ்டீசா.....?"
" ஆமாடி அதான் கௌரவம்...."
"சூப்பர் அப்பத்தா உன் பிரஸ்டீஜ்க்கு நாங்க கியாரண்டி. நீ இங்கிலீசு எல்லாம் சூப்பரா பேசுற அசத்து".
அப்பத்தாவின் போன் ரிங் அடித்தவுடன் காந்திமதி பேத்திகளை மறந்து சின்னக்கவுண்டர் மனோரமா மாதிரி பூவாத்தகிட்ட பாயிண்ட அள்ளி வீச ஆரம்பிக்க,
"சரி வாடி அப்பத்தா இப்போதைக்கு பேச்ச முடிக்காது.. ".
" கயலு உங்க அப்பத்தாவ பாத்தியா கோயிலுக்கு போக ரெடியாகி வந்துருச்சு 'அப்பொழுது தான் கயலு தன் அப்பத்தாவை திரும்பி நன்கு பார்த்தாள் மேட்சுக்கு மேட்சாக கண்டாங்கி சேலை கட்டி, தலையை அள்ளி முடிந்து (கிராமங்களில் கொண்டை போடாமல் மொத்தமாக சீவி அள்ளி முடிவார்கள்) திருநீறு பட்டை போட்டு, பெரிய வெள்ளைக் கல்லு தோடு போட்டு , 5வட கல்லு முகப்பு சங்கிலி போட்டு, அந்த மயில் கலர் சேலைக்கு பட்ரோஸ் கலர் பார்டர் எடுப்பாக இருந்தது. அதில் சிறிய தங்க கரையிட்ட மயில் புட்டா போட்டிருந்தது அந்த சேலைக்கு எடுப்பாக இருந்தது. அப்பத்தா போனில் புன்னகையுடன் பேசுவதை கண்ட கயலுக்கு அப்பத்தாவின் மேல் பாசம் பொங்கி வழிந்தது.
"என்னடி அப்பத்தாவ இப்படி பாக்குற....?"
"இல்லடி வீட்ல அப்பத்தா போன்ல பேசுனாலும் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு நல்லா தெரியும்.. பஸ் இன்னைக்கு தள்ளிநிக்கும்ன்னு அதான் இங்க வந்து நிக்குது. நம்மள பாத்தவுடன தான் அது போன் பேசவே ஆரம்பிக்குது. அதுக்கு முன்னாடி போன் வந்திருந்தாலும் அது போன எடுத்து பேச ஆரம்பக்காதுடி. அதுக்கு எங்க மேல எப்பவுமே தனி பிரியம்டி எங்க அத்த பிள்ளைகளை விட, எங்க மேல தான் தனிப் பாசம்டி. எனக்கும் அப்பத்தாவை ரொம்ப பிடிக்கும்.... சரி வர்றேன்டி".
Last edited: