வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. அதுபோல பாட்டிமார் அணியும் பாம்படம் என்ற சொல்லும் புழக்கத்தில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை.