சகோதரி சரயுவுக்கு,
தங்களின் மயக்கம் கொன்டேனடித் தோழி குறுநாவலை பற்றி சில வரிகள். ரொம்ப சந்தோஷம் சகோதரி உங்களின் புதிய முயற்சிக்கு. இப்போது இருக்கும் சில சகோதரிகளின் வித்தியாசமான முயற்சியை பார்க்கும் போது மனதுக்குள் சந்தோஷ மழை. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய புதிய தேடல் என வரும் போது அவர்களை வாழ்த்தி வரவேற்க தோன்றுகிறது. அவர்களில் நீங்களும் ஒருவர் சகோதரி.
பல வருடங்களுக்கு முன் திரு பாலச்சந்தர் அவர்கள் எடுத்த படம், ஒரு வீடு, இரு வாசல். அதில் இப்படி ஒரு முயற்சி எடுத்துயிருப்பார் இயக்குநர் சிகரம். அதுபோல் ஒரு காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதை. ஒரு நாவல் வாங்கிய விலையில் இரு நாவல் படித்த திருப்தி.
இரு நாயகன், நாயகிகள், ஒரு பெயரில் இரு சிறு வில்லிகள், குழப்பம் இல்லாமல் தெளிவான நடை. குறைந்த பாத்திரங்கள், சிறந்த உரையாடல்கள். அனைத்தும் அருமை.
உங்களுக்கு உரையாடல்தான் பலமே சகோதரி. ஒரு மெல்லிய நகைசுவையுடன் கூடிய உரையாடல் அருமை. உதாரணம்:- இரு பெண்களுக்கு பிடிப்பு ரவிக்கு பிழைப்பு, சோவும் இல்லை விசுவும் இல்லை, திவ்ஸ் என்பதும் மூன்றேழுத்து என பல பல இடங்கள் சகோதரி.
அதேபோல் சற்று வீரியமும் உரையாடலில் உள்ளது. உதாரணம்:- பெண்ணை முதலில் சக மனிஷியாக பாருங்கள், வாழ்வில் சில நேரம் உண்மை என்று நினைக்கும் விஷயம் உண்மையிருகாது. உண்மை காதல் தொடரும், பொய் காதல்{இனக்கவர்ச்சி} நிலைக்காது. பெரியவர்கள் கூறும் அறிவுரை அத்தனை ஏற்புடையதாக இருக்காது, ஆனால் வாழ்த்து பார்த்தால் அருமையாக அமையும். எதுவும் எளிதாக கிடைத்தால் அருமை தெரியாது என பல இடங்கள் அருமை சகோதரி. அதுவும் காதலை சொல்லிதான் புரியவேண்டும் என்பது இல்லை அது உணர்ந்து வரவேண்டும் என கூறியது அருமை.
திவ்யா, திவ்யாபாரதி – ரவி, ரவிபிரதாப் என இரு ஹீரோ ஹீரோயின். ஒரு பெயரில் இருசிறுவில்லி ப்ரியா, மற்றும் தர்மலிங்கம் – மகேஸ்வரி, தெய்வேந்திரன் – விசாலம், ராம்ப்ரதாப் – வசுந்ரா, என சொற்ப்பாத்திரங்கள் கொண்டு அருமை நாவல் படைப்பு.
காதல் என்பது சொல்லி வருவதில்லை. அது தானாக உணர்ந்து வரவேண்டும் என கூறியிருக்கிறீர்கள் சகோதரி.நன்றி அன்புடன் V.முருகேசன்