இப்படி கெமிக்கல் அது இதுனு இல்லாம ஒரு 200 -300 வருஷம் முன்னால இருந்த மாதிரி
நம்மால இப்போ இருக்க முடியுமா ..... கற்பனை பண்ணி பார்த்துட்டு இருக்கேன் ...ஜோ
பல் தேய்க்க, பாத்திரம் கழுவ........ உமி கரி........ (நெல்லின் உமி எரித்தது.....)
குளிக்க........ மஞ்சள் பயறு பொடி.......
ஷாம்பூவிற்கு பதில் சீயக்காய்........ சமையல் சோடா........ வாழை சாம்பல் (வாழை இலை அதன் தண்டோடு காய்ந்தது......... பின்னர் எரித்தது....)
காய்கறிகள் எல்லாம் ஊரில் விழைவது........... அரிசி தேங்காய் வீட்டில் பயிர் செய்வது.........
கிழங்கு....... பயறு வகைகள்........ நெல்லில் குத்தும் அவல்.........
எல்லாமே வேகவைத்த பொருட்கள் தான்......... நோ fried items........
கடையில் இருந்து நொறுக்கு தீனி மாதம் ஒரு முறை வாங்கினாலே அரிது.........
அப்போது கடையில் வாங்கி சாப்பிட்டால் status குறைச்சல்........... இப்போ?????? weekend-யே கடையில் தான்.........
அதிக பட்சமான வாகனம் சைக்கிள் & bullet bike............ இப்போதைய benz காருக்கு இணை........
கடைக்கு துணி பை.........
எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்..........
பொடிவைகள், அரிசி மாவு உரலில் இடித்தது..........
மசாலா அம்மியில் அரைத்தது..........
கருப்பட்டி காப்பி...........
வீட்டில் வளர்க்கும் மாட்டின் பால், கோழி முட்டை, இறைச்சி..........
வண்டி வண்டியாக வாழை பழம்...........
கிழங்கு கடலை உளுந்து எள்ளு உள்ளி நிலக்கடலை அவல் பக்கத்தில் இருக்கும் எல்லோர் வீட்டுக்கும் கொடுப்பார்கள்.........
ஒரு நாள் ஒரு வீட்டில் என்ன கிடைக்குமோ அது தான் எந்த வீட்டிற்கு போனாலும் கிடைக்கும்.........
மாலையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான்....... 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் பிடித்து தான் அடைக்க வேண்டும்......... ஏனென்றால் விளக்கு வைத்த பிறகு எல்லா வீட்டிலும் குழந்தைகள் முதல் கல்லூரி படிப்பவர்கள் வரை படிப்பார்கள்.........
டிவி என்கிற ஒன்று எப்போ வந்ததோ அப்போவே எல்லாமே நாசமா போச்சு.........
எல்லாமே டெக்னாலஜி என்கிற பேரில் விலை கொடுத்து சனியன்களை வீட்டுக்குள் வைத்திருக்கிறோம்.........
கொசுவுக்கு ஒரு வலை போட்டு படுத்தால் போதும்.......... அதற்க்கு எதனை வகையான repellents......... Wheezing-க்கு முதல் காரணமே இதுதான்..........
இன்று வரை இதில் ஒரு 50% follow பண்ணுகிறோம்.........
வீண் ஆடம்பரத்திற்கும் advertisement-க்கும் free-க்களுக்கும் மயங்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நம் கையில் தான்..........