வணக்கம் நண்பர்களே!
‘மெய் தீண்டாயோ மெய்க்காதலே!’ இணையத்தில் வெளிவராதா எனது புதியகதை அருண் பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. காத்திருப்பின் சுகம் கண்டதும், மகிழ்ச்சி கண்டதும் முதல் புத்தகம் வெளிவந்ததில் தான். கடவுள் தரும் அருளும், நின் வாழ்த்துக்கள் தரும் மகிழ்ச்சியும் கொண்டாட்டங்கள் தரும் உற்சாகத்தை போன்று என்னை உற்சாகத்தில் ஆழ்ந்தியுள்ளது! நெடுநாள் கனவை நினைவாக்கிய அருண் பதிப்பகம் திரு. அருண் சார் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த முதல் நன்றிகள். உதவிய தோழி ப்ரியா மோகனுக்கும் ஊக்கமளித்த வாசகர்களுக்கும் நன்றிகள் கோடி!
மெய் தீண்டாயோ மெய்க்காதலே! – உறவுகள் அற்ற உரிமையற்ற வீட்டில் வாழும் உத்ரகுமாரின் வாழ்வில் உறவுகளால் இணைப்படும் தேவதர்ஷினி, அவனுக்கு உறவாவாளா? இருவர் மட்டுமல்லாது இவர்களோடு பயணிக்கும் ரகு, வைஷூ மற்றும் இவர்கள் குடும்பமும் அன்பாலே தங்கள் மனதையும் தீண்டும்! இணையத்தில் வெளிவராத கதையாகையால் புத்தமாக பெற்று வாசித்துவிட்டு வாசகர்களே கருத்தினை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன், நன்றிகள்!
பேரன்புடன்,
மித்ரா
View attachment 4113
உங்களுடைய புதிய
"மெய் தீண்டாயோ
மெய்க்காதலே!"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா டியர்