அட போங்கப்பா
அன்னலட்சுமியையும் ஜெய் தேவ்வையும் பிரிச்சு வைச்சுக்கிட்டே இருக்கீங்க
ஒண்ணா சேரவே விட மாட்டீங்களா?
ஏழு வருஷமா இரண்டு பேரும் பிரிஞ்சு இருந்தது போதாதா?
கிழட்டு மூதேவி பாட்டி கேட்டால் பேத்தி ரம்யா மூதேவிக்கு அறிவு எங்கே போச்சு?
எதுக்கு கிழவியைக் கூட கூட்டிட்டு வந்தாள்?
பூந்தி கொள்ளி இரண்டு பேரையும் விட கிழவி வெரி டேஞ்சர் பார்ட்டியாச்சே
எல்லா வேலையையும் செஞ்சது அன்னம்
என்னமோ ரம்யா கிழிச்ச மாதிரி கிழவி பேசுறாளே
மீதி நேரம் ரம்யாவை அடக்கின மங்களம் இப்போ அன்னத்தை கிழவி பேசும் பொழுது எங்கே போனாள்?
ரம்யா வீட்டு ஆளுங்க இனி அன்னத்தைப் பேசினால் அப்புறம் பாருன்னு ரம்யாவிடம் சொன்ன மங்களம் கிழவி இத்தனை பேசும் பொழுது தூங்கி விட்டாளா?
ஜெய்யுக்கு நோட்டீஸ் அனுப்பின விஷயத்தை எதுக்கு அவள் அம்மாவிடம் ரம்யா சொல்லணும்?
என்ன அவசியம்?
இதுக்கு சத்தியன் என்ன பண்ணப் போறான்?
வந்தவங்களோட ரம்யாவைத் துரத்தி விட்டுடுவானா?
இல்லை பொண்டாட்டிக்கு ஸலாம் போடுவானா?
என்னது...ரம்யா வீட்டு வேலை எல்லாம் செஞ்சு இத்துபோன பித்தளை பாத்திரம் மாதிரி இருக்காளா
.அவ அம்மாவே சமையகட்டை ரம்யாவுக்கு பழக்கி விடுங்கன்னு சொல்றதை போல நடந்துக்கறா இதுல பேத்தி வேலை செஞ்சது போல என்னமா சீன் போடுது கிழவி.
அன்னம்,ஜெய் வாங்கி கொடுத்த புடவையில பளிச்சுன்னு இருக்கறது கிழவி கண்ணை உறுத்துது.வந்த நாலு நாள்ல புருசனை மயக்கி சொத்தை எழுதி வாங்கிட்டான்னு கிழவி நா கூசாம பேசுது.சாந்தி,வள்ளி பேசறது நின்னுச்சு,இப்ப கிழவிய பேசவிட்டு வேடிக்கை பார்க்கறாங்க.
தனக்காக ஜெய் வர வேண்டும் என இருந்தவளுக்கு அவன் நோட்டீஸை பார்த்து வந்திருக்கான் என தெரிந்து அன்னத்தின் நிலை.ஜெய் செய்த வேலையால் என்னென்ன பேச்செல்லாம் கண்டவர்களிடம் கேட்க வேண்டியிருக்கு பாவம் அன்னம்.
வீராசாமிக்கு இப்போதாவது வீரம் வந்து ரம்யா வீட்டாளுங்களை வெளியே போக சொன்னாரே.வீட்டு மாப்பிள்ளைங்கனு இவனுங்க ஏகப்பட்ட பணத்தை கடனா வாங்கி இருக்காங்க, அன்னத்தை குறை சொல்லுதே கிழவி.என்ன ஜென்மங்களோ.
அனு வீட்டை விட்டு போனது தெரிஞ்ச ஜெய் என்ன செய்ய போறான். நோட்டீஸ் அனுப்பியத சொன்னவ ஸ்பின்னிங் மில் அவ பேர்ல வாங்குனதை சொல்லலையா சத்தியன் , ரம்யா குடும்பத்தை மட்டும் அனுப்பாம ரம்யாவையும்அனுப்பனும்,அப்பதான் திருந்துவாங்க