அருமையான பதிவு சவீதா
.எங்கம்மா இப்படி தான் இருந்திருப்பாங்களா என அன்னபூரணி யோசிக்க வைப்பதாக சொல்வது,அவர் நல்ல மாமியாராக மட்டும் இல்லாமல் அருளுக்கு தாயாகவே மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியுது
.
அர்ஜூன் தன் தவறை உணர்ந்து திருந்தியிருந்தா அவன் அம்மாவோடு வருவான் என ருத்ரன் நினைக்க,அதைப் போலவே அம்மாவுடன் வந்துட்டான்
.ப்ரீசர் பாக்ஸ் வேலை ஆருத்ரன் மனதிருப்திக்காக செய்வது,இல்லாதவர்களுக்கு பணம் வாங்காமல் அவனே எல்லாம் செய்து கொடுக்கும் போது அதில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது...
ஜாவிதுடன் சேர்ந்து வேலை செய்வது அர்ஜூனுக்கு தெரியாமல்,மறுபடியும் ப்ராஜெக்ட் செய்றதா நெனச்சு அருளை கடத்தியிருக்க,ஏற்கனவே அவன் கை விட்டு போன சில ப்ராஜெக்ட்களை ருத்ரன், ஜாவித் தான் செய்தது என தெரிஞ்சிருந்தா அர்ஜூன் லூசுதனமா என்ன செஞ்சிருப்பானோ
.
படிச்சதுக்கான வேலை பார்க்கலையான்னு அருள் கேட்டதுக்காகவே இங்கே பிரான்ச் ஓப்பன் செய்ய ருத்ரன் நினைத்தது அருமை
.அருளுக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்ய,இந்த நேரத்துல விளையாட்டுக்காக என்றாலும் இப்படி பேசியிருக்க வேண்டாம்
.