ரேஸ்மாவை பார்த்ததும் ஜோதியே நேரில் நிற்பது போல தெரிவதும்,தான் பார்ப்பது நிஜமா,கனவா என புரியாமல் சண்முகம் தவிப்பது,ஜோதியை தேடி ஓடுவது மனதை கனக்க வைக்கிறது
.
நாளை உன் திருமணம் பற்றி தெரிய வரும் போது ராகுல் கேள்வி எழுப்ப கூடாது என அருள்,ஜோதி
அனுப்புவதை போல ராகுலுக்கு கிப்ட் அனுப்புவது,வசு,ரேஸ்மாவை ராகுலிடம் அறிமுகப்படுத்தும் விதம் அருமை
.
பேச்சி,அய்யாவு பற்றிய உண்மைகளை சண்முகத்திடம் மறைத்ததை பற்றி கேட்பதற்க்கு,உண்மை தெரிவதால் ஏற்பட போகும் விபரீதங்களை சொல்பவர்,ஜாதி,பணத்துக்காக ஜோதியை வாழவிடாமல்
கொன்றவன் முன்னால் அவள் மகள் வாழ்ந்து காட்டுவதே அவனுக்கு தரும் தண்டனை,அது தான் கணவரின் விருப்பம் என கூறிவிட்டார்.
அய்யாவு பேசுவதை கேட்டு அதிர்ச்சியடையும் காயத்ரி
,அவனை கன்னத்தில் அறைவதும் மரியாதை தராமல் பேசுவதும்,அவன் கொலை செய்ததாக கூறியதை கேமராவில் பதிவு செய்து விட்டதாக கூறி,ரேஸ்மா விளையாடும் போது அடிபட்டாலும் நீ தான் அதற்க்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என மிரட்டி கலக்கிட்டா
.
இத்தனை நாட்கள் பெண்ணுக்கு செய்யாததை ஒரே நாளில் செய்ய நினைக்கும் சண்முகம்,கணவன் மனதை புரிந்து கொண்டு ரேஸ்மாவுடன் இங்கேயே இருந்து விடலாம் என சொல்லும் வசு அருமை.
அருள் சொன்ன வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு பிரிந்திருந்ததே போதும் என கூறும் காயத்ரி,ரேஸ்மாவை பற்றி கூறாததுக்கு அவள் பாதுகாப்போ,வேறு காரணமோ இருக்கும் என புரிந்து கொண்டதாக காயத்ரி சொல்வது அருமை.இறுதி பதிவு அருமை
.
கதை விரைவாக முடித்தது போல தெரிகிறது.எபிலாக் உண்டா மகேஷ்
.