மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
வைதேகியின் வஞ்சகம் ஆரம்பமாகி விட்டது
சமையல்காரி சரசுவை நிறுத்தியாச்சு
இனி சரண்யாதான் சம்பளமில்லாத வேலைக்காரி
அத்தை பொண்ணுன்னு கொஞ்சம் கூட பாசமில்லாமல் சரண்யாவை பேசுற வந்தனாவின் நாக்கு என்ன தேள் கொடுக்கா?
அதுசரி
வைதேகியின் பெண் வேறு எப்படி பேசுவாள்?
கல்யாணம்ன்னு ஒரு விலங்கு போட்டுட்டு வாசு பாட்டுக்கு ஊருக்கு போயிட்டான்
காலம்கடந்து அப்பா சீனிவாசன் சொன்ன புத்திமதி வாசுவின் மூளையில்லாத மண்டையில் ஏறவில்லை
அவனை சொல்லி என்ன பிரயோஜனம்?
புத்தியில்லாமல் நம்ம பொண்ணு தெரிந்தே பாழுங்கிணற்றில் விழுந்து விட்டாள்
பூங்கோதைதான் பாவம்
பெற்ற ஒரே பெண் சொல் பேச்சு கேட்காமல் நல்லதொரு வாழ்க்கையை வாழாமல் இருப்பதைப் பார்த்து நொந்தே போகப் போகிறாள்