ஹாய் பிரண்ட்ஸ்.ud போட லேட்டாகிடுச்சு.கொஞ்சமென்ன,நிறையவே வேலை.யாருக்கும் ரிப்ளை போட முடியலை.வெரி சாரி.கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்குமே ஸ்பெஷல் தேங்க்ஸ்.
அரவிந்தின் கை தன் கை மேல் இருப்பது,மயூவிற்கு பெரும் சௌகரியத்தை கொடுக்க,முடிந்த மட்டும் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தாள்.ஒருகட்டத்தில் அவளால்,அவனின் தொடுகையை தாங்கவே முடியவில்லை.
“கைய விடுங்க ப்ளீஸ்.உங்கள எனக்கு மூணு நாளா தான் தெரியும்..அதுக்குள்ள..அதுக்குள்ள.......எப்படி இப்படியெல்லாம்...”சொல்லி முடிக்காமல் அவள் தடுமாறி நிறுத்தவும்,உணர்ச்சிப் போராட்டத்தில்,அவளின் வலது கண்ணின் ஓரம் வழிந்த நீர் அவனை என்னவோ செய்ய,கையை எடுத்துக்கொண்டான்.
கண்ணீரை அவள் துடைப்பது தெரிந்தும்,ஏனோ கோபப்பட்டு பேச முடியவில்லை.அனுசரணையாகவும் பேச தெரியவில்லை.
அந்த கண்ணீர் திடீரென்று அவன் மனதில் பெரும் மாயம் செய்திருக்க,தெளிவில்லாத மனதுடன் அலுவலகத்திற்குள் காரை நிறுத்தியவன்,அங்கு நின்றிருந்த தன் ஊழியர்களை பார்த்ததும் முகத்தை சரிப்படுத்திக் கொண்டான்.
காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு,மனைவியுடன் இறங்க,மலர்செண்டுகள் கொடுத்து வரவேற்றவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.
இது அவனின் மெயின் பிரான்ச் என்றும் சொல்லலாம்.
அரவிந்தின் தொழிலே கட்டிடக்கலை தான்.ஆரம்பத்தில் கட்டிடங்கள் கட்டுவது மட்டுமே வேலையாக வைத்திருந்தவன்,சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு பின் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தன்னிடமிருந்தே கிடைக்கும்படியாக தன் தொழிலை பெருக்கினான்.
ஏவி க்ரூப் ஆப் கம்பெனிஸ் கடந்த எட்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது.அதில் உழைப்பு அரவிந்தினுடையது என்றாலும்,எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அடித்தளமாக இருந்தது அவனுடைய அப்பா வேங்கட பெருமாளின் செல்வாக்கு தான்.அவரின் மகன் என்பதற்காகவே அவனுக்கு உதவி செய்ய பலரும் முன்வந்திருந்தனர்.
வேதாவும் அவரால் ஆன உதவியை அவ்வப்போது செய்துகொண்டேயிருந்தார்.
அரவிந்தின் தொழிலுக்கு முட்டுக்கட்டையாகவும் பலர் இருந்தனர்.அதில் முதலில் இருப்பவர் எம்பி சங்கரலிங்கம் தான்.சமீபத்தில் தாம் எம்பி ஆகியிருந்தவரின் அட்டகாசம் இப்போது கொஞ்சம் அதிகம் தான் என்றாலும்,தன்னுடைய நேர்மையான தொழில்முறையாலும்,அதர்மமான சில செயல்களாலும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தான்..
அவரை மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது..அவர் அவனின் மாமாவாக போய்விட்டார்.அத்தையின் கணவர் என்பதால் பொறுத்துப் போகிறான்.இன்னொரு காரணமும் உண்டு.அது அவருடைய மருமகன் மதன்.
இங்கு தான் வேலைபார்க்கிறான்.அதுவும் அரவிந்தின் பிஏவாக!!
பளபளக்கும் அந்த கிரனைட் தரையில் வேகவேகமாக வந்து கொண்டிருந்தான் மதன்.அவன் வெளியே வருவதற்கு முன்னவே அரவிந்த் மனைவியுடன் வந்திருக்க,எதிர்ப்பட்டவனை பார்த்தும்,பார்க்காதது போல் முன்னே செல்ல,மயூவும் அவன் காலடியை பின் தொடர்ந்தாள்.
மதன் சிரித்துக்கொண்டே அவர்களிருவரின் பின் வந்தவன்,அரவிந்த் அறைக்குள் நுழைந்ததும்,
“வாழ்த்துக்கள் மச்சான்”என்றான்.
அரவிந்தின் முறைப்பில் நாக்கை கடித்துக்கொண்டவன்,”வாழ்த்துக்கள் சகல”எனவும் இன்னும் அதிகமாய் முறைத்தவன்,மயூவை ஒரு சேரில் அமர் வைத்துவிட்டு,தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்தவனை பார்த்தவன்,அதே புன்முறுவலுடன் மயூவின் அருகிலிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.
மயூ தான் மௌனமாய்,எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருப்பாளே!!
“சாரி மாப்ள.கல்யாணத்துக்கு வர முடியலை.என் வைப்க்கு உடம்பு முடியாம போச்சு”எனவும்,அரவிந்த் தன் பார்வையை விலக்கிக்கொள்ளாமல் இன்னும் கூர்மையாக பார்க்க,மதன் உண்மையை சொல்லி விட்டான்.
“உன்னால தான்டா நான் கல்யாணத்துக்கு வர முடியாம போச்சு.நீ எனக்கு முறையா வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கலையாம்.ரேஷ்மிக்கு ஒரு போன் பண்ணி கூட மேரேஜ்னு சொல்லலையாம்.அவ அப்பன மதிக்கலையாம்.அவ அக்காளை மதிக்கலையாம்.அத்தானை மதிக்கலையாம்..அதனால என்னையும் போகக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா.மனைவி சொல்லே மந்திரம் இல்லையா..அதான் நானும் வரலை”விளையாட்டாக சொல்லிக்கொண்டே வந்தவன்,
“ரேஷ்மியோட பிடிவாதம் உனக்கு தெரியுமில்லையா!! ஒருக்கட்டத்துக்கு மேல சமாளிக்கவே முடியாது.அதான் வீட்டுலையே இருந்துட்டேன்.சாரிடா”என்றதும்,அரவிந்தும் பிடிவாதத்தை கைவிட்டு,மனைவியிடம் நண்பனை அறிமுகப்படுத்தி வைக்க அவளை பார்த்தவன்,அவள் பார்வை தனக்கு மேலே இருப்பதைப் பார்த்து தானும் திரும்பி பார்த்தான்.
அங்கு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருப்பது போல போட்டோ பெரிதாக,ஆனால் பார்க்க அழகாய் இருக்க,
“இது தான் உன் சர்ப்ரைஸா”சிரிப்புடன் கேட்க,
“எஸ்”என்றான்.
“ரேஷ்மியோட பழக்கம் உனக்கும் வந்துடுச்சுன்னு,தெரிஞ்சுக்க இதைவிட பெரிய ப்ரூப் எதுவும் தேவையில்ல”எனவும்,மதனும் சிரித்துக்கொண்டான்.
இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களில், ரேஷ்மி சர்ப்ரைஸ் கொடுத்தால் மிகவும் மகிழ்ந்து போவாள்.
இன்னும் அந்த போட்டோவிலிருந்து மயூ பார்வையை அகற்றாமல் இருந்தாள்.
மாமி வீட்டுக்கல்யாணத்தில் எடுத்திருக்கக் கூடும் என்று புரிந்தாலும்,போட்டோ எடுத்தது கூட தெரியாமல் இருந்தோமா என்று யோசித்துக்கொண்டேயிருக்க,மதனும் பார்த்தவன்,
“நான் மதன்.அர்வியோட பிரண்ட்.இந்த கம்பெனியோட பிஏ.ஆல்இன்ஆல்
னும் சொல்லலாம்”என்றதும் உதடுகளை லேசாக விரித்து அழகாய்,மென்னகை புரிந்தாள்.
“ப்ரேக்பாஸ்ட் எங்களோட ஜாயின் பண்ணிக்கறிங்களா? இல்ல இங்கேயே கொண்டு வர சொல்லட்டுமா?”
“இங்க ரூம்ல வைச்சிட்டு போகட்டும்.நான் அங்க இருந்தா,ஸ்டாப் ப்ரீயா இருக்க மாட்டாங்க”
“சரிதான்.நீ அங்கேயும் வந்து பிசினெஸ் பேச ஆரம்பிச்சிடுவேன்னு அவங்களுக்கு பயம் இருக்கும்ல?”சொல்லிவிட்டு,உணவு எடுத்து வர தானே சென்றான்.
அரவிந்திற்கு பிடித்த பதார்த்தங்களோடு எல்லா உணவு வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் என்று எடுத்து,உணவு பரிமாறுபவனிடம் கொடுத்து,உள்ளே வைத்துவிடுமாறு பணித்தவன்,தன் சகபணியாளர்களுடன் இணைந்துகொண்டான்.
டைனிங் ஹாலுக்கு அரவிந்த்,மனைவியையும் கூட்டி சென்றவன்,”உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ”என்றவன்,தானே பரிமாறி உண்ணவும் ஆரம்பித்துவிட்டான்.
அது அவளுக்கு ஆச்சர்யமே!! அவளது வீட்டில் ஆண்களுக்கு எல்லாமே வீட்டுப்பெண்கள் தான் பரிமாறுவார்கள்.
அவன் இயல்பாய் உண்ண ஆரம்பிக்கவும்,தனக்கு முன்னிருந்த உணவுப் பாத்திரத்தில்,தயிர் சாதமிருக்க,வேறு எதையும் திறந்து பார்த்து,தன் தட்டில் வைக்கவே அவளுக்கு சங்கடமாயிருக்கவே,தயிர் சாதத்தை கொஞ்சமாக வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
அந்த கொஞ்சமும் உண்ண முடியவில்லை.வீட்டினரின் ஞாபகம் வந்துவிட்டது.
‘இன்னும் ஒரு போன் கூட பண்ணலை.தொல்லை ஒழிஞ்சுதுன்னு விட்டுட்டாங்களா’கண்ணை கரித்துக்கொண்டு வர,அரவிந்த் கருத்தைக் கவரா வண்ணம்,கண்ணை துடைத்துக் கொண்டவள்,எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வந்தாள்.
அரவிந்தின் கை தன் கை மேல் இருப்பது,மயூவிற்கு பெரும் சௌகரியத்தை கொடுக்க,முடிந்த மட்டும் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தாள்.ஒருகட்டத்தில் அவளால்,அவனின் தொடுகையை தாங்கவே முடியவில்லை.
“கைய விடுங்க ப்ளீஸ்.உங்கள எனக்கு மூணு நாளா தான் தெரியும்..அதுக்குள்ள..அதுக்குள்ள.......எப்படி இப்படியெல்லாம்...”சொல்லி முடிக்காமல் அவள் தடுமாறி நிறுத்தவும்,உணர்ச்சிப் போராட்டத்தில்,அவளின் வலது கண்ணின் ஓரம் வழிந்த நீர் அவனை என்னவோ செய்ய,கையை எடுத்துக்கொண்டான்.
கண்ணீரை அவள் துடைப்பது தெரிந்தும்,ஏனோ கோபப்பட்டு பேச முடியவில்லை.அனுசரணையாகவும் பேச தெரியவில்லை.
அந்த கண்ணீர் திடீரென்று அவன் மனதில் பெரும் மாயம் செய்திருக்க,தெளிவில்லாத மனதுடன் அலுவலகத்திற்குள் காரை நிறுத்தியவன்,அங்கு நின்றிருந்த தன் ஊழியர்களை பார்த்ததும் முகத்தை சரிப்படுத்திக் கொண்டான்.
காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு,மனைவியுடன் இறங்க,மலர்செண்டுகள் கொடுத்து வரவேற்றவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.
இது அவனின் மெயின் பிரான்ச் என்றும் சொல்லலாம்.
அரவிந்தின் தொழிலே கட்டிடக்கலை தான்.ஆரம்பத்தில் கட்டிடங்கள் கட்டுவது மட்டுமே வேலையாக வைத்திருந்தவன்,சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு பின் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தன்னிடமிருந்தே கிடைக்கும்படியாக தன் தொழிலை பெருக்கினான்.
ஏவி க்ரூப் ஆப் கம்பெனிஸ் கடந்த எட்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது.அதில் உழைப்பு அரவிந்தினுடையது என்றாலும்,எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அடித்தளமாக இருந்தது அவனுடைய அப்பா வேங்கட பெருமாளின் செல்வாக்கு தான்.அவரின் மகன் என்பதற்காகவே அவனுக்கு உதவி செய்ய பலரும் முன்வந்திருந்தனர்.
வேதாவும் அவரால் ஆன உதவியை அவ்வப்போது செய்துகொண்டேயிருந்தார்.
அரவிந்தின் தொழிலுக்கு முட்டுக்கட்டையாகவும் பலர் இருந்தனர்.அதில் முதலில் இருப்பவர் எம்பி சங்கரலிங்கம் தான்.சமீபத்தில் தாம் எம்பி ஆகியிருந்தவரின் அட்டகாசம் இப்போது கொஞ்சம் அதிகம் தான் என்றாலும்,தன்னுடைய நேர்மையான தொழில்முறையாலும்,அதர்மமான சில செயல்களாலும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தான்..
அவரை மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது..அவர் அவனின் மாமாவாக போய்விட்டார்.அத்தையின் கணவர் என்பதால் பொறுத்துப் போகிறான்.இன்னொரு காரணமும் உண்டு.அது அவருடைய மருமகன் மதன்.
இங்கு தான் வேலைபார்க்கிறான்.அதுவும் அரவிந்தின் பிஏவாக!!
பளபளக்கும் அந்த கிரனைட் தரையில் வேகவேகமாக வந்து கொண்டிருந்தான் மதன்.அவன் வெளியே வருவதற்கு முன்னவே அரவிந்த் மனைவியுடன் வந்திருக்க,எதிர்ப்பட்டவனை பார்த்தும்,பார்க்காதது போல் முன்னே செல்ல,மயூவும் அவன் காலடியை பின் தொடர்ந்தாள்.
மதன் சிரித்துக்கொண்டே அவர்களிருவரின் பின் வந்தவன்,அரவிந்த் அறைக்குள் நுழைந்ததும்,
“வாழ்த்துக்கள் மச்சான்”என்றான்.
அரவிந்தின் முறைப்பில் நாக்கை கடித்துக்கொண்டவன்,”வாழ்த்துக்கள் சகல”எனவும் இன்னும் அதிகமாய் முறைத்தவன்,மயூவை ஒரு சேரில் அமர் வைத்துவிட்டு,தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்தவனை பார்த்தவன்,அதே புன்முறுவலுடன் மயூவின் அருகிலிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.
மயூ தான் மௌனமாய்,எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருப்பாளே!!
“சாரி மாப்ள.கல்யாணத்துக்கு வர முடியலை.என் வைப்க்கு உடம்பு முடியாம போச்சு”எனவும்,அரவிந்த் தன் பார்வையை விலக்கிக்கொள்ளாமல் இன்னும் கூர்மையாக பார்க்க,மதன் உண்மையை சொல்லி விட்டான்.
“உன்னால தான்டா நான் கல்யாணத்துக்கு வர முடியாம போச்சு.நீ எனக்கு முறையா வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கலையாம்.ரேஷ்மிக்கு ஒரு போன் பண்ணி கூட மேரேஜ்னு சொல்லலையாம்.அவ அப்பன மதிக்கலையாம்.அவ அக்காளை மதிக்கலையாம்.அத்தானை மதிக்கலையாம்..அதனால என்னையும் போகக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா.மனைவி சொல்லே மந்திரம் இல்லையா..அதான் நானும் வரலை”விளையாட்டாக சொல்லிக்கொண்டே வந்தவன்,
“ரேஷ்மியோட பிடிவாதம் உனக்கு தெரியுமில்லையா!! ஒருக்கட்டத்துக்கு மேல சமாளிக்கவே முடியாது.அதான் வீட்டுலையே இருந்துட்டேன்.சாரிடா”என்றதும்,அரவிந்தும் பிடிவாதத்தை கைவிட்டு,மனைவியிடம் நண்பனை அறிமுகப்படுத்தி வைக்க அவளை பார்த்தவன்,அவள் பார்வை தனக்கு மேலே இருப்பதைப் பார்த்து தானும் திரும்பி பார்த்தான்.
அங்கு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருப்பது போல போட்டோ பெரிதாக,ஆனால் பார்க்க அழகாய் இருக்க,
“இது தான் உன் சர்ப்ரைஸா”சிரிப்புடன் கேட்க,
“எஸ்”என்றான்.
“ரேஷ்மியோட பழக்கம் உனக்கும் வந்துடுச்சுன்னு,தெரிஞ்சுக்க இதைவிட பெரிய ப்ரூப் எதுவும் தேவையில்ல”எனவும்,மதனும் சிரித்துக்கொண்டான்.
இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களில், ரேஷ்மி சர்ப்ரைஸ் கொடுத்தால் மிகவும் மகிழ்ந்து போவாள்.
இன்னும் அந்த போட்டோவிலிருந்து மயூ பார்வையை அகற்றாமல் இருந்தாள்.
மாமி வீட்டுக்கல்யாணத்தில் எடுத்திருக்கக் கூடும் என்று புரிந்தாலும்,போட்டோ எடுத்தது கூட தெரியாமல் இருந்தோமா என்று யோசித்துக்கொண்டேயிருக்க,மதனும் பார்த்தவன்,
“நான் மதன்.அர்வியோட பிரண்ட்.இந்த கம்பெனியோட பிஏ.ஆல்இன்ஆல்
னும் சொல்லலாம்”என்றதும் உதடுகளை லேசாக விரித்து அழகாய்,மென்னகை புரிந்தாள்.
“ப்ரேக்பாஸ்ட் எங்களோட ஜாயின் பண்ணிக்கறிங்களா? இல்ல இங்கேயே கொண்டு வர சொல்லட்டுமா?”
“இங்க ரூம்ல வைச்சிட்டு போகட்டும்.நான் அங்க இருந்தா,ஸ்டாப் ப்ரீயா இருக்க மாட்டாங்க”
“சரிதான்.நீ அங்கேயும் வந்து பிசினெஸ் பேச ஆரம்பிச்சிடுவேன்னு அவங்களுக்கு பயம் இருக்கும்ல?”சொல்லிவிட்டு,உணவு எடுத்து வர தானே சென்றான்.
அரவிந்திற்கு பிடித்த பதார்த்தங்களோடு எல்லா உணவு வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் என்று எடுத்து,உணவு பரிமாறுபவனிடம் கொடுத்து,உள்ளே வைத்துவிடுமாறு பணித்தவன்,தன் சகபணியாளர்களுடன் இணைந்துகொண்டான்.
டைனிங் ஹாலுக்கு அரவிந்த்,மனைவியையும் கூட்டி சென்றவன்,”உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ”என்றவன்,தானே பரிமாறி உண்ணவும் ஆரம்பித்துவிட்டான்.
அது அவளுக்கு ஆச்சர்யமே!! அவளது வீட்டில் ஆண்களுக்கு எல்லாமே வீட்டுப்பெண்கள் தான் பரிமாறுவார்கள்.
அவன் இயல்பாய் உண்ண ஆரம்பிக்கவும்,தனக்கு முன்னிருந்த உணவுப் பாத்திரத்தில்,தயிர் சாதமிருக்க,வேறு எதையும் திறந்து பார்த்து,தன் தட்டில் வைக்கவே அவளுக்கு சங்கடமாயிருக்கவே,தயிர் சாதத்தை கொஞ்சமாக வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
அந்த கொஞ்சமும் உண்ண முடியவில்லை.வீட்டினரின் ஞாபகம் வந்துவிட்டது.
‘இன்னும் ஒரு போன் கூட பண்ணலை.தொல்லை ஒழிஞ்சுதுன்னு விட்டுட்டாங்களா’கண்ணை கரித்துக்கொண்டு வர,அரவிந்த் கருத்தைக் கவரா வண்ணம்,கண்ணை துடைத்துக் கொண்டவள்,எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வந்தாள்.