அந்த வாரம் வந்த தீனாவோ “கிளம்பு கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்..” என,
“நைட்டுக்கு டிபன் செய்யணுமே...” என்றாள்.
“இட்லி சட்னிதானே அக்கா செய்ய மாட்டாளா??!!! இல்லன்னா கடைல வாங்கிட்டு வரலாம்..” என்று சொல்ல,
“ம்ம் கடைல வாங்கிக்கலாம்..” என்றவள், “எங்க போலாம்..” என்று கேட்கும் போதே அவளுக்கு முகம் மலர்ந்தது..
அவளின் முகத்தினைப் பார்த்தவனோ “முதல்ல உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு அப்படியே சும்மா பைக்ல ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்..” என,
“சூப்பர்ங்க..” என்று கிளம்பிவிட்டாள்.
----------------------------------------------
“தங்கம்மைக்கு தான் ரொம்ப கஷ்டம்..” என்று அம்மாவும் சொல்ல,
ரோஜாவோ “ஏன் ம்மா.. இப்படி சொல்ற.. எல்லாருக்கும் ஒவ்வொரு கஷ்டம் தான்..” என,
தீனா பட்டென்று கேட்டுவிட்டான் “இப்போ நீ இங்க என்ன கஷ்டப்படுற..” என்று..
தங்கம்மை திக்கென்று பார்க்க, செவ்வந்தியும் அப்படிதான் பார்த்தார். ரோஜாவும் கூட. தீனா முகம் கடுகடுவென,
“என்னடா இப்படி சொல்ற.. அம்மாவும் படுத்துட்டாங்க.. இவனை வச்சிட்டு நாள் பூரா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா??!!!” என,
“ஏன் தனியா பிள்ளை வளக்குறவங்க எல்லாம் எப்படி வளக்குறாங்க...” என்றவன்
“நானும் பார்த்துட்டு தானே இருக்கேன் நீ நீயே ஒன்னும் இவனை வைக்கலை..” என்றும் சொல்ல, தங்கம்மைக்கு ‘ஐயோ..’ என்று இருந்தது.
சிறிது நேரத்திற்கு முன் தான் அவனிடம் கெஞ்சாத குறையாய் சொன்னாள் “இதைப் பத்தி எதுவும் பேசாதீங்க..” என்று ..
----------------------------------------------------------
“நான் அவ்வளோ சொல்லியும் நீங்க ஏங்க இப்படி பட்டுன்னு பேசிட்டீங்க..” என்று தங்கம்மை கேட்க,
“நான் தப்பா எதுவும் கேட்கலை.. சிரமம் கஷ்டம்னு சொல்றா ??!! அப்படி எதுவும் இல்லைதானே.. எல்லாத்தையும் நீதான் செய்ற.. பின்ன எதுக்கு இந்த பேச்சு..” என ,
“இப்போ என்ன சொன்னா சொல்லிட்டு போகட்டுமே..” என்று தங்கம்மையும் சொல்ல,
தீனாவோ அவளை முறைத்தவன் “நீ புரிஞ்சு தான் பேசுறியா இல்லையா தங்கம்மை..” என்று அதட்ட,
“எனக்கு எதுவும் புரியவேணாம்.. என்னால உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வேணாம் அவ்வளோதான்..” என்று தங்கம்மை சொல்ல,
“உன்னாலன்னு யார் சொன்னா..??!!” என்று தீனா முறுக்கிக்கொண்டு நிற்கவும் இப்படி பேசி பேசி இவர்கள் இருவருக்கும் தான் சண்டையானது.
“நைட்டுக்கு டிபன் செய்யணுமே...” என்றாள்.
“இட்லி சட்னிதானே அக்கா செய்ய மாட்டாளா??!!! இல்லன்னா கடைல வாங்கிட்டு வரலாம்..” என்று சொல்ல,
“ம்ம் கடைல வாங்கிக்கலாம்..” என்றவள், “எங்க போலாம்..” என்று கேட்கும் போதே அவளுக்கு முகம் மலர்ந்தது..
அவளின் முகத்தினைப் பார்த்தவனோ “முதல்ல உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு அப்படியே சும்மா பைக்ல ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்..” என,
“சூப்பர்ங்க..” என்று கிளம்பிவிட்டாள்.
----------------------------------------------
“தங்கம்மைக்கு தான் ரொம்ப கஷ்டம்..” என்று அம்மாவும் சொல்ல,
ரோஜாவோ “ஏன் ம்மா.. இப்படி சொல்ற.. எல்லாருக்கும் ஒவ்வொரு கஷ்டம் தான்..” என,
தீனா பட்டென்று கேட்டுவிட்டான் “இப்போ நீ இங்க என்ன கஷ்டப்படுற..” என்று..
தங்கம்மை திக்கென்று பார்க்க, செவ்வந்தியும் அப்படிதான் பார்த்தார். ரோஜாவும் கூட. தீனா முகம் கடுகடுவென,
“என்னடா இப்படி சொல்ற.. அம்மாவும் படுத்துட்டாங்க.. இவனை வச்சிட்டு நாள் பூரா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா??!!!” என,
“ஏன் தனியா பிள்ளை வளக்குறவங்க எல்லாம் எப்படி வளக்குறாங்க...” என்றவன்
“நானும் பார்த்துட்டு தானே இருக்கேன் நீ நீயே ஒன்னும் இவனை வைக்கலை..” என்றும் சொல்ல, தங்கம்மைக்கு ‘ஐயோ..’ என்று இருந்தது.
சிறிது நேரத்திற்கு முன் தான் அவனிடம் கெஞ்சாத குறையாய் சொன்னாள் “இதைப் பத்தி எதுவும் பேசாதீங்க..” என்று ..
----------------------------------------------------------
“நான் அவ்வளோ சொல்லியும் நீங்க ஏங்க இப்படி பட்டுன்னு பேசிட்டீங்க..” என்று தங்கம்மை கேட்க,
“நான் தப்பா எதுவும் கேட்கலை.. சிரமம் கஷ்டம்னு சொல்றா ??!! அப்படி எதுவும் இல்லைதானே.. எல்லாத்தையும் நீதான் செய்ற.. பின்ன எதுக்கு இந்த பேச்சு..” என ,
“இப்போ என்ன சொன்னா சொல்லிட்டு போகட்டுமே..” என்று தங்கம்மையும் சொல்ல,
தீனாவோ அவளை முறைத்தவன் “நீ புரிஞ்சு தான் பேசுறியா இல்லையா தங்கம்மை..” என்று அதட்ட,
“எனக்கு எதுவும் புரியவேணாம்.. என்னால உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வேணாம் அவ்வளோதான்..” என்று தங்கம்மை சொல்ல,
“உன்னாலன்னு யார் சொன்னா..??!!” என்று தீனா முறுக்கிக்கொண்டு நிற்கவும் இப்படி பேசி பேசி இவர்கள் இருவருக்கும் தான் சண்டையானது.