சூப்பர். கனவு கை சேரும். வாழ்த்துக்கள் பரணி. குமரன் க்கு அது பவி என்று தெரியல நம்புற மாதிரி இல்லை. என்ன செஞ்சான் கல்லூரி ல
ஹஹஹ...நம்பலாம் துர்கா..
ஏன்னா சமீபத்தில் எனக்கு இப்படி அல்ல கொஞ்சம் வேறுவிதமாக ஓர் அனுபவம் கிடைத்தது.
நான் டூவீலரில் ஹெல்மெட் மாஸ்க் சகிதம் போகவேண்டிய ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்துட்டு இருந்தேன்.
எங்க ஊருக்கு திரும்பும் டர்னிங்கில் எனக்கு இடப்புறமாக நின்று கொண்டு என் ஹஸ்பண்ட் டோட ஃப்ரெண்ட்" யம்மா...கொஞ்சம் நில்லும்மா ன்னு என்னை நிறுத்தினார். அவருக்கு என்னை நல்லா தெரியும்...எந்த அளவுக்குன்னா உன்னோட மனைவி பைக் ல வேகமா போறா கொஞ்சம் மெதுவா போச்சொல்லுன்னு என்னை என் கணவனிடம் போட்டு கொடுக்கும் அளவுக்கு தெரியும்.
நானும் தெரிந்த மனிதர் தானே என்று நினைத்த படி நிற்க அவர்பேசவேண்டிய விசயத்தை சடசடன்னு பேச ஆரம்பித்தார்.
என்னவென்றால் எனக்கு அவர் பேசியது எதுவுமே புரியவில்லை. நான் திருதிருவென்று முழிக்க அப்போதான் அந்த அண்ணன் அவர் சந்திக்க வேண்டிய நபரே நானில்லை என்று உணர்ந்தார் போலும். ஒருஅசட்டு சிரிப்போடு அவர் யார் என்று என்னை நினைத்தாரோ அவர் பெயரைச்சொல்லி அவங்கன்னு உன்னை நிறுத்திட்டேன் நீ போம்மா..நீ போம்மா என்று வேகவேகமாக சொன்னார். நானும் சிரித்தபடியே நகர்ந்து விட்டேன்.
இந்த மனுஷனாவது என்னுடைய front view பார்த்தாரு. ஆனால் நம்ம குமரன்க்கு தெரிந்தது back side மட்டுமே. அதனால இப்படி யும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கொஞ்சமே கொஞ்சமாவது நம்பு செல்லம்.