நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே
முகிலிழுத்துக் கண் மூடுமே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே... ஊஞ்சலே...
குங்குமம் ஏன் சூடினேன்
கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாந்தேடத்தான்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே... ஊஞ்சலே...