வணக்கம்
அடுத்த கதையுடன் வந்துட்டேன் டியர்ஸ்... என்னவன் மற்றும் கள்வனே கள்வனே கதைக்கு கொடுத்த ஆதரவு போலவே இதற்கும் உங்களின் ஆதரவு கிட்டும் என்ற அவாவுடன் அடுத்த கதைக்கான சிறிய டீசர் இதோ...
அவனது முகம் அந்த நாளிற்கே உண்டான பூரிப்புடன் இருக்க, அவனருகில் இருந்தவளின் முகம் அதற்கு மாறாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு ஏனோதானோவென இருந்தது.
உலகம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இந்த நூற்றாண்டிலும் பெண்களின் ஆசைகளை அடக்கி, அவர்களின் விருப்பை மறுத்து பல விஷயங்கள் நடேந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியான ஒரு அடக்குமுறையில் அடங்கி, தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக அமர்ந்திருப்பவளின் குமறளுக்கு கொஞ்சம் செவி சாய்த்திருக்கலாம். ஆனால் எங்கே...
ஒருமுறை அடிபட்டு விழுந்திருந்தாலும் பெற்றவர் தன் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருக்க, பெற்றவளும் மகளும் அடங்கித்தான் போகினர்.
"கொஞ்சம் சிரியேன். ஏன் எப்போதும் உர்ருன்னு இருக்க?" என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க, அவனை கண்டுகொண்டாளில்லை... பற்களை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"இன்னுமா உன்னோட அதே பிடிவாதத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்க?" என்று மீண்டும் அவன் கேட்க,
"பிடிவாதம்னு நீங்க நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது."
"நீ பண்றதுக்கு பேர் வேற என்னவாம்?"
"நீங்க செய்றதுக்கு பேர் என்னனு உங்களுக்கு தெரியுமா முதல்ல?"
"நான் கல்யாணாம் தாண்டி செய்துக்குறேன்.... வேற எதுவும் தப்பா செய்யலையே..."
"அதை எப்படி செய்றீங்க?" காட்டமாய் ஒலித்தது அவளது கேள்வியான பதில்.
"என்னை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா நானே விலகி போயிருப்பேன். ஆனால் நீ தேவையில்லாததை பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருக்க... உனக்கும் என்னை பிடிச்சிருக்கு, எனக்கும் விருப்பம் தான். அப்புறம் ஏன் நான் இதை நிறுத்தனும்?"
"கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வாயை மூடுங்க" பின்னிருந்து குரல் ஒலிக்க, முன்னே வேதங்கள் ஓதப்பட பேச்சுக்கள் தடைபட்டு காரியங்கள் வேகமாய் நிகழ்ந்தேற, சற்று நேரத்திலேயே திருமதி ஆனாள் அவள்...
யார் தச்சன்? யார் திருமகள்? என்ற கேள்விக்கான பயணம் அடுத்த வாரம் முதல்...
அடுத்த கதையுடன் வந்துட்டேன் டியர்ஸ்... என்னவன் மற்றும் கள்வனே கள்வனே கதைக்கு கொடுத்த ஆதரவு போலவே இதற்கும் உங்களின் ஆதரவு கிட்டும் என்ற அவாவுடன் அடுத்த கதைக்கான சிறிய டீசர் இதோ...
அவனது முகம் அந்த நாளிற்கே உண்டான பூரிப்புடன் இருக்க, அவனருகில் இருந்தவளின் முகம் அதற்கு மாறாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு ஏனோதானோவென இருந்தது.
உலகம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இந்த நூற்றாண்டிலும் பெண்களின் ஆசைகளை அடக்கி, அவர்களின் விருப்பை மறுத்து பல விஷயங்கள் நடேந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியான ஒரு அடக்குமுறையில் அடங்கி, தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக அமர்ந்திருப்பவளின் குமறளுக்கு கொஞ்சம் செவி சாய்த்திருக்கலாம். ஆனால் எங்கே...
ஒருமுறை அடிபட்டு விழுந்திருந்தாலும் பெற்றவர் தன் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருக்க, பெற்றவளும் மகளும் அடங்கித்தான் போகினர்.
"கொஞ்சம் சிரியேன். ஏன் எப்போதும் உர்ருன்னு இருக்க?" என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க, அவனை கண்டுகொண்டாளில்லை... பற்களை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"இன்னுமா உன்னோட அதே பிடிவாதத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்க?" என்று மீண்டும் அவன் கேட்க,
"பிடிவாதம்னு நீங்க நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது."
"நீ பண்றதுக்கு பேர் வேற என்னவாம்?"
"நீங்க செய்றதுக்கு பேர் என்னனு உங்களுக்கு தெரியுமா முதல்ல?"
"நான் கல்யாணாம் தாண்டி செய்துக்குறேன்.... வேற எதுவும் தப்பா செய்யலையே..."
"அதை எப்படி செய்றீங்க?" காட்டமாய் ஒலித்தது அவளது கேள்வியான பதில்.
"என்னை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா நானே விலகி போயிருப்பேன். ஆனால் நீ தேவையில்லாததை பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருக்க... உனக்கும் என்னை பிடிச்சிருக்கு, எனக்கும் விருப்பம் தான். அப்புறம் ஏன் நான் இதை நிறுத்தனும்?"
"கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வாயை மூடுங்க" பின்னிருந்து குரல் ஒலிக்க, முன்னே வேதங்கள் ஓதப்பட பேச்சுக்கள் தடைபட்டு காரியங்கள் வேகமாய் நிகழ்ந்தேற, சற்று நேரத்திலேயே திருமதி ஆனாள் அவள்...
யார் தச்சன்? யார் திருமகள்? என்ற கேள்விக்கான பயணம் அடுத்த வாரம் முதல்...