பொண்ணை காணவில்லை என்று ஆரம்பித்த கோபம்.....
யாரும் போன் பண்ணி சொல்லவில்லை..... அவன் மேல் அக்கறை இருந்தால் துளசி சொல்லிருக்கலாமேன்னு நினைத்திருப்பானோ????
பேத்தியின் மீது கொண்ட பாசத்தால் அப்பா அவனை சத்தம் போடுவது.....
பொண்டாட்டி பிள்ளை மேல் அக்கறை இல்லைனு அப்பா சொல்வது.....
கணவனை இத்தனை பேர் கேள்வி கேட்பது..... அது பிடிக்காவிட்டாலும் மௌனமாக கேட்டுக்கொண்டே இருப்பது.....
அவனுக்கு பிடிச்சு தானே கட்டி வைத்திருக்கணும்னு சித்தப்பா சொல்றது....
எல்லோர் முன்னாடியும் தன் திருமணம் விமர்சிக்கப்படுவதை நினைத்து துளசி அழுவது.....
இன்னும் மருமகள் திரு பொண்டாட்டி..... இப்படி சொல்வதை விட்டு வேலைக்காரன் மகள்னு சொல்றது....
இப்படி எத்தனையோ காரணம் திருவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றாலும் மனைவியின் மௌனம் தான் அவன் கோபம் கரை கடக்க செய்கிறதோ???? யார் என்ன சொன்னாலும் பதில்
பேசாதது.....
வள்ளியின் கேள்விக்கு வெங்கி பதில் சொன்னதும் துளசி அவகிட்டேயே கேட்டுக்கோ என்று சொல்வதும் கூட இருக்கலாம்...... அதற்கும் அம்மா வசை பாடுவது......
என்ன இருந்தாலும் உன் துணை இல்லாமல் பேசினால் அவள் பாடு உன் ஒரு அப்புவை விட அதிகமாகத்தான் இருக்கும்..... உனக்கு 13 வருடம் கடந்தும் அப்பாவின் குணத்தையே மாற்றும் ஒரு பெண் குழந்தை வந்து 12 வருடம் ஆன பின்னும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லையே???
Businessஐ மட்டும் கட்டி மேய்க்கும் உனக்கே இவ்வளவு கோபம் என்றால் பேச்சால் உன்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு போன உன் வீட்டாரிடம் அவள் எத்தனை பேச்சு கேட்டிருப்பாள்.....
தப்பு செய்தால் அடிக்கத்தான் செய்வங்கன்னு பொண்ணு கிட்ட சொன்னாயே...... துளசி உன்னை கட்டி கொண்ட தப்புக்கு அடித்துவிட்டாயா????
பொண்டாட்டி மறக்கலாம்..... மன்னிக்கலாம்..... ஆனால் உன் பெண்?!????