Manimegalai
Well-Known Member
எங்க ஊர்ல எல்லாம்காலையில் 5 மணிக்கு நாம அலாரமெல்லாம் வைக்க வேண்டாம்.
கோவிலில் பாட்டை போட்டே நம்மை எழுப்பி விட்டுடுவாங்க. அதே போல சாயங்காலம் 6 மணியானா டாண்னு பாட்டு உச்சஸ்தாயில பாட ஆரம்பித்து விடும்.அதுவும் திருவிழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம்.
அது தேர்வு நேரமாக இருந்தால் படிக்கிற பிள்ளைகள் பாவம். இப்போ கோவில்களில் ஒலிபெருக்கி உபயோகப்படுத்த கூடாது speakers தான் use பண்ண வேண்டுமென்று கோர்ட் உத்தரவே போட்டு இருக்கிறது.கூடவே இரவு 10 மணியோட பாடலை ஆஃப் பண்ணிடனும் என்ற உத்தரவும் இப்போ நடைமுறையில் இருக்கிறது.
ரூல்ஸா அப்படின்னா என்ன கேட்பாங்க...
பாட்டு போட்டு அமர்களம் பண்ணிடுவாங்க..