ஆஹா!! எத்தனை அழகான, அருமையான, ஆழமான விமர்சனம் அண்ணா.... மிக நுணுக்கமாய் ரசித்துப் படித்திருக்கிறீர்கள்...
தங்களின் வேலைப் பளுவிற்கு இடையில் எங்கள் கதைகளை படித்து, அதற்கு மிக அற்புதமாக தங்களின் கருத்துகளையும் பதிவதற்காக தங்களுக்குத் தலைவணங்குகிறேன் அண்ணா...
என்னதான் நீங்கள் நிறைகள் மட்டுமே எடுத்துக் கூறினாலும் என் கதைகளில் சில குறைகளும் இருக்கிறது அண்ணா...
ஆன்லைனில் எழுதிய முதல் கதை அண்ணா... அப்போது ஒரு ஆன்லைனில் ஒரு நட்புக்கள் கூட கிடையாது!
கருத்துக்களை கதையில் அள்ளிக் கொட்டிவிட்டேன் சிலர் தெறித்து ஓடியே விட்டார்கள் தெரியுமா?! ஹாஹா
அதிலும் என் கதைகளில் சினிமா எபெக்ட் வந்துவிடுகிறது! பள்ளிப் பருவத்தில் புத்தகங்கள் படித்ததோடு சரி அதன் பிறகு படிக்கும் அளவிற்கு வாழ்வியல் சூழ்நிலை இல்லை! இதோ பல வருடத்திற்குப் பின் இப்போதுதான் மீண்டும் கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறேன்! அதிலும் சிறுவயதில் படித்தது போல் படிப்பதற்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை!
அதிகம் வீட்டுத் தொலைக்காட்சியில் கண்டு களிப்பது சினிமாப் படங்களே... அதன் தாக்கம் இன்னும் மாறவில்லை! இப்போது சில வருடமாக படம் பார்ப்பதும் குறைந்துவிட்டதுதான்!
ஆனாலும் அதன் தாக்கம் சற்று என் நாவலில் பிரதிபலிக்கிறது என்றுதான் நினைக்கிறேன்! மாற்றிக் கொள்ளவும் முயல்கிறேன் ஆனாலும்...
தங்கள் விமர்சனம் என் எழுத்தை மேலும் மெருகூட்டும் என்று நம்புகிறேன்... மிக்க மிக்க நன்றிங்க அண்ணா...