அருமையான பதிவு மல்லி
.ரவிக்கு சந்தோஷ் மீது நம்பிக்கை இருந்தாலும்,சீதா, கேசவனின் நடத்தையை வைத்து,அப்பாவை போல பையன் இருந்தால் என கூறி சந்தோஷ்க்கு பெண் கொடுக்க மறுப்பார் என நினைக்கிறான்
.
நீங்க மட்டும் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணலாம்,நாங்க பொண்ணு கேட்டா கொடுக்க
மாட்டாங்களா,எப்படி அத்தை பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்க என்ன நடக்கும்னு பார்க்கறேன்னு ஷர்மி,கௌசிகிட்ட ஓகே சொல்ல சொல்லிட்டா
.
ஷர்மியின் அலட்சிய பார்வையும்,வேலை செய்பவன் தானே என்ற எண்ணமும் ரவியை கோபப்படுத்தியது என்றால்
,ரவி கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது ஷர்மியின் மனதில் வடுவாகி விட்டது
.
ஷர்மிக்கு ரவியை பிரிந்து இருக்க முடியாது என நினைக்கும் அளவு பிரியம் இருந்தாலும், ரவி தன்னை தேடுவதில்லை என ஷர்மி நினைப்பது போல நடந்து கொள்வதும் ஒரு காரணம்
.
இருவர் வாயும் அடங்காதவரை,இவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என எப்போது தெரிந்து கொள்வார்களோ
.
சொந்தமாக தொழில் என்றானதும்,வாடகை வீட்டை விட்டு சொந்தவீடு மனைவி பெயரில் வாங்க ரவி நினைக்க,எப்போ வேணா என்னை வெளியே போக சொல்லலாம்,இதில் நான் சொல்ல என்ன இருக்கு என்றவளிடம் ரவி சண்டையிடவும் இல்லை,சமாதானம் செய்யவும் நினைக்கவில்லை