மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்
விசாலியின் அம்மாவை வெற்றிலை பாக்கு வைச்சு யாரு கூப்பிட்டாங்க?
இப்போ சந்தோஷுக்கு பெண் பார்க்க சொல்லி இந்த மூதேவி விசாலியின் மூதேவி அம்மாவிடம் யாரு கேட்டாங்க?
திறந்த வீட்டில் ஏதோ நுழைந்த மாதிரி வீட்டுக்குள் வந்து தேவையில்லாமல் குடும்பத்தில் சண்டை மூட்டி விட்டுட்டு போகுது
சாகிற காலத்துல சங்கரா சங்கரான்னு இல்லாமல் காலம் போன காலத்துல அறிவுகெட்ட கேசவன் செஞ்ச வேலையாலே ஷர்மிக்கு எப்போவுமே கஷ்டம்தான்
இவனெல்லாம் ஒரு அப்பன்தானா?
இந்த விசாலிக்கும் அறிவே இல்லை
எதுக்கு அம்மா நொம்மாளை இங்கே கூட்டிட்டு வரணும்?
ஷர்மியை இவளோட அம்மா நொம்மா பார்க்க வரலைன்னு யாரு அழுதா?
இதிலே ஹாஸ்பிடலுக்கே வரலைன்னு இந்த மூதேவிக்கு குறையாம்
ரவீந்திரனும் ஷர்மிளாவும் நல்லா கொடுத்து கட்டினாங்க
ஆனாலும் மகனை இறக்கிப் பேசி சீதா சொன்னது தப்பு
குடிகாரன் பெண் பித்தன் இன்னும் என்னென்னவோ அயோக்கியத்தனம் செஞ்சாலும் எந்த தாயும் பெற்ற மகனை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள்
இவள் யாரு?
ஆப்டர் ஆல் சம்பந்தி கேசவனின் இரண்டாவது மாமியார்
அவளிடம் போய் மகனுக்கு கேசவன் பெண் கொடுத்ததே பெரிது மகளை சந்தோஷுக்கு கல்யாணம் பண்ண மாட்டார்ன்னு அறிவுகெட்ட முண்டம் சீதா சொல்லலாமா?
இந்த மாதிரி பெற்ற மகனையே மட்டமா பேசும் அம்மாவை நான் எங்கேயும் பார்த்ததில்லை, மல்லிகா டியர்
இனி ரவி அம்மான்னு கூப்பிட்டு ஒத்த வார்த்தை பேசுவானா?
ஏற்கனவே பொண்டாட்டியிடம் வாசன் பேசுறதில்லை
இப்போ இந்த விஷயத்தாலே இன்னும் என்ன ஆகுமோ?
ஏற்கனவே மாமியார் மாமனார் சீதாவுக்கு நல்லா கொடுத்திருக்காங்க
இனி சீதாவின் கதி அதோ கதிதான்
ஆனால் அறிவு இல்லாத தன் மகன் தன் குடும்பம்ன்னு பாசம் இல்லாத சீதாவுக்கு நல்ல தண்டனை கிடைக்கணும்
இப்போத்தான் ஷர்மிளாவின் உடம்பு கொஞ்சம் சரியாச்சு
இந்த பீடைங்க செஞ்சு வைச்ச ஏழரையாலே ரவிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் திரும்பவும் முட்டிக்கப் போகுதா?