ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சொன்னது போலவே இந்த நாளில் ஒரு புதிய கதையோடு சந்திக்க வந்துவிட்டேன். முந்தைய கதைகளை போல தாமதமின்றி பதிவுகளை தருவேனென்று நம்புகிறேன். நீங்களும் நம்பனும், நம்பிதான் ஆகனும்.
( நம்பிக்கை தான் வாழ்க்கை )
மின்னல் அதனின் மகனோ
அதிரூபன் – வேண்டாம் என்று மொத்த குடும்பமும் வெறுக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் நாயகன்.
துவாரகா – தானும் தன் குடும்பமும் இருக்கும் சுவடு தெரியாமல் அழித்துவிட துடிக்கும் குடும்பத்திலேயே மருமகளாய் செல்லும் நிலையில் நாயகி.
அகிலா – எப்போது என்ன நினைப்பார்? என்ன செய்வார்? என பிரித்தறிய முடியாத புதிர்.
இருவரின் வேறுபட்ட குடும்ப சூழ்நிலையில் எப்படி இருவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது தான் கதைக்களம்.
வாரம் இரு பதிவுகள் என நாளை முதல் பதிவோடு வருகிறேன்.
முந்தைய கதைகளுக்கு கொடுத்ததை போல இக்கதைக்கும் உங்களது ஆதரவினையும், உற்சாகத்தையும் எனக்கு தருவீர்கள் என நம்புகிறேன்.
நாளை முதல் மின்னல் வலம் வரும்